ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

லாட்டரி ஊழல் பணத்தில்
மார்ட்டின் தன் மகன் டைசன் மூலமாக
ரூ 50 லட்சம் திருமுருகனுக்கு நன்கொடை!
--------------------------------------------------------------------------
லாட்டரி ஊழல் பேர்வழி மார்ட்டின் கோடிக்கணக்கில்
மக்களின் பணத்தைச் சுருட்டியவர். இதன் மூலம்
கோடீஸ்வரர் ஆனவர். பல்வேறு இடங்களில் நிலங்களை
வளைத்துப் போட்டிருப்பவர்.

இவரின் மகன் மேதகு டைசன் அவர்கள் ஒரு கணினி
நிறுவனத்தின் அதிபர். Tamilsnow.com என்பது மேதகு
டைசனின் நிறுவனம். இவர் மே 17 இயக்கத்தில்
பணியாற்றி, பின்னர் திருமுருகனின் ஆலோசனையின்
பேரில் தமிழர் விடியல் என்ற பெயரில் ஒரு பெயர்ப்பலகை
அமைப்பை நடத்தி வருபவர். இவரிடம் பணமும்
காசும் பொங்கி வழிவது இயற்கையே.

மே 17 இயக்கத்துக்கு ஒரு பதிப்பகம் வேண்டும் என்றும்
ஒரு தொலைகாட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும்
திருமுருகன் பணம் திரட்ட முற்பட்டார். மார்ட்டின்
மகனான டைசன் ரூ 50 லட்சம் பணத்தை
திருமுருகனுக்கு நன்கொடையாக (கடனாக அல்ல)
அளிக்க முன்வந்தார்.

இந்த உண்மையை திருமுருகனின் முன்னாள் கூட்டாளி
திரு உமர் அம்பலப் படுத்துகிறார். திரு உமர் எழுதிய
400  பக்கங்களுக்கு மேற்பட்ட ஆவணத்தில் இந்த
உண்மை கூறப் பட்டுள்ளது. அதைப் படியுங்கள்.
(பார்க்க: மேற்படி ஆவணம், பக்கம்-278, பத்தி-623)

மே 17 இயக்கம் என்பது ஒரு கோடீஸ்வர இயக்கம்.
இதன் தலைவர்களை கோடீஸ்வரர் ஆக்குவதே இந்த
இயக்கத்தின் லட்சியம். இங்கு பெரும் கோடீஸ்வர்களே
தலைமைக்கு வர முடியும். இது போன்ற ஒரு
இயக்கம், சதா சர்வ காலமும் வெளிநாட்டுப் பயணமும்,
உயர்ந்த மது வகைகளும், நட்சத்திர ஓட்டல்களில்
வாசம் செய்வதுமான பணக்கார இயக்கம்
இந்தியாவிலேயே மே 17 இயக்கம்தான்.

சென்னை பாரிமுனை குறளகத்தில் உள்ள தொழிலாளர்
நல அதிகாரியின் அலுவலகத்திற்கு என்றாவது சென்று
இருக்கிறீர்களா? தொழில் தகராறுச் சட்டத்தின் 2C, 2D
பிரிவுகளின் கீழ் தொழில்தாவா (industrial dispute) ஏற்படுத்தி
வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு
ஆதரவாக வாதாட ஒரு தொழிற்சங்கவாதியாக
மிகப் பலமுறை அங்கு சென்று இருக்கிறேன். இது
நீதிமன்றம் அல்ல; சமரச மன்றம். இங்குள்ள
அதிகாரியான Labour Conciliator நிர்வாகத்தரப்புக்கும்
தொழிலாளர் தரப்புக்கும் இடையே சமரசம்
செய்து வைப்பவர்.

அன்றாடங்காய்ச்சிகளான ஏழைத் தொழிலாளர்கள்
இங்குள்ள நீண்ட தாழ்வாரத்தில் காத்துக் கிடப்பார்கள்.
அவர்களின் சார்பாக வாதாடும் AITUC, CITU, AICCTU
போன்ற கம்யூனிஸ்ட் சங்கங்களின் முழுநேர
ஊழியர்களும் கூடவே காத்துக் கிடப்பார்கள்.

பொன்னேரி, திருவள்ளூர் போன்ற ஊர்களில் இருந்து
ஒரு வாய்தாவுக்காக சென்னைக்கு வந்து போக
அன்று குறைந்தது ரூ 500 செலவாகும். குறைந்த
சம்பளம் என்பதால் ஓவர்டைம் செய்து (8 மணி நேரம்
டியூட்டி+ 4 அல்லது 6 மணி நேரம் OT) வருமானம்
பெறும்  அத்துக்கூலிகளான அந்த ஏழைத்
தொழிலாளர்கள் ஒவ்வொரு வாய்தாவுக்கும்
ரூ 500 வீதம் செலவழிக்க முடியாது. கம்யூனிஸ்ட்
சங்கங்களில் முழுநேர ஊழியர்களுக்கு போதிய
சம்பளம் கொடுப்பது இல்லை. எனவே  வழக்காட வந்த
தொழிலாளியே முழுநேர ஊழியரின் சாப்பாடு
மற்றும் போக்குவரத்துக்கு செலவு செய்ய வேண்டும்.

நான் அரசு வேலையில் இருப்பதாலும், வீட்டில் இருந்து
சாப்பாடு கொண்டு வந்து விடுவதாலும் (இல்லாவிடினும்
அலுவலக கேன்டீனில் ரூ 5க்கு மதிய உணவு கிடைக்கும்)
அலுவலக நண்பர்கள் யாராக இருந்தாலும் தங்களின்
ஸ்கூட்டரில் என்னை குறளகத்தில் இறக்கி விட்டு
விடுவார்கள் என்பதாலும், இந்த ஏழைத்
தொழிலாளர்களுக்கு என்னால் செலவு எதுவும் கிடையாது.

தோழர்களே, திருமுருகன் நடத்தும் மே 17
மேட்டுக்குடி இயக்கத்தையும் எங்களைப்போன்ற
தொழிற்சங்கத்தினர் நடத்தும் பாட்டாளி வர்க்க
இயக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.உண்மை புலனாகும்.

திருமுருகனை எதிர்த்து நிற்பது எளிதல்ல. அது சர்வ
வல்லமை வாய்ந்த இந்திய உளவுத்துறையை
எதிர்த்து நிற்பதாகும். திரு உமர் அவர்களைக் கொல்ல
நடந்த முயற்சி பற்றியும் அவர் எழுதியுள்ளார்.
வாசகர்கள் அவரின் 400+ பக்க ஆவணத்தைப்
படிப்பது நல்லது. இதற்கு திருமுருகன் தரப்பில்
இருந்து இன்று வரை பதில் இல்லை. இதுவே எது
உண்மை என்பதை உணர்த்தும்.
*******************************************************
பின்குறிப்பு: திருமுருகனின் குட்டி முதலாளித்துவ எடுபிடிகள் நம்மிடம் வாலாட்டினர். அவர்களை மன்னித்தேன். என்றாலும்
தொடர்ந்து மன்னிக்கும் உத்தேசம் இல்லை. சிறைக்கு
அனுப்பவே உத்தேசம். ஜாக்கிரதை!
***********************************************************



     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக