சனி, 31 ஆகஸ்ட், 2019

நாஷ் சமநிலைக் கோட்பாடு
ஓர் அறிவியல் கோட்பாடே!
அறிவார்ந்த கேள்விகளுக்குப் பதில்!
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
முன்குறிப்பு:
நாஷ் சமநிலை பற்றிய எமது முந்திய கட்டுரையையும்
அதன் பின்னூட்டங்களையும் படித்த பிறகு
இக்கட்டுரையைப் படிக்கவும்.
-----------------------------------------------------------------
ஒரு முக்கியமான, அடிக்கடி கையாளப் படுகிற
ஒரு Latin phrase உண்டு. ceteris paribus என்பதே அது.
"நாஷ் சமநிலை குலையாது" என்ற விதி
ceteris paribus என்ற தொடரை உள்ளடக்கியது.

நாஷ் சமநிலை குலையாது என்ற விதி ஒரு இயற்பியல்
விதி அல்ல. எனவே இயற்பியல் விதிக்குப் பொருந்துகிற
அளவுகோலால் நாஷ் சமநிலையை அளக்க இயலாது.

மனிதச்  செயல்பாடுகள் கணக்கற்ற parametersஆல்
நடக்கின்றன. இவை அனைத்தையும் isolate செய்து
பகுப்பாய்வு செய்திட இயலாமலும் போகும். எனவேதான்
ceteris paribusஐ உள்நுழைக்கிறோம்.  

உலக நிலைமைகள் தொடர்ந்து தீவிரமாகவும் நெருக்கமாகவும்
கண்காணிக்கப் பட்டு வருகின்றன. நிலைமைகள்
மாறும்போது நாஷ் சமநிலை விதியும் மாறக்கூடும்.
பிரதானமாக நாஷ் சமநிலை விதி என்பது ஒரு empirical
விதி ஆகும். எனவே இவ்விதி falsifiable and hence scientific.

அடுத்து non state actor பற்றி. "ஒரு அறிவாளி என்ன செய்வான்
என்பதை ஒரு முட்டாள் கூட எளிதில் யூகித்து விட முடியும்.
ஆனால் ஒரு முட்டாள் என்ன செய்வான் என்பதை விட
எந்த அறிவாளியாலும் யூகிக்க முடியாது" என்று
ஒரு பழமொழி உண்டு.

எனவேதான் non state actors மீதான இரும்புப்பிடி நாளும்
நாளும் இறுக்கிக் கொண்டே வருகிறது. குறிப்பாக
இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர்,
non state actors ஒரு வளையத்துக்குள் (ring) இருக்குமாறு
செய்யப் பட்டுள்ளனர். அணு ஆயுதங்களின் accessஐ
நோக்கி ஒரு மெல்லிய அடி எடுத்து வைத்தாலும்
அவர்கள் அழித்தொழிக்கப் படுவார்கள். A total annihilation is
guaranteed.

எனவே நாஷ் சமநிலை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை
மாறுவதற்கு வாய்ப்பு இல்லை/
****************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக