வியாழன், 6 ஆகஸ்ட், 2020

1) கர்நாடகத்தில் மும்மொழிக் கொள்கை பல
பத்தாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று
மொழிகள் மட்டுமே. இங்கு சமஸ்கிருதத்திற்கு 
ஏது இடம்?

2) ஆந்திராவில் மும்மொழிக்கொள்கை பல
பத்தாண்டுகளாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்பவையே அங்குள்ள
மும்மொழிகள். இதில் சமஸ்கிருதத்துக்கு ஏது இடம்?

3) இந்தி பேசும் மாநிலங்களில் சமஸ்கிருதம்
இடம் பெற வாய்ப்பு உண்டு. உதாரணமாக,
உத்திரப் பிரதேசத்தில் பின்வருமாறு அமையலாம்.
இந்தி, ஆங்கிலம், உருது (option-1) 
இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் (option-2)
  
நியூட்டன் அறிவியல் மன்றம்

இனக்குழுச் சமூக காலத்திலும், பின்னர்
நிலவுடைமைச் சமூக காலத்திலும்  


அவர்கள் போலிக் கம்யூனிஸ்டுகள்.
அவர்கள் (CPI, CPM) போலிக் கம்யூனிஸ்டுகள் என்று
மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போனவர்கள்.
அவர்களுக்கும் எமக்கும் ஸ்நானப் பிராப்தி கிடையாது.


இதெல்லாம் இங்கிலீஷ் தெரிந்தவர்களுக்கு
மட்டும் புரிந்த விஷயம். புழுவினும் இழிந்த
ஈனத்  தற்குறிப் பயல்களுக்கு இதெல்லாம் எங்கே புரியும்?

  
 எந்த ஒரு நவீன இந்திய மொழியாகவும் இருக்கலாம்.
Modern Indian language = தெலுங்கு கன்னடம், வங்காளி,
மலையாளம், ஒரியா, இந்தி, குஜராத்தி, மராத்தி இப்படி
எதுவாயினும். ஆனால் சம்ஸ்கிருதம் இருக்க முடியாது.
ஏனெனில் அது ANCIENT LANGUAGE (Classical)
and hence it is NOT modern.    


புணர்ச்சி விதிகள் என்பன தமிழ்ச் சொற்களின்
புணர்ச்சி பற்றிய விதிகள். ஐரோப்பிய மொழியான
ஆங்கிலத்திற்குப் பொருத்தும்போது, தற்போதைய
புணர்ச்சி விதிகள் 100 சதமும் பொருந்துவதில்லை.
எந்த அளவு பொருந்துகிறதோ அந்த அளவு வரை
ஏற்றுக் கொண்டு, பொருந்தாத இடங்களில்
விட்டு விடலாம்.

Road என்பது ஆங்கிலச் சொல். வேற்றுமை உருபுப்
புணர்ச்சியின்போது ரோடு + கு = ரோட்டுக்கு என்று
ஒற்று இரட்டித்துப் புணர்ந்தது. தமிழ்ச் சொற்களின்
புணர்ச்சி போன்றே அமைந்தது. அது போலவே
பொருந்தா இடமும் உண்டு.
   

மிகுதியும் வழக்கறிஞர்களைக் கொண்ட மக்கள்
அதிகாரம் போன்ற அமைப்புகள்


மகஇகவின் ரூ 100 கோடி ரியல் எஸ்டேட் ஊழல்!
கீற்று இணையதளத்தில் கட்டுரை!
------------------------------------------------------------------------
1) சிறிது காலத்துக்கு முன், மருதையனும் சில
தோழர்களும் கடசியில் இருந்து நீக்கப் பட்டதற்கு
காரணம், இந்த ரூ 100 கோடி ஊழலில் அவர்களுக்கான
பாங்காக் கேட்டதற்காகவே என்று இன்று
அம்பலமாகி உள்ளது.

2) மிகுதியும் வழக்கறிஞர்களைக் கொண்ட அமைப்பான
மக்கள் அதிகாரம் போன்றவை மிகவும் அடர்த்தியான
குட்டி முதலாளிய அமைப்புகள். அவ்வமைப்பின்
முக்கிய பொறுப்பில் இருக்கும் திரு ராஜு என்பவர்
ரூ 1 கோடிக்குச் சொத்து வாங்கினார் (எல்லாம் ஊழல்,
முறைகேடு செய்து வாங்கிய சொத்துத்தான்) என்ற
குற்றச் சாட்டு அவருடன் இணைந்து விருத்தாசலத்தில்
பணியாற்றிய தோழர்களால் கூறப்பட்டது.

3) கூடங்குளம் உதயகுமாரிடம் சென்று வழக்கு
நடத்தவும் வழக்கறிஞர்கள் விடுதிகளில் தங்கவும்
என நிறைய பணத்தை அபகரித்துச் சென்றுள்ளது
மக்கள் அதிகாரம் கோஷ்டி. இதைக் கண்டித்தும்
மனம் நொந்தும்  சுப உதயகுமார் எழுதிய கட்டுரை
இக்கயவர்களை அம்பலப் படுத்தியது.
-------------------------------------------------------------------   
சூரியன் என்பது பெருவழக்கு; மக்கள் வழக்கு;
தொன்மையானதும் கூட.
கதிரவன் என்பது செய்யுள் வழக்கு.
வழக்கும் செய்யுளும் என்னும் இவ்விரண்டில்
வழக்கிற்கே முதன்மை அளிக்கிறார் தொல்காப்பியர்.

காலங்காலமாக ஆகி வந்த சூரியன் என்ற சொல்லை
மாற்ற முயல்வது மக்களுக்கு எதிரான செயல்.
அது பாட்டாளி வர்க்கப் பண்பின்பாற்பட்டதன்று.
மாறாக குட்டி முதலாளியத் தீமையின்பாற்பட்டதாகும்.

காலங்காலமாக வணக்கம் என்ற சொல் பெருவழக்காக
இருந்து வந்திருக்கிறது. அது போல நீர், தண்ணீர்
என்னும் சொற்களும். செயற்கையாக இவற்றை
அகற்றிட அல்லது இவற்றோடு நமஸ்காரம், ஜலம்
என்னும் சொற்களையும் புழக்கத்தில் விட அக்காலத்தில்
முயற்சி நடந்தது. இப்படி எழுதுவது மணிப்பிரவாள நடை
என்றே அங்கீகாரம் பெற்று இருந்தது. நூல் எழுதுவோர்
இவ்வாறு மணிப்பிரவாள நடையில்தான்  எழுத வேண்டும்
என்று வற்புறுத்தல் நிலவியது.

ஆனால் இச்சொற்கள் பேச்சு வழக்கில் எடுபடவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது. தமிழர்கள் யாரும் நமஸ்காரம்,
ஜலம் என்ற சொற்களைப் பேச முற்படவில்லை.

எனவே மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தைத்
தொடங்கினார். அது உரிய பலனை அளித்தது.
இதற்குரிய பெருமை அடிகளையே சாரும்.

திராவிட இயக்கம் மணிப்பிரவாள நடையையே
பெரிதும் போற்றியும் பின்பற்றியும் வந்தது.
பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திமுக
தலைவர்களின் எழுத்துக்கள் இதற்குச் சான்று
கூறுகின்றன.

 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக