வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

தமிழ்நாட்டில் மீண்டும்  தலைதூக்கும்
மதவெறிப் பயங்கரவாதம்!
----------------------------------------------------------------
ஹெச் பரூக் (வயது 31) ஒரு நாத்திகர். திராவிடர்
விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர். இவர் எந்த
அடிதடியிலும் இறங்கவில்லை. முகநூலில்
நாத்திகக் கருத்துக்களை எழுதினார். அவ்வளவுதான்.
2017 மே மாதம் இஸ்லாமிய மதவெறியர்காளால்
தோழர் பாருக் படுகொலை செய்யப்பட்டார். இது
நடந்தது கோவையில்.

அவரைக் கொலை செய்த கொலையாளிகள் யாரும்
இப்போது சிறையில் இல்லை. ஜாமீனில் வந்து
விட்டார்கள்.

தற்போது மதமாற்றத்தைத்  தட்டிக் கேட்ட
ராமலிங்கம் என்பவர் அண்மையில் படுகொலை
செய்யப் பட்டுள்ளாள்ர். இது தொடர்பாக இஸ்லாமிய மதவெறியர்கள் ஐந்து பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

மதவெறியர்களின் இந்த வெறிச் செயலால்
இஸ்லாமிய சமூகம் மைய நீரோட்டத்தில் இருந்து
அகற்றப்பட்டு விடும். இது உழைக்கும் வர்க்க
இஸ்லாமியர்கள் தனிமைப் படுவதில் போய் முடியும்.

இத்தகைய மதவெறிப் படுகொலைகளைச் செய்யும்
மதவெறியர்கள் படுமோசமான சமூக விரோதிகள்.
இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு
தண்டனை பெற வேண்டும்.

தேர்தல் முடியும் வரை மதமாற்றம், மதப் பிரச்சாரம்
ஆகியவை அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்.
ஒரு அமைதியான சூழலில் தேர்தலைச் சந்திக்க
மக்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்.
******************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக