புதன், 6 பிப்ரவரி, 2019

சாரதா நிதி நிறுவனம் திவாலாகிறது. அதன் இயக்குனர்களான சுதிப்தா சென் மற்றும் தேபஞ்சி முகர்ஜி ஆகியோர் தலைமறைவாகினர். மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரிணாமுல் அரசு நீதிபதி ஷியாமல் சென் தலைமையில் நீதிவிசாரணைக்கும், ராஜிவ் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்தது.சுதிப்தா சென், முகர்ஜி காஷ்மீரில் கைது செய்யபட்டார்கள்
#ஜுலை2013:-
சிபிஐ விசாரிக்க கோரி பொது நல வழக்கு #மார்க்ஸிஸ்ட்கட்சியால் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது தள்ளுபடி செய்யப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் குனால் கோஷ் சிறப்பு புலனாய்வு குழுவினால் கைது செய்யப்படுகிறார்.
#பிப்ரவரி2014
சுதிப்தா சென் - முகர்ஜி மீது குற்றப்பத்திரிகை சிறப்பு புலனாய்வு குழுவால் தாக்கல் செய்யப்படுகிறது.
ஆனால், இந்த ஊழல் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவோ, குற்றப்பத்திரிகையோ தாக்கல் செய்யப்படவில்லை.
வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் மார்க்ஸிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் உத்தரவிடுகிறது.
#செப்டம்பர்2014
முன்னாள் டிஜிபியும், திரிணாமுல் காங்கிரஸின் துணைத்தலைவருமான ராஜுட் மஜும்தார் சிபிஐ கைது செய்கிறது.
#அக்டோபர்2014
சுதிப்தா சென், முகர்ஜி, திரிணாமுல் எம்.பி.குனால் கோஷ் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.
மேற்கு வங்க போக்குவரத்து அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்படுகிறார்.
#ஜனவரி2015
திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவராக இருந்த, மம்தாவின் வலதுகரமாக செயல்பட்ட முகுல்ராய் சிபிஐ ஆல் விசாரிக்கப்படுகிறார். பின்னர் 2017 ல் அவர் பிஜேபியில் சேர்ந்துவிட்டார்.
#மார்ச்2016
அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
திரிணாமுல் லோக்சபா எம்.பிக்கள் தபஸ் பால், சுதிப் பந்தோப்தாயா ஆகியோர் சிபிஐ ஆல் கைது செய்யப்படுகிறார்கள்.
#ஆகஸ்ட்2017
இவ்வழக்கில் ஆதாரங்களை சமர்பிக்க உத்தரவிட்டு கொல்கத்தா போலிஸ் கமிஷனரை ஆஜராக சொல்லி முதல் சம்மனை சிபிஐ அனுப்புகிறது.
அதற்கு பதில் இல்லாததால் மீண்டும் சம்மன் அனுப்புகிறது.
கொல்கத்தா கமிஷனர் ராஜுவ் குமாருக்கு மூன்றாவது சம்மன் அனுப்பபடுகிறது. அப்போதும் ஆஜராகவில்லை.
ராஜுவ் குமாருக்கு எதிராக சிபிஐ உச்சநீதமன்றத்தை அணுகுகிறது. உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை அனுக உத்தரவிடுகிறது.
ராஜுவ் குமார் உட்பட 4 IPS அதிகாரிகளிடம் விசாரிக்க அனுமதிக்கேட்டு மேற்குவங்க டிஜிபிக்கு சிபிஐ கடிதம் அனுப்புகிறது.
சிறப்பு புலனாய்வு குழுவின் உறுப்பினர்களான 4 பேரில் ராஜுவ் குமார் தவிர்த்து மற்ற 3 பேர் கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுகி, சம்மனுக்கு பிப்ரவரி 13 வரை தடை பெறுகிறார்கள்.
ஏன் ராஜுவ் குமார் தடைபெறவில்லை? என்பதுதான் இந்த நாடகத்தின் முக்கியமான ரகசியம்.
ராஜுவ் குமாரை விசாரிக்க சிபிஐ அவர் அலுவலகம் செல்கிறது. சிபிஐக்கும் மம்தாவின் போலிஸுக்கும் இடையே மோதல் நாடகம் அரங்கேறியது. மம்தா கமிஷனர் வீட்டின் வெளியே தர்ணா இருந்தார். அந்த தர்ணாவில் அரசு அதிகாரிகளான காவல்துறை ஆணையர் சட்டத்திற்கு புறம்பாக கலந்துகொண்டார்.
ராஜுவ்குமாரை மேகாலாய ஷில்லாங்கில் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டும், அவரை கைது செய்யக்கூடாது என அறிவுறுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக