சனி, 2 பிப்ரவரி, 2019

பணியிடை நீக்கம்  செய்யப்பட்ட கெளசல்யாவுக்காக
உள்ளக விசாரணையில் ஆஜராகி வாதாடத் தயார்!
--------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்.
------------------------------------------------------------------------------------
1) திருமதி கெளசல்யா சங்கர் மத்திய அரசுப் பணியில்
இருந்து வருகிறார். இவர் அண்மையில் தம் பணியில்
இருந்து இடைநீக்கம் (suspension) செய்யப் பட்டுள்ளார்
என்று பத்திரிக்கைச் செய்திகள் வாயிலாக அறிகிறேன்.

2) Suspension pending inquiry என்று இடைநீக்க உத்தரவில்
குறிப்பிட்டு இருந்தால், திருமதி கெளசல்யாவுக்கு
குற்றப் பத்திரிக்கை வழங்கப்பட்டு விசாரணை
நடைபெறும். இது துறை சார்ந்த உள்ளக விசாரணை
(domestic inquiry) ஆகும். இது நீதிமன்ற விசாரணை
போன்றதல்ல. அதே நேரத்தில் இது quasi judicial தன்மை
கொண்டதாகும்.

3)  ஒரு பத்திரிகையின் நேர்காணலின்போது, இந்திய
இறையாண்மைக்கு எதிராக திருமதி கெளசல்யா
பேசியதாகக் கூறப் படுவதாலேயே இந்த நடவடிக்கை
என்று அறிகிறேன்.

4) இந்த விஷயத்தில், major punishmentக்கு எவ்விதமான
முகாந்திரமும் இல்லை என்பது என் கருத்து.
Major punishment என்றால் விதி 14ன் கீழ் நடவடிக்கைகள்
(proceedings) மேற்கொள்ளப்படும். இதில் விசாரணை
என்பது கட்டாயம் (inquiry is mandatory).

5) Minor punishment என்றால், பொதுவாக விசாரணை இல்லை.
எனினும் குற்றம் சாட்டப்பட்டவர் கோரினால்
விசாரணை வழங்கப் படலாம். எனினும் இது
நடவடிக்கை எடுக்கும் அதிகாரியின் விருப்ப
அதிகாரத்துக்கு உட்பட்டது (lies withthin the discretionary powers of
the Disciplinary Authority).

6) இந்தியாவின் மத்திய அரசுப் பணிகளிலேயே
மிக அதிகமாக, உள்ளக விசாரணைகளில்
(domestic inquiry) defence தரப்பில் பங்கேற்று, எடுத்துக்கொண்ட
வழக்குகளில் அதிகபட்ச வெற்றியைப் பெற்றுத்
தந்தவன் நான். மத்திய அரசின் CBI அதிகாரிகளின்
மீதான வழக்குகளிலும் நான் குற்றம் சாட்டப்பட்ட
CBI அதிகாரிகள் சார்பாக உள்ளக விசாரணைகளில்
வாதாடியவன். அது மட்டுமல்ல, நக்சல்பாரி இயக்கத்
தோழர்கள் பலர் மீதான வழக்குகளில் உள்ளக
விசாரணைகளில் ஆஜராகி வெற்றி தேடித்தந்தவன் நான். 

அஞ்சல், தந்தி, தொலைபேசி, BSNL, ஏனைய மத்திய
அரசுத் துறைகள் மற்றும் மத்தியப் பொதுத்துறை
நிறுவனங்கள் சார்ந்த பல நூறு வழக்குகளில் இவ்வாறு
நான் பங்கேற்று உள்ளேன்.

7) எனவே ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்ற முறையில்,
திருமதி கெளசல்யா மீதான வழக்கில் உள்ளக
விசாரணையில் பங்கேற்று வழக்கை நடத்தி
வெற்றி தேடித் தரத் தயாராக இருக்கிறேன். இந்த
முகநூல் பதிவு இதற்கான எனது ஒப்புதல் ஆகும்.
               
8) வழக்கை நடத்துவதற்காக நான் எவ்விதக்
கட்டணத்தையும்  கோரவில்லை. எனக்கான
பயணப்படி தினப்படி (TA, DA) மட்டும் கொடுத்தால்
போதும். 

9) இதில் எந்தக் கட்டாயமோ வற்புறுத்தலோ இல்லை.
இது ஒரு தகவல் மட்டுமே. விரும்பினால் என்னை
அமர்த்திக் கொள்ளலாம். இதைச் சொல்வது என்
கடமை என்பதால் மட்டுமே இதைச் சொல்கிறேன்.
---------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: திருமதி கெளசல்யா சார்பாக நான்
வாதாட முன்வருவது அவரின் .ஏனைய கருத்துக்கள்,
ஏனைய செயல்பாடுகள் பற்றிய எனது ஒப்புதல் என்று
பொருள்படாது.
******************************************************

மருதுபாண்டியன் திருப்பூர் குணா கிருஷ்ணசாமி தியாகராஜன்
செந்தழல் ஞானம்

நான் மத்திய அரசின் தொலைதொடர்பு (Telecom)
துறையில் பணியாற்றியபோது, சென்னை சாஸ்திரி
பவனில் CBIயில் பணியாற்றும் ஊழியர்கள்,
அதிகாரிகளுக்கு டிபன்ஸ் தரப்பில் பணியாற்றி
வழக்கை நடத்தி உள்ளேன். ஒன்றல்ல பல வழக்குகளில்.
ஒட்டு மொத்த மத்திய அரசுத் துறைகளும் ஒரு BLOCKஆக
வரும்.

இன்னாரை டிபன்ஸ் தரப்பில் வாதாட
நியமிக்கிறேன் என்று குற்றம் சாட்டப்பட்ட
ஊழியர் விண்ணப்பிக்கும்போது, அதை ஏற்று
அவர் விரும்பியவரையே நியமிக்க அனுமதிப்பது
என்பது Disciplinary Authorityன் discretion ஆகும். அவ்வளவே.
      

அவர் பேசியது என்ன? அவர் தெரிவித்த கருத்து என்ன?
இது பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை.
சஸ்பென்சன் என்பது அதீதம். The punishment should commensurate
with the gravity of offence. கவுசல்யா என்ன பெரிய
தத்துவ ஞானியா? theoreticianஆ? ஒரு அறியாப் பெண்
விஷயம் தெரியாமல் ஏதேனும் சொல்லி இருந்தால்,
கூப்பிட்டு அறிவுறுத்தினால் போதுமே!
CCS CONDUCT RULES முழுவதையும்  படித்து
கரைத்துக் குடித்து விட்டா, கவுசல்யா வேலை
பார்க்கிறார்? இல்லையே.This is much ado about nothng.     

      
நக்சல்பாரிகளாகிய நாங்கள் ஏக இந்தியப்
புரட்சியில் நம்பிக்கை உடையவர்கள்.


35 ஆண்டுகளாக மத்திய அரசில் தொழிற்சங்கத்
தலைவராகப் பணியாற்றி உள்ளேன். பணிஓய்வுக்குப்
பின்னரும் ஊழியர்களின் வழக்கை எடுத்து நடத்தி
வருகிறேன். ஒரு சராசரியான,குட்டி முதலாளித்துவ,
அனுபவமற்ற இளம்பெண்ணால்  இந்திய
இறையாண்மைக்கு எவ்வித பாதிப்பையும்
ஏற்படுத்தி விட முடியாது. இந்திய இறையாண்மை
அவ்வளவு பலவீனமானதல்ல.

சகவாசம்.  நிற்க. இந்தத் தருணத்தில் என்னால்
சட்ட ம் அனுமதிக்கும் சொற்களை மட்டுமே
கவனமாகத் தேர்ந்தெடுத்துப் பேச முடியும்.


random என்பது தற்போக்கு என்ற பொருளில்
பாட நூல்களில் பல ஆண்டுகளாக ஆளப்பட்டு
வருகிறது. ஆளுகையில் உள்ள ஒரு சொல்லை
மாற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே
randomisation = தற்போக்காக்கம்.


இந்தப் பதிவானது  துறைசார்ந்த ஒரு வழக்கு
பற்றிய பதிவு. எனவே சட்டம் சார்ந்து மட்டுமே
நான் பேச இயலும். இந்திய  இறையாண்மைக்கு
திருமதி கவுசல்யா எவ்வித ஊறும்
விளைவிக்கவில்லை என்றும் ஊறு விளைவிக்கும்
எண்ணமே அவருக்கு கிஞ்சித்தும் இல்லை
என்பதையும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

குலைப்பு என்பது entropy என்ற சொல்லுக்கு
நிகராகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
random என்பது ஒருவிதமான  தாறுமாறான தன்மை.
எனவே தாறுமாறாக்கம் என்று கூறலாமா?

உண்மைதான். கட்சித் தலைமையானது தன்
குடும்பத்திடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று
செயல்பட்டார். ஸ்டாலினுக்கு தலைவர்
பொறுப்பை அளிக்கவே கலைஞர் விரும்பினார்.
எனினும் அவர் வழங்கத் தயங்கியதன்
காரணம், ஸ்டாலின் அதற்கான தகுதியைப்
பெற்றிருக்கவில்லை என்பதே. 

திருமதி கவுசல்யா,
 Kowsi Sankar என்ற idயில் பின்னூட்டம் இட்டது
 நீங்கள்தான்  என்று சற்றுமுன்தான் புரிந்து
கொண்டேன். நான் வேறு யாரோ ஒரு வாசகர்
என்று நினைத்து விட்டேன். நீங்கள் 94442 30176
என்ற எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளவும்.
உடனடியாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று
சொல்ல விரும்புகிறேன். 


வைகோ வெளியேற்றம் என்பது முரசொலி மாறனின்
brainchild. கலைஞர் தாமாக அந்த முடிவை எடுக்கவில்லை.
முரசொலி மாறனும் வைகோவும் இருவருமே அப்போது
MPக்களாக  இருந்த நேரம். வைகோவுக்கு இருந்த
செல்வாக்கு மாறனுக்குப் பிடிக்கவில்லை.
இவ்வளவுக்கும் மாறனும் ஆற்றல் நிரம்பியவர்தான்.

மாறன்தான் கலைஞரின் மனதில் வைகோவை
நீக்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை
விதைத்தவர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக