வியாழன், 2 ஜூன், 2022

 நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் 
பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி!
சோனியா ராகுல் மீது வழக்கு!
------------------------------------------------------------
பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் 
சோனியாவும் ராகுலும் ஜாமீனில்
இருக்கிறார்கள்!

எவ்வளவோ கொடிய கிரிமினல்களும் 
பண மோசடி செய்த கயவர்களும்  
ஜாமீனில் இருப்பதைப்போல 
சோனியாவும் ராகுலும் ஜாமீனில் இருக்கிறார்கள்.

இந்த வழக்கு எப்போது போடப்பட்டது?
2012ல்  போடப்பட்டது.

2012ல் யாருடைய ஆட்சி நடைபெற்றது?
காங்கிரஸ் ஆடசி. பிரதமர் மன்மோகன் சிங்கின் 
ஆட்சி நடைபெற்றது. UPA Chairpersonஆக 
சோனியாதான் அப்போது இருந்தார்.

இந்த வழக்கைத் தொடுத்தவர் டாக்டர் 
சுப்பிரமணியம் சுவாமி. அப்போது அவர் 
தமது ஜனதா கட்சியை நடத்திக் 
கொண்டிருந்தார். பாஜகவில் சேரவில்லை.
 
 ஐயோ பழி வாங்குகிறார்கள் என்று 
சோனியா ஒப்பாரி வைப்பதில் அர்த்தம் இல்லை.
இது அவருடைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில்
இருந்தபோது போடப்பட்ட வழக்கு.
அவருடைய கைப்பாவை மன்மோகன் சிங் 
பிரதமராக இருந்தபோது போடப்பட்ட வழக்கு.

இதில் பழிவாங்கல் எங்கே இருக்கிறது சோனியாவே?

அன்றைக்கே சுப்பிரமணியம் சுவாமியைச் 
சரிக்கட்டி இருந்தால் வழக்கே இல்லாமல் 
போய் இருக்குமே!

திமிர்! நாம் ஆட்சியில் இருக்கிறோம் என்ற 
திமிர்! நம்மை யார் என்ன செய்து விட முடியும் 
என்ற திமிர்!

இன்றைக்கு நிலைமை முற்றிப்போய் விட்டது.
கம்பி எண்ணும் நாள் நெருங்கி விட்டது.
புண் புரையோடிப்போய் விட்டது.
******************************************** 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக