ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019


1) இந்திய ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசைன்,
அப்துல் கலாம் இருவருக்கும் பாரத ரத்னா வழங்கப்
பட்டது. இவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் அல்ல.

2) மூதாட்டி தெரசாவுக்கு பாரத ரத்னா வழங்கப்
பட்டதன் காரணம் அவர் பார்ப்பனர் என்பதாலா?

3) வெளிநாட்டைச் சேர்ந்த நெல்சன் மாண்டேலாவுக்கு
பாரத ரத்னா வழங்கப்பட்டது ஏன்? மண்டேலா
பார்ப்பனரா?

4) காமராசருக்கு பாரத ரத்னா,
எம் ஜி ராமச்சந்திர மேனனுக்கு பாரத ரத்னா.
இவர்கள் இருவரும் பார்ப்பனர்களா?
மூணாங்கிளாஸ் கூட படிக்காத மேனனுக்கு
பாரத ரத்னா வழங்குவதற்கு அவர் என்ன பெரிய
சாதனை புரிந்து விட்டார்?

5) டாக்டர் அம்பேத்காருக்கு பாரத ரத்னா!
அவர் பார்ப்பனர் என்பதாலா பாரத ரத்னா 
வழங்கப்பட்டது?

6) இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த
பிரபல பாடகி எம் எஸ் சுப்புலெட்சுமிக்கு
பாரத ரத்னா வழங்கப்பட்டது அவர்
பார்ப்பனர் என்பதாலா? 

7) இந்துஸ்தானி பாடகர் பிஸ்மில்லா கான்,
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்
அபுல் கலாம் ஆஜாத், எல்லை காந்தி என்று
அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார் கான்
ஆகியோருக்கு அவர்கள் பார்ப்பனர்கள்
என்பதாலா பாரத ரத்னா வழங்கப் பட்டது?

8) சர் சி வி ராமனுக்கு நோபல் பரிசு 1932லேயே
கிடைத்து விட்டது. அவருடைய சாதனைக்குத்தான்
நோபல் பரிசே தவிர அவர் பார்ப்பனர் என்பதால்  அல்ல.

நிற்க. சதுரங்கம் என்பது வெறும் விளையாட்டு அல்ல.
அது கணிதம்! அது அறிவியல்! எனவே சதுரங்க
வீரர் ஆனந்த் என்பவர் விளையாட்டு வீரர்
மட்டுமல்ல; அவர் விஞ்ஞானி என்ற வகைமையில்,
கணித நிபுணர் என்ற வகைமையில் வருகிறார்.
அவருக்கு பாரத ரத்னா என்பது அறிவியலுக்குச்
செய்யும் மரியாதை. அவ்வளவே.

சதுரங்கம் என்பது அறிவியல் என்று புரியாத
எவருக்கும் இந்தப் பதிவின் பொருள் புரியாது.
 
எமது பதிவுகள் கற்றுத் தெளிந்த, முதிர்ந்த
வாசகத்தன்மை உடைய வாசகர்களை,
குறிப்பாக IQ > 110 உடைய வாசகர்களை
மனதில் கொண்டு எழுதப் படுபவை.
இதை உணர்ந்து வாசகர்கள் ஒத்துழைப்புத் தருதல்
வேண்டும். பிறழ்புரிதலைத் தவிர்க்கவும்.


ஷரத்து 370ன் நீக்கத்துக்கு முன்பு
காஷ்மீரில் யாரும் சொத்து வாங்க முடியாதா?
விஞ்ஞான பூர்வமாக வாங்க முடியும்!
------------------------------------------------------------------------
வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்க
முடியாது. அப்படி சொத்து வாங்குவதை ஷரத்து
370 அனுமதிக்காது. இப்படித்தான் நாம் அனைவரும்
நம்பிக் கொண்டிருந்தோம்.

ஆனால் இது உண்மை அல்ல என்கிறார் இங்குள்ள
கோடீஸ்வரக் குடும்பத்தின் அடிவருடி ஒருவர்.
காஷ்மீரில் தலைவர் நிறைய சொத்துக்களை
வாங்கிப் போட்டுள்ளார் என்கிறார் அவர்.

பருக் அப்துல்லா குடும்பத்துடன் நெருங்கிய உறவு
உள்ள குடும்பம் அது. முன்பு ஷேக் அப்துல்லா
காலத்திலேயே மலர்ந்து மணம் பரப்பிய உறவு அது.
இப்போது ஓமர் அப்துல்லா குடும்பத்துடனும்
அந்த இனிய உறவைப் பேணி வரும் குடும்பம் அது.

மேலும் மப்டி முகமது சையது, மெஹபூபா ஆகியோர்
குடும்பத்துடனும் இக்குடும்பத்திற்கு நீடித்த நல்ல
உறவு உள்ளது.

காஷ்மீர் ராஜ வம்ச குடும்பத்துடன் உள்ள உறவை
வைத்துக் கொண்டு, காஷ்மீரில் பினாமி பெயர்களில்
இந்தக் குடும்பம் நிறையச் சொத்துக்களை
வாங்கிப் போட்டுள்ளது.

காஷ்மீரிகளை பினாமிகளாக வைத்துக் கொண்டு
அவர்களின் பெயரின் சொத்து வாங்கிப் போட்டால்,
அதை ஷரத்து 370 எப்படித் தடுக்கும்?

இதெல்லாம் விஞ்ஞான பூர்வ வழிமுறைகள்.
காஷ்மீரிலும் இக்குடும்பத்திற்கு இன்று நிறைய
சொத்து உள்ளது.

இன்றைக்கு மோடியின் பாசிச நடவடிக்கையால்
இந்தச் சொத்து பறிபோய் விடுமோ என்ற
ஆற்றாமையில் அந்தக் குடும்பம் தவிக்கிறது.
எனவே ஷரத்து 370ஐ அக்குடும்பம் தீவிரமாக
எதிர்க்கிறது. நாமும் எதிர்ப்போம்!
***********************************************

மருதுபாண்டியன் 

நேரு குடும்பத்துக்கு காஷ்மீரில் ஏற்கனவே
சொத்து உள்ளது. அவர்கள் அந்த மண்ணின்
மைந்தர்கள். எனவே நேரு குடும்பம் பினாமி
பெயரில் காஷ்மீரில் சொத்து வாங்க வேண்டிய
நிலையில் இல்லை.

நான் குறிப்பிடும் தமிழ்நாட்டுக் குடும்பம்
பாரம்பரியமான பணக்காரக் குடும்பம் அல்ல.
இன்று அவர்களுக்கு காஷ்மீரிலும் உலகம் முழுவதிலும்
சொத்து உள்ளது. 

முதல் குடும்பம் காஷ்மீரில் சொத்து வாங்கியதுமே
இரண்டாம் குடும்பம் கிடந்தது அலைமோதியது.
இரண்டு குடும்பத்திற்கும் குடும்பத் தலைவர்
ஒருவரே என்பதால்,  அடுத்த வாய்ப்பில் வாங்கலாம்
என்கிறார் குடும்பத் தலைவர்.

இரண்டாம் தலைமுறை பணம் வந்ததும் காஷ்மீரில்
சொத்து வாங்கி விட்டது அந்த இரண்டாம் குடும்பம்.
உண்மை விரைவில் வெளியாகும்.
 


விஞ்ஞான ரீதியில் சொத்து வாங்கினால் அதை 370 யை   வைத்து
எப்படித் தடுக்கும்?

முகிலன் அளவுக்கு புகளூர் விஸ்வநாதன் மீது
சமூகத்தில் எதிர்ப்பு கிடையாது. எனவே முகிலனை
ஆதரித்து அறிக்கை விடாத நெடுமாறன், புகளூர்
விஸ்வநாதனை ஆதரித்து ஒரு அறிக்கை வெளியிட்டு
உள்ளார். இது சம்பிரதாயமான அறிக்கை மட்டுமே.

புகலூர் விஸ்வநாதன் இல்லத்தில்தான் முகிலன்
தன் பாலியல் லீலைகளை நிகழ்த்தினார் என்பது
அனைவரும் அறிந்ததே.


காஷ்மீரிகள் சிலரை பினாமியாகக் கொண்டு  னேன்   நாளை காஷ்மீரில் 5cக்கு சொத்து வாங்கி உள்ளேன்.
சொத்தைப் பாதுகாக்க நாளை காஞ்சி சென்று
அத்திவரதரை தரிசிக்கிறேன்.

என்னுடைய சம்பாத்தியத்தில் 1c அளவுக்குத்தான்
என்னால் சேமிக்க முடிந்தது. சொத்து என்னுடைய
சொத்து சார்.


மசூதியை இடியுங்கள் ஐயா!
-----------------------------------------------
மேலும் சில மசூதிகளை இடியுங்கள் ஐயா
என்று அத்வானியிடம் மன்றாடும் வைகோ!




    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக