வியாழன், 13 செப்டம்பர், 2018

தோழர் Ilango Pichandy அவர்களின் வகுப்பு அத்வைத கண்ணோட்டமாக இல்லை! அதற்கு எதிராகவே உள்ளார்!
ஆனால், அத்வைதம்
மார்க்சியத்தில் இணைக்கப்பட வேண்டும் என்பதையே யதார்த்தங்கள்
முன்னிறுத்துகின்றன!

தோழர் Balauravu அவர்களுக்கு
எனது பதில்!
தோழர் Ilango Pichandy
அவர்கள், அத்வைதத்தை
எதிர்த்தே குரல் கொடுக்கிறார்!
இன்னும்
சொல்லப் போனால்,
பெர்க்லி என்ற கருத்து முதல் வாதியோடு தான்
ஆதிசங்கரரை இணைத்துப் பேசுகிறார்!
மேலும் ஆதிசங்கரரை
அவன் இவன் என்றே
உளறுகிறார்!
ஆகவே
அவர் எனது கருத்துக்
கண்ணோட்டத்தையே
சார்ந்திருக்கிறார் என்பது
கிஞ்சித்தும் உண்மை
இல்லை! ஆனால், அவரது
கருத்து என்பது, முற்றிலும்
விஞ்ஞானத்தைச்
சுற்றியே உள்ளது!
இது
எதிர் காலத்தில் அவரை
முற்றிலும் கேலிப்
பொருளாகவே ஆக்கும்!
விஞ்ஞானத்தின்
அவசியத்தை விஞ்ஞான
ரீதியில் புரிந்து
கொள்வதற்குப் பதிலாக,
தனது அகவய கருத்துக்கே
முக்கியத்துவம்
தருவதால், அவர்,
விஞ்ஞானத்தை,
சமூகத்தில் பொருத்திப்
பார்ப்பதில் மிகவும்
தவறிழைக்கிறார்!
இதன்
மூலம், அவர் தன்னை
விஞ்ஞானமற்ற
விஞ்ஞானியே என்பதைத்
தான் உறுதிப்படுத்துகிறார்!
எது எப்படியாயினும்,
சமீப காலமாக, தமிழகத்தில் நடைபெறும்
தத்துவார்த்த விவாதங்கள்
மா.லெ கட்சிக்
குழுக்களுக்குள் நடக்கும்
உட்கட்சிப் போராட்டங்கள்
முதலியன, எனது முயற்சியின், அதாவது,
மார்க்சியத்துடன்,
அத்வைதம் உள்ளடக்கிய
இந்தியத்துவம்
இணைக்கப்பட வேண்டும்
என்ற எனது முயற்சியின்
வெற்றியையே
கட்டியம் கூறுகின்றன!
அதாவது மார்க்சியத்தில்
அத்வைதத்தின்
அவசியத்தையே
முன்னறிவிக்கின்றன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக