வெள்ளி, 9 ஜூலை, 2021

பினராயி விஜயனின் முற்போக்கு பாசிசமும் 

போலி "மாரக்சிஸ்ட் லெனினிஸ்டு"களின் கள்ள மௌனமும்!

-------------------------------------------------------------------------- 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------------------------

பாசிசம் இரண்டு வகைப்படும். (ஜார்ஜ் டிமிட்ரோவ் என்னை 

மன்னிப்பாராக! ஆமென்!)

1) மார்க்சிஸ்டுகளின் (CPM) முற்போக்கு பாசிசம்.

2) காங்கிரஸ் பாஜகவின் பிற்போக்கு பாசிசம்.


பாசிசம் என்று மொட்டையாக எவரும் பேசினால் அவர் 

ஒரு தற்குறியே ஆவார். முற்போக்கு பாசிசமா, பிற்போக்கு 

பாசிசமா என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.   


இந்த இரண்டு வகை பாசிசத்துக்கும் என்ன வித்தியாசம்?

முற்போக்கு பாசிசம் இனிக்கும். எனவே அதை முற்போக்குப் 

பாயாசம் என்றும் சொல்லலாம். ஆனால் பிற்போக்குப் 

பாசிசம் கசக்கும். 


பாதிரியார் லூர்துசாமியும் பிற்போக்குப் பாசிசமும்!

--------------------------------------------------------------------------------

அண்மையில் இறந்துபோன, UAPA கைதியான, 84 வயதான 

கிறிஸ்துவப் பாதிரியார் ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி என்னும் 

ஸ்டேன் சாமி பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுவோம். இவர் 

பிற்போக்குப் பாசிசமான பாஜகவின் பாசிசத்தால் 

படுகொலை செய்யப்பட்டு விட்டார் என்கிறார்கள் 

இந்த நாட்டின் இடதுசாரிகள், முற்போக்குகள் ஆகியோர்.


பாதிரியார் ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி  (84 வயது)

சிறையிலோ போலீஸ் லாக்கப்பிலோ மரணம் அடையவில்லை.

மாறாக தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.


மும்பை நகரின் மிகச் சிறந்த மருத்துவமனையான,

மும்பையின் மேற்கு பந்த்ராவில் உள்ள மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல  நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். 


அந்த மருத்துவமனை கிறிஸ்துவ அமைப்பினர் நடத்தும் 

மருத்துவமனை. அதன் பெயர் HOLY FAMILY HOSPITAL 

(தொடர்புக்கு: 022-62670366). கிறிஸ்துவர்கள் நடத்தும் இந்த மருத்துவமனையில்தான் தனக்கு சிகிச்சை அளிக்க 

வேண்டும் என்று பாதிரியார் லூர்துசாமி கேட்டுக் கொண்டார். 

அதன்படியே அவர் விரும்பிய Holy Family மருத்துவமனையில்  

அவரை மஹாராஷ்டிரா அரசு சேர்த்தது. மருத்துவமனை நிர்வாகம் 

எவ்வளவுதான் உயர்ந்த சிகிச்சை அளித்த போதிலும், வயது 

மூப்பு காரணமாக 84 வயதுப் பெரியவரான பாதிரியார் 

லூர்துசாமி மரணம் அடைந்தார்.  


கேரளத்துக் காட்சிகள்!

------------------------------------

கேரளத்தில் ஒரு சிறை இருக்கிறது. விய்யூர் சிறை என்று அதற்குப் 

பெயர். திரிஷூரில் உள்ள சிறை இது. இதன் ஒரு பகுதி பாதாளச் 

சிறை ஆகும். அதிக பட்சமாக 300 பேரை மட்டுமே இச்சிறையில் 

அடைக்க முடியும். கட்டுக்காவல் மிகுந்த சிறை என்பதால் சிறிய 

சிறையாக இது கட்டப் பட்டது. கைதிகளை தனிமைச் சிறையில் 

அடைப்பதற்கு வசதியாக இச்சிறையில் நிறைய சிங்கிள் செல்கள் உள்ளன. உண்மையில் இது சிறை அல்ல. இது ஒரு சித்திரவதை 

முகாம் ஆகும்.


பினராயி விஜயனின் அரசு மாவோயிஸ்ட் கைதிகளை இந்தச் 

சிறையில்தான் அடைத்து சித்திரவதை செய்து வருகிறது.

இந்தச் சிறையின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால்,

உலகில் எங்கும் இல்லாதபடி, இந்தச் சிறையில் கக்கூஸ்களில்  

காமிரா வைக்கப் பட்டுள்ளது. கூடவே CCTVகளும் வைக்கப் 

பட்டுள்ளன.


வாசகர்களுக்காக உங்களுக்கு ரூபேஷ் என்பவரைப் பற்றித் 

தெரியுமா? தெரியாது. இவர் கேரளத்தின் மாவோயிஸ்ட் 

தலைவர். இவர் விய்யூர் சிறையில் அடைக்கப் பட்டு இருந்தபோது 

சீதாராம் யெச்சூரிக்கு 2020ல் கடிதம் எழுதி பினராயி விஜயன்

அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப் படுத்தினார்.

மனித உரிமை மீறல்களுக்காகவே கட்டப் பட்டது விய்யூர் 

சிறை. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் விய்யூர் சிறை 

போன்ற கொடுஞ்சிறை கிடையாது.  .

 

1) பாஜக ஆளும் மாநிலங்களிலோ அல்லது காங்கிரஸ் ஆளும் 

மாநிலங்களிலோ விய்யூர் சிறை போன்ற ஒரு பாதாளச் சிறை 

(underground prison) கிடையாது.


2) கக்கூஸ்களில் காமிராக்களையும் CCTVகளையும் விய்யூர் 

சிறையில் மார்க்சிஸ்ட் அரசு பொருத்தி உள்ளது. இந்தக் 

கொடுமை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கிடையாது.


3) மனித உரிமை மீறலுக்காகவே கட்டப்பட்ட விய்யூர் சிறை 

போன்ற ஒரு கொடிய சிறை இந்தியாவின் எந்த 

மாநிலத்திலாவது உண்டா? விய்யூர் சிறை என்பது

உண்மையில்  சிறை அல்ல. அது ஒரு சித்திரவதை முகாம் 

(concentration camp). இச்சிறை கட்டப்பட்டு சற்றேறக்குறைய  

10 ஆண்டுகள் ஆகியிருக்கும்; அவ்வளவுதான்.  


பாசிச பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப் 

பிரதேச மாநிலத்தில் விய்யூர் சிறை போன்ற ஒரு கொடிய 

வதை முகாம் உண்டா? 


பாஜகவின் யோகி ஆதித்த்யநாத் பாசிஸ்டு என்றால்,

பினராயி விஜயன் அவரை விட ஆயிரம் மடங்கு அதிகமான 

பாசிஸ்டு அல்லவா?


ஆனால் பினராயி விஜயனை பாசிஸ்ட்டு என்று கூற 

முடியாமல் தமிழகத்து மாவோயிஸ்டுகளின் வாய் 

குளறுவது ஏன்? மாவோயிஸ்டுகள் ஒவ்வொருவராக 

போலி என்கவுண்டரில் சுட்டுக் கொள்ளும் பினராயி 

விஜயனின் அரசை பாசிச அரசு என்று மாவோயிஸ்ட்டுகள் 

சொல்ல மறுப்பது ஏன்?


மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச் செண்டாலே 

என்பது போல, CPM பாசிஸ்டுகளை இங்குள்ள 

மாவோயிஸ்டுகள் மயிலிறகால் வருடிக் கொடுப்பது ஏன்?


UAPA சட்டத்தை இந்தியாவிலேயே அதிகமாகப் பயன்படுத்தும் 

மாநிலங்கள் இரண்டு. ஒன்று உபி. இன்னொன்று கேரளம்.

UAPA வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து,

முதலிடத்தில் உத்தரப் பிரதேசமும் இரண்டாம் இடத்தில் 

கேரளமும் உள்ளன. கேரளத்தில் மட்டும் பினராயி 

விஜயனின் ஆட்சிக் காலமான கடந்த ஐந்து ஆண்டுகளில் 

(2016-2021) அரசியல் சமூகச் செயல்பாட்டாளர்கள் 145 பேர் மீது

கொடிய சட்டம் UAPA பாய்ந்துள்ளது.


உபியில் கிரிமினல்கள் மீதுதான் UAPA சட்டம் பிரயோகிக்கப் 

பட்டுள்ளது. ஆனால் கேரளத்தில் அரசியல் 

செயல்பாட்டாளர்கள் சமூக ஆர்வலர்கள் மீதுதான் 

90 சதவீதம் UAPA வழக்குகள் பாய்ந்துள்ளன.


இந்த லட்சணத்தில் பாதிரியார் லூர்துசாமிக்காக நீலிக் 

கண்ணீர் வடிக்கிறது பாசிச மார்க்சிஸ்ட் கட்சி. மக்களை 

எவ்வளவு தூரம் ஏமாளி ஆக்குகிறது பாருங்கள்!


கேரளத்தில் UAPA வழக்கில் விசாரணைக் கைதியாகவே

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வதை பட்டுக் 

கொண்டிருக்கும் என் கே இப்ராஹிம் (N K Ibrahim) என்பவரைப் 

பற்றி உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?  தெரியாது.

இவர் விய்யூர் சிறையில் கொடுந்துன்பத்தை அனுபவித்துக் 

கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு 

இருக்கிறார்.  


இவர் கொடிய நீரழிவு நோயாளி மட்டுமல்ல; இதய நோயாளியும் 

ஆவார். நீரழிவு நோய் காரணமாக இவரின் நிறையப் பற்கள் 

விழுந்து விட்டன. 32 பற்களில் ஒன்றிரண்டு தவிர  மீதிப் 

பற்களை சுகர் காவு வாங்கி விட்டது. பல் இல்லாததால் 

இவரால்   முடியவில்லை. இதன் காரணமாக உடல் எடை 

பெரிதும் குறைந்து மெலிந்த தேகத்துடன் இருக்கிறார்.


இவர் இன்னமும் விசாரணைக் கைதியாகவே இருக்கிறார்.

இவரது வழக்கை பின்ராயி விஜயனின் அரசு உரிய 

காலத்தில் முடிக்காமல் ஆறு ஆண்டுக்கும் மேல் 

இழுத்தடிப்பது ஏன்? இது பாசிசத்தில் வராமல்  

பாயாசத்திலா வரும் போலி இடதுகளே?  

   

வயது முதிர்ந்து போய், 84 வயதில், தனியார் மருத்துமனையில்,

அதுவும் கிறிஸ்துவ மதவாதிகள் நடத்தும் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி

மருத்துவ மனையில் இறந்து போன பாதிரியார் லூர்துசாமிக்கு

உரத்த குரலில் ஒப்பாரி வைப்பவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின்

பாசிசத்துக்கு என் கே இப்ராஹிம் போன்றவர்களை உயிரோடு 

பலி கொடுப்பதைப் பற்றி கவலையே இல்லாமல் 

இருக்கிறார்கள் என்றால், அவர்கள் போலிகளே!

---------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

விய்யூர் சிறையைப் பற்றி முதன் முதலில் அம்பலப் படுத்துவது 

நான்தான். எந்த மாவோயிஸ்டோ, எந்த நக்சல்பாரியோ,

எந்த இடதோ இதைச் செய்யவில்லை. இதனால் 360 

டிகிரியிலும் CPM லும்பன்கள் மற்றும் கடைந்தெடுத்த 

பிற்போக்குக்  கழிசடைகள் ஆகியோரிடம் இருந்து 

எனக்கு எதிர்ப்பு வருகிறது. 


லும்பன்களும், பிற்போக்குப் பிண்டங்களும், கியூ பிராஞ்சு 

ஆள்காட்டிகளும் போலி இடதுகளும் இன்ன பிற இழிந்த 

கழிசடைகளும் தலைகீழாக நின்றாலும், அவர்களால் 

என்னை ஒன்றும் செய்ய இயலாது.


உயர்ந்து நிற்கும் உருக்குப் போன்ற பாறை மீது 

சதா அலைகள் வந்து மோதிக் கொண்டே இருக்கின்றன.

என்றாலும் அலைகள்தான் சிதறுகின்றன.

பாறை சிதறுவதில்லை..

********************************************************

              

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக