திங்கள், 17 ஆகஸ்ட், 2020

2ஜி ஊழல் வழக்கு இடைவிடாத விசாரணை!
------------------------------------------------------------------
கனிமொழி மற்றும் பலர் மீதான 2ஜி ஊழல் வழக்கை
வாரத்தில் மூன்று நாட்கள் இடைவிடாமல் விசாரிக்க
அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில்
CBI மனுச் செய்தது.CBIயின் கோரிக்கையை
ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம்
இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

முன்பு மன்மோகன்சிங் ஆட்சியின்போது, முக்கிய
ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல்
இருந்ததால், கனிமொழி ஆ ராசா ஆகியோர்
விடுதல் செய்யப் பட்டனர்.   லை

இப்போது ஏகப்பட்ட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்
பட்டுள்ளன. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட
சொத்து விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே குறைந்தது, முதல் வழக்கில் அவருக்கு
10 வருஷமும் இவருக்கு 7 வருஷமும் கிடைக்கும்
என்றும் இரண்டாவது வழக்கில் இருவருக்கும் தலா
7 வருஷம் கிடைக்கும் என்றும் சட்ட நிபுணர்கள்
கருதுகின்றனர்.
==============================================

   
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக