புதன், 19 செப்டம்பர், 2018

DIALECTICS 
--------------------------
Hegel Engels says single contradiction. Mao says several contradictions and primary and secondary contradictions. This is the vital difference. How to identify primary contradiction?
“சிக்கலான ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றில் இன்றியமையாத ஒன்று முதன்மை முரண்பாடாகும். இதன் இருத்தலும் வளர்ச்சியும் பிறமுரண்பாடுகளின் இருத்தலையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கவோ செல்வாக்கு செலுத்தவோ செய்கின்றன”. மாவோ
“ஆகவே எந்த ஒரு வளர்ச்சிப் போக்கிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் இருக்குமானால், அவற்றில் ஒன்று முதன்மை முரண்பாடாக இருக்கும். அது தலைமை பங்கை வகிப்பதோடு நிர்ணயம் செய்யும் பங்கையும் வகிக்கும். மற்றவை, இரண்டாம் நிலையில், கீழ்ப்பட்ட நிலையில் இருக்கும். எனவே, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் உடைய எந்த ஒரு சிக்கலான வளர்ச்சிப் போக்கையும் நாம் ஆராயும் பொழுது, அதன் முதன்மை முரண்பாட்டைக்காண நாம் அனைத்து வழிகளிலும் முயலவேண்டும். ஒருமுறை இம்முதன்மை முரண்பாட்டை இறுகப்பற்றியதும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு காணலாம். இந்த முறைதான் முதலாளிய சமுதாயம் பற்றிய தமது ஆய்வில் மார்க்சு நமக்குக் கற்றுத்தந்துள்ள முறையாகும். ஏகாதிபத்தியத்தையும், முதலாளியத்தின் பொது நெருக்கடியையும் பற்றி ஆராய்ந்த போதும் சோவியத் பொருளாதாரம் பற்றிய ஆய்வை மேற்க்கொண்ட போதும் லெனினும் ஸ்டாலினும் நமக்குக் கற்றுத் தந்துள்ள முறையும் இதுதான். இதை புரிந்துக் கொள்ளாத அறிவாளிகளும் செயல்வீரர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் குழப்பத்திற்குள்ளாகின்றனர். எனவே, அவர்களால் அப்பிரச்சினையின் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழியைக்காண முடியாமல் போவது இயல்பே.” -மாவோ
மேற்கண்ட மாவோவின் கூற்றுப்படி, ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் நிலவும் சமூகத்தில் முதன்மை முரண்பாடே அனைத்து முரண்பாடுகளையும் ஆதிக்கம் செய்யும் போக்கை கொண்டிருக்கிறது என்பது விளங்குகிறது. இம்முதன்மை முரண்பாட்டை அடையாளங்காணுவதும், இதை தீர்ப்பதற்கான குறிப்பான திட்டத்தையும் செயல் உத்திகளையும் வகுத்து செயல்படுவதில் தான் பாட்டாளி வர்க்க கட்சியின் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சியும் வெற்றியும் உள்ளது.
இம்முதன்மை முரண்பாடு அடிப்படை முரண்பாடுகளில் இருந்தே எழுகிறது. இதன் பொருள் இம்முரண்பாடுகளில் ஒன்று தான் முதன்மை முரண்பாடாக வரும் என்பதல்ல. முதன்மை முரண்பாடு கீழ்க்கண்ட முறைகளில் வெளிப்படுகிறது.
(1) அடிப்படை முரண்பாட்டின் முழுமை வடிவத்திலேயே வரும்.டுத்துக்காட்டாக, இந்தியா பாகிஸ்தான் போர்களின் போதும், இலங்கையில் இந்தியா ஆக்கிரமிப்பு படைகளை அனுப்பியபோதும் இந்திய விரிவாதிக்கத்திற்கெதிரான முரண்பாடே முதன்மை முரண்பாடாக இருந்தது.
(2) ஒரே அடிப்படை முரண்பாட்டின் முதன்மைக் கூறில் ஒருபிரிவுக்கு எதிராக முதன்மை முரண்பாடு வெளிப்படும்.
எ.கா. அதிகாரவர்க்க முதலாளித்துவம் என்ற முதன்மைக் கூறில் ஒருபிரிவாகிய இந்திராகாந்தியின் பாசிசத்திற்கெதிராக முதன்மை முரண்பாடாக அவசரநிலை காலத்தில் எழுந்தது.
(3) ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகள் இணைந்து ஒரே முதன்மை முரண்பாடாக வெளிப்படும்.
எ.கா இந்திய பெருமுதலாளி வர்க்கமும் மூலதன-நிலவுடையமும் இணைந்து ஒரே முதன்மை முரண்பாடாக வரும் அல்லது ஏகாதிபத்தியமும் இணைந்து வரலாம்.
மேற்கண்ட வடிவங்களிலேயே அடிப்படை முரண்பாட்டில் இருந்து முதன்மை முரண்பாடு எழுகிறது.