சனி, 18 ஜூன், 2022

ராகுல் காந்தி மீதான 
நேஷனல் ஹெரால்டு வழக்கு என்பது என்ன?
ஒரு வரியில் சொல்ல வேண்டும்! 
பழிவாங்கப் படுகிறாரா ராகுல் காந்தி?
---------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
1) ராகுல் காந்தி மீதான வழக்கு ஒரு மணி லாண்டரிங் 
வழக்கு (Money laundering case) ஆகும்.

2) Money laundering case என்பதை தமிழில் எப்படி 
மொழிபெயர்ப்பது என்று கேட்டால், என்னுடைய 
பதில், தமிழில் தாலியறுக்க முடியாது என்பதே!

3) மணி லாண்டரிங் என்றால் என்ன என்று 
தெரியாதவர்களால் ராகுல் காந்தி மீதான இந்த 
வழக்கை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.

4) போலி இடதுசாரி, போலி முற்போக்கு, போலி 
நக்சல்பாரி, போலி மாவோயிஸ்ட் ஆகியோர் அடங்கிய 
தமிழகத்தின் தற்குறி முகாமில் ஒரு பயலுக்கும் 
மணி லாண்டரிங் (Money laundering) என்றால் என்ன 
அர்த்தம் என்று தெரியாது.

5) வாசக அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.
மணி லாண்டரிங் குறித்து இங்கு எளிமையாக 
விளக்கப் போவதில்லை. காரணம், என்னுடைய 
விளக்கங்களால் போலி இடதுசாரித் தற்குறிப் 
பயல்கள் பயனடைவதை நான் விரும்பவில்லை.

6) கிரிமினல் குற்றங்களில் கொலைக் குற்றம் 
தலையாய குற்றம் அல்லவா! அது போல 
பொருளாதாரக் குற்றங்களில் மணி லாண்டரிங் 
என்பது தலையாய குற்றம் என்று இப்போதைக்குப் 
புரிந்து கொள்ளுங்கள்!  

7)  சரி,ராகுல் காந்தி பழிவாங்கப் படுகிறாரா?
இந்தியா முழுவதும் உள்ள விபச்சாரத் தரகர்கள் 
(pimps) இந்தக் கேள்விக்கு ஏகமனதாகஅளிக்கும் 
பதில் இதுதான்: "ஆம், பழிவாங்கப் படுகிறார்".

8) எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்ட அல்குலை 
அதீத இன்பம் தரும் அல்குல் என்று வர்ணித்து 
வாடிக்கையாளரை ஏமாற்றிக் காசு பார்ப்பதைக் 
குலத் தொழிலாகக் கொண்ட விபச்சாரத் தரகர்கள் 
ராகுல் காந்தி பழிவாங்கப் படுவதாகத்தான் 
பேசுவார்கள். எனவே உண்மை என்ன என்று  
பார்த்து விடுவோம்.

9) முதலில் இந்த வழக்கு எப்போது போடப்பட்டது
என்று பார்ப்போம். 2012ல்  போடப்பட்டது.

10) 2012ல் யாருடைய ஆட்சி நடைபெற்றது?
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. சோனியாவின் 
பினாமியான பிரதமர் மன்மோகன் சிங்கின் 
ஆட்சிதானே நடைபெற்றது. UPA Chairpersonஆக 
சோனியாதானே அப்போது இருந்தார்.

11) இந்தியாவில் மணி லாண்டரிங் வழக்குகளை 
விசாரிக்கும் அதிகாரம் படைத்தது அமலாக்கப் பிரிவு 
(Enforcement Directorate). டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி 
புகார் கொடுத்தவர். காங்கிரஸ் அரசுதான் சோனியா 
மீதும் ராகுல் மீதும் வழக்குத் தொடுத்தது.

12) 2012 ஜூலை வரை பிரணாப் முகர்ஜியும் 
2012 ஜூலை முதல் 2014 மே வரை ப சிதம்பரமும்தான் 
நிதியமைச்சர்களாக இருந்தார்கள்.   

13) சோனியா காந்தி மீதும் ராகுல் காந்தி மீதும் 
மணி லாண்டரிங் வழக்கைத் தொடுத்தது யார்?
சோனியா விசுவாசியான சிதம்பரம்தான். மணி 
லாண்டரிங் அல்லாமல் வேறு ஒரு தீவிரமற்ற 
சட்டப் பிரிவின்கீழ் ப சிதம்பரம் வழக்குத் 
தொடுத்திருக்கலாமே! ஏன் அவர் அதைச் 
செய்யவில்லை?  சோனியாவிடம் காட்டி அனுமதி 
பெற்றுத்தானே ப சிதம்பரம் மணி லாண்டரிங் 
தடுப்பு சட்டப்பிரிவின்கீழ் 
(PMLA = Prevention of Money Laundering Act ) 
வழக்குத் தொடுத்தார்!  

14) எனவே இதில் பழிவாங்குதல் எங்கே இருக்கிறது 
சோனியா காந்தி அவர்களே? 

15) 2012ல் போடப்பட்ட இந்த வழக்கு இந்திய 
நடைமுறைப்படி நத்தை வேகத்தில் நகர்ந்து 
பத்தாண்டுகள் கழித்து 2022ல் விசாரணைக்கு 
வருகிறது. மோடி 2014 மே மாதம் பிரதமராகி 
விட்டார். ஆனாலும் அவருடைய முதல் ஆட்சிக்
காலத்தில் (2014-2019) இந்த வழக்கு விசாரணைக்கே 
வரவில்லை. ராகுல், சோனியாவைப் பழிவாங்கக் 
கிடைத்த அற்புதமான இந்த வழக்கை மோடி 
பயன்படுத்தவே நினைக்கவில்லை! எதைப்பற்றியும் 
கவலைப் படாமல் அமைதியான தியானத்தில் அல்லவா 
மோடி மூழ்கிக் கிடந்தார்! 

16) இந்த வழக்கில் தனிப்பட்ட முறையில் 
மோடியோ அல்லது அவரின் அரசோ எவ்வித ஆர்வமும் 
காட்டவில்லை. அப்படி அக்கறை காட்டி இருந்தால் 
2019லேயே தேர்தல் நெருக்கத்தில் ராகுல் சோனியா 
மீதான விசாரணையை முடுக்கி விட்டிருந்து அரசியல் 
ஆதாயம் அடைந்திருக்கலாம்.  ஆனால் அப்படி எதுவும் 
நடக்கவில்லை என்பதை நாடறியும்.            

16) எனவே ராகுல் காந்தி பழிவாங்கப் படுகிறார் 
என்று கூறும் விபச்சாரத் தரகர்களின் பொய்
முற்றிலுமாக அழுகிப்போய் விட்டது என்பதை இங்கு 
நிரூபித்து இருக்கிறேன். QED.
------------------------------------------------------------------
பின்குறிப்பு::
வாசகத் தன்மையில் முதிர்ச்சியுற்ற, நன்கு 
கற்றறிந்த, ஆங்கிலச் செய்தித்தாள்களை 
வாசிக்கும் பழக்கம் உடைய, IQ 110 என்ற அளவில் 
உள்ள வாசகர்களை மனத்தில் கொண்டு 
இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது. 
மேற்குறித்த ஸ்பெக் (specification)
இல்லாதவர்கள் அருள்கூர்ந்து இக்கட்டுரையைப் 
படிக்காமல் இருப்பதன் மூலம் ஒத்துழைப்பு 
நல்கும்படி வேண்டுகிறோம்.
-----------------------------------------------------------
 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக