வியாழன், 21 செப்டம்பர், 2017

பாஜக பிரமுகரின் மகனை உளவு அமைப்பு ரா
குண்டர் சட்டத்தில் கைது செய்தது ஏன்?
திருமுருகன் காந்தி அம்பலப் படுகிறார்!
---------------------------------------------------------------------------------
லாட்டரி அதிபர் மார்ட்டின் என்ற ஊழல்
பேர்வழியை உங்களுக்கு நினைவு இருக்கிறதா?
இவரின் மனைவி பாஜகவில் ஒரு முக்கிய பிரமுகர்.

இந்தத் தம்பதியரின் மகன்தான் டைசன். எந்த டைசன்?
NGO புரட்சியாளர் திருமுருகன் காந்தியுடன் குண்டர்
சட்டத்தில் கைதாகி தற்போது விடுதலையாகி
வெளியே வந்துள்ளாரே அதே டைசன்தான்.

பாஜக பிரமுகரின் மகனை குண்டர் சட்டத்தில் கைது
செய்ய வேண்டிய அவசியம் மத்திய மாநில அரசுகளுக்கு
என்ன வந்தது? ஒன்றும் இல்லை.

அப்பன் ஊழல் பேர்வழி! ஊரை அடித்து உலையில்
போடுகிறவர்? மகன் புரட்சியாளர்???? என்ன உங்களின்
லாஜிக்? திருமுருகன்-டைசன் கைது ரா அமைப்பு
நடத்திய நாடகம் என்று இன்னுமா உங்களுக்குத்
புரியவில்லை? தங்களின் கையாள்களான
திருமுருகன் போன்றவர்களுக்கு ஒரு போராளி
பிம்பத்தை உருவாக்கித் தருவதற்கே இந்தக்
கைது நாடகம்!

இந்திய உளவு அமைப்பான ரா (RAW) உருவாக்கிய
NGO போராளியே திருமுருகன் காந்தி. இந்திய அரசின்
மற்றும் சிங்கள ராஜபக்சே மைத்திரிபால  அரசின்
ஈழத் கொள்கையே திருமுருகனின் கொள்கை!
இதை அடுத்தடுத்த கட்டுரைகளில் அம்பலப்
படுத்துவேன்.

டைசன் ஒரு போராளி!!! திருமுருகன் ஒரு போராளி!!!
இப்படிக் கருதிக் கொண்டு இவர்களின் பின்னால்
செல்லும் கோமாளிகள் மற்றும் கூமுட்டைகள்
உண்மையை உணரும் நாள் வெகுதூரத்தில் இல்லை!
*****************************************************************


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக