வியாழன், 12 நவம்பர், 2020

 குஷ்டரோகியின் கையில் உள்ள வெண்ணெயைத் 

தின்னும் லிபிபரேஷன் குழு! திபங்கர் பட்டாச்சார்யாவை    

சாரு மஜூம்தாரின் ஆவி மன்னிக்குமா?

-----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------------

இன்று லிபரேஷன் குழு என்று அறியப்படும் அமைப்பானது 

CPI ML கட்சியாக இருந்தது. தோழர் ஜாகர், வினோத் மிஸ்ரா 

ஆகியோருக்குப் பின், தற்போது திபங்கர் பட்டாச்சார்யா 

இக்குழுவின் பொதுச்செயலாளராக உள்ளார். 


ஒரு காலத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைபாடு 

இருந்தது. பின்னர் அது மாறி தேர்தலில் பங்கெடுப்பது 

என்ற நிலை வந்தது.


தமிழ்நாட்டில் சில கோமாளிப் பயல்கள் 

தேர்தல் பாதை திருடர் பாதை 

என்று சுவர்களை அசிங்கப் படுத்திக் கொண்டு

இருந்ததை நாம் அறிவோம். அந்தக் கோமாளிப் 

பயல்களை திமுகவின் பழனி மாணிக்கம் உள்ளிட்ட 

தலைவர்கள் விளக்கு வாங்கி விட்டனர்.


தற்போது பீகாரில் லிபரேஷன் குழுவானது 

லாலு காட்ச்சியுடன் கூட்டணி வைத்து 12 இடங்களில் 

வென்றுள்ளது. மக்களோடு மக்களாக இருந்து 

அயராது களப்பணி ஆற்றி வரும் கட்சி 

அணிகளுக்கு இந்த MLA பதவிகள் தேவையே.

அவற்றைக் கொண்டு மக்களுக்கு ஏதேனும் 

நிவாரணம் பெற்றுத் தர முடியும்.


அதே நேரத்தில் லிபரேஷன் குழுவின் தலைமையானது 

லாலுவுடன் கூட்டு வைத்து சட்ட மன்றப் பதவிகளைப் 

பெறுவது குஷ்டரோகியின் கையில் உள்ள வெண்ணெயை 

உண்பதற்குச் சமம் ஆகும்.


12 இடங்களுக்காக லாலுவின் வாரிசு அரசியலை,

நவீன வருணாசிரமமான குடும்ப அரசியலை,

லாலுவின் ஊழலை ஆதரிக்க வேண்டி இருக்கும்.

அடிக்கொருதரம் ராஞ்சி சிறையில் கம்பி எண்ணும் 

லாலு பிரசாத்தை ஆரஞ்சுப் பழம் வாங்கிக் கொண்டு

போய் சந்திக்க வேண்டும். இதுதான் இனிமேல் 

லிபரேஷன் குழுவின் வேலை.


இதைச் செய்யாவிட்டால் என்ன ஆகும்? லாலுவும் 

சரி தேஜஸ்வியும் சரி திபங்கர் பட்டாச்சார்யாவை 

டெல்லியில் போய் அடிப்பார்கள். ஆம் அவர்களின் 

பாஷை PHYSICAL VIOLENCEதான். 

--------------------------------------------------------------------------------- 

        


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக