புதன், 26 செப்டம்பர், 2018

ஈழத் தரகர்கள் அனைவரும் விதிவிலக்கின்றி
இந்திய அரசின் கைக்கூலிகளே!
சிங்கள இனவெறி அரசுக்கு கப்பல் வழங்கியது யார்?
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
1) தமிழ் ஈழத்தைப் பொறுத்து காங்கிரஸ், பாஜக ஆகிய
இரண்டு கட்சிகளுக்கும் ஒரே நிலைபாடுதான். தமிழ்
ஈழத்தை ஏற்பதில்லை என்ற நிலைபாடுதான்!

2) காங்கிரஸ் ஆட்சி, பாஜக ஆட்சி என்று எந்த ஆட்சியாக
இருந்தாலும், இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை
இலங்கையைப் பொறுத்து ஒன்றுதான். சிங்கள அரசை
ஆதரிப்பது என்ற நிலைதான் இரு ஆட்சியிலும்.

3) விடுதலைப் புலிகளை அழிப்பது என்பதில் காங்கிரஸ்,
பாஜக இருகட்சிகளும் .ஒன்றாகவே செயல்பட்டன.
ஆனால் இறுதிப் போர் நிகழ்ந்த காலத்தில் (2007-2009)
காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்ததால், புலிகளை அழிப்பதில் காங்கிரசுக்கு இயற்கையாகவே
அதிகமான பங்கு இருந்தது.

4) வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இலங்கையில்
சந்திரிகா பிரதமராக இருந்தார்.வாஜ்பாய் அரசின்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அரசு
முறைப் பயணமாக இலங்கை சென்றார்.
இலங்கைக்குத் தேவைப்படும் எல்லா உதவிகளையும்
செய்வதாக வாஜ்பாயின் உறுதிமொழியை ஜஸ்வந்த்
சிங், சந்திரிகாவிடம் தெரிவித்தார்.  

5) சந்திரிகாவின் வேண்டுகோளை ஏற்று, இலங்கை 
ராணுவத்துக்கு மிகப்பெரிய போர்க்கப்பலை
(ஐஎன்எஸ்  சரயு வகை) வழங்கினார் வாஜ்பாய்.
மேலும் பல்வேறு நவீன ஆயுதங்களையும் வழங்கினார்.
500 கோடி ரூபாய் கடனுதவியும் வழங்கினார்.

6) ஐ என் எஸ் சரயு கப்பலைக் கொண்டு, புலிகளின்
முக்கியமான 8  கப்பல்களை அழித்தது இலங்கைக்
கடற்படை.

7) வாஜ்பாய் அரசு சிங்கள ராணுவத்துக்கு போர்க்கப்பல்
வழங்கியபோது, வாஜ்பாயாய் அரசில் மதிமுகவின்
இரண்டு அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள்
மு கண்ணப்பன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன்.

8) திமுகவின் சார்பாக முரசொலி மாறன், டி ஆர் பாலு,
ஆ ராசா ஆகியோர் வாஜிபா அரசில் அமைச்சர்களாக
இருந்தனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக என் டி
சண்முகம், ஏ கே மூர்த்தி ஆகிய இருவரும்
அமைச்சர்களாக இருந்தனர்.

9) யாராக இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்குப் 
பதவிதான் முக்கியம். விடுதலைப் புலிகள் இருந்தால்
என்ன,அழிந்தால் என்ன?

10) காங்கிரஸ் ஆட்சியின்போது சிங்கள ராணுவத்துக்கு
2007 செப்டம்பரில் மேலும் இரண்டு போர்க்கப்பல்கள்
கொடுக்கப் பட்டன. வரஹா, விக்ரஹா என்னும்
போர்க்கப்பல்கள் அவை. விடுதலைப் புலிகளின்
கடற்படையை முற்றிலுமாக அழித்தவை இந்த
வரஹா, விக்ரஹா போர்க்கப்பல்கள்.

11) காங்கிரஸ் அரசு சிங்கள ராணுவத்துக்கு
போர்க்கப்பல்கள் வழங்கியபோது, முக அழகிரி,
ஆ ராசா, தயாநிதி மாறன், டி ஆர் பாலு உள்ளிட்டோர்
அமைச்சர்களாக இருந்தனர். எந்த அமைச்சரும்
ஆட்சேபிக்கவில்லை.   

12) ஈழத் தரகர்கள் நெடுமாறன், வைகோ, சீமான்,
கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி
திருமுருகன் காந்தி ஆகியோர்  காங்கிரஸ் பாஜக அரசுகள்
போட்டி போட்டுக் கொண்டு சிங்கள ராணுவத்துக்கு
போர்க்கப்பல்கள் வழங்கியதை  என்றாவது
கண்டித்தது உண்டா? கிடையாது.
ஈழத் தரகர்கள் அனைவருமே இந்திய அரசின்
கைக்கூலிகளே. இதை யாராவது மறுக்க முடியுமா?

13)பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனைக்
கொன்றது இந்திய இராணுவமே என்று செய்திகள்
வந்துள்ளன. இது பற்றி அடுத்துப் பார்ப்போம்.
*******************************************************
பின்குறிப்பு: ஈழத் தரகர்களை விட, சிங்கள
ராணுவத்துக்கு போர்க்கப்பல் வழங்கிய
வாஜ்பாய் சோனியா ஆகியோர் எவ்வளவோ
நேர்மையானவர்கள்! இதுதான் உண்மை!
--------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக