செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

மலை உச்சியில் இருந்து பாதாளத்தில் விழுந்த
NDTV அதிபர் பிரணாய் ராய்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
வெளிநாட்டுக்குத் தப்பி ஓட முயற்சி செய்தபோது
மும்பை விமான நிலையத்தில்  விமானம் ஏற
பிரணாய் ராய் தம்பதியினர் அனுமதிக்கப் படவில்லை.
அண்மைச் செய்தியான இது மிகுந்த சோகத்தைத் தந்தது.

இந்தியாவின் முதல் செபாலஜிஸ்ட் (psephologist)) பிரணாய்
ராய் ஆவார். இந்த உண்மையை தமிழ்ச் சமூகத்தின்
பொதுவெளியில் முதன் முதலில் கூறியவன் நான்.
இதை நான் எழுதியது 1985ல்.

1985ல் செபாலஜி (psephology) பற்றி நான் எழுதிய போது
செபாலஜி என்பதற்கு அர்த்தம் தெரிந்தவர்கள்
தமிழ்நாட்டிலேயே நாலைந்து பேர்தான். பிரணாய் ராய்
பற்றி அறிந்தவர்களும் வெகு சிலரே. அப்போதெல்லாம்
தூர்தர்ஷன் என்னும் அரசாங்க டிவியும் சன் டிவியும்
மட்டும்தான். பலரிடமும் டிவி கிடையாது. இன்றுள்ளது
போல் பல டிவி சானல்கள் அன்று கிடையாது. ஏன்,
அக்காலத்தில் மொபைல் போன் கூடக் கிடையாது.

செபாலஜி என்று நான் எழுதியபோதும் பேசியபோதும்
பிரணாய் ராயை அறிமுகம் செய்தபோதும், அது
வெகு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளப் பட்டது.
தமது கணிப்புகளை எந்த அளவு நம்பலாம் என்று
கூறும்போது, தமது கணிப்புகளின் confidence level
68 சதம் என்று மட்டுமே பிரணாய் ராய் குறிப்பிட்டு
இருந்தார். இன்று செபாலாஜி ராட்சஸத் தனமாக
வளர்ந்து விட்டது.

நிற்க. 2019 தேர்தலின் பின் பிரணாய் ராய் ஒரு
ஆங்கிலப் புத்தகம் எழுதி வெளியிட்டு இருந்தார்.
அப்புத்தகம் The verdict: decoding India's elections என்ற
புத்தகம் ஆகும். எத்தனை பேர் தமிழ்நாட்டில் இந்தப்
புத்தகத்தைப் படித்திருப்பார்கள் என்று அறிய
விரும்புகிறேன். பூஜ்யம் பேர் என்று நான் அறிய நேரலாம்.

நானும் இந்தப் புத்தகத்தை முழுவதுமாகப் படிக்கவில்லை.
படிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை. ஆனால்
அந்தப் புத்தகத்தில் ஒரு உண்மையை பிரணாய் ராய்
அடித்துக் கூறி இருந்தார். என்ன உண்மை அது?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs)
பற்றிய உண்மை அது. இந்தியாவின் EVMகளை
யார் எவராலும் மோசடி செய்ய இயலாது என்றும்
அமெரிக்க EVMகளை விட இவை உயர்ந்தவை என்றும்
பிரணாய் ராய் அதில் நிறுவி இருந்தார்.

இந்தியாவில் உள்ள ஆங்கில டிவிக்களில் பிரணாய்
ராயின் NDTVயானது  தீவிரமாக காங்கிரசை
ஆதரிக்கும் சானல் என்ற உண்மையை சிலரேனும்
அறிந்திருக்கலாம். தீவிர பாஜக எதிர்ப்பு சானல் அது.

சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சொல்ல
ஆரம்பிக்கவில்லை. இவ்வளவு விஷயத்தையும்
சொல்லாமல், எடுத்த எடுப்பிலேயே சொல்ல
வந்ததைச் சொல்ல முடியாது. காரணம் தமிழ்ச்
சமூகத்தின் புரிதல் மட்டம் அந்த அளவுக்குத்
தாழ் நிலையில் உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிநாடு தப்பிச் செல்ல
முயன்ற புகாரின் பேரில், மும்பை விமான நிலையத்தில்
விமானம் ஏற முயன்றபோது, பிராணாய்  ராயும் அவரின்
மனைவி ராதிகா ராயும் தடுக்கப்பட்டுத் திருப்பி
அனுப்பப் பட்டனர் என்ற செய்தி ஆங்கிலச் சானல்களை
ஆங்கிலப் பத்திரிகைகளை உலுக்கியது.

வங்கிகளில் கடன் வாங்கி திரும்பிச் செலுத்தவில்லை
என்ற குற்றச்சாட்டும், அன்னியச் செலவாணி விதி மீறல்
என்ற செபி (SEBI) அமைப்பின் குற்றச்சாட்டும் அவர்
மீது உள்ளது.

டாக்டர் சுவாமி vs பிரணாய் ராய்!
----------------------------------------------------
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் நகரத்திற்கு
பிரணாய் ராய் தப்பிச்ச செல்லப் போகிறார் என்று
CBIயை எச்சரித்தார் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி.
பார்க்க : அவரின் ட்வீட் தேதி: ஜூன் 15, 2019.

அது போய் என்றும், டாக்டர் சுவாமி ஒரு கேவலமான
பொய்யன் என்றும் கயவாளிப்பயல் என்றும் பிரணாய்
ராய் பதிலுக்கு ட்வீட் செய்தார்.
பார்க்க: பிரணாய் ராய் ட்வீட் தேதி: அதே ஜூன் 15, 2019.

பிரணாய் ராயின் ட்வீட்டைப் படித்தவுடன் எனக்கு
டாக்டர் சுவாமி மீது கடும் கோபம் வந்தது. இந்த ஆள்
ஏன் இப்படி பொய் சொல்லிக் கொண்டு திரிகிறான்
என்று எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

ஆனால், பிரணாய் ராய் பிடிபட்டதுமே எனக்கு
உண்மை விளங்கியது. டாக்டர் சுவாமி சொன்னது
உண்மைதான் என்பது CBIயம் அமலாக்கப் பிரிவும்
எடுத்த நடவடிக்கை மூலமாகத் தெரிய வந்தது.
(பார்க்க: டாக்டர் சுவாமியின் ட்வீட் தேதி:ஆகஸ்ட் 9, 2019)  

ஊழலும் கடன் வாங்கி விட்டு வங்கிகளை ஏமாற்றுவதும்
குரோனி முதலாளிகளின் பண்பு. இதை முதலாளித்துவம்
அனுமதிக்காது. இனி என்ன? கம்பி எண்ண வேண்டியது
மட்டும்தான் பாக்கி உள்ளது!

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
**************************************************

இணைக்கப்பட்ட மூன்று ட்வீட்களையும் ஆங்கிலம்
அறிந்த வாசகர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
அப்போதுதான் உண்மை தெரிய வரும்.

பிரணாய் ராய் என்னும் குரோனி முதலாளி!

புதிய பொருளாதாரக் கொள்கை, மற்றும்
LPG கொள்கைகள் யாவும் நரசிம்மராவ் காலத்தில்
விதைக்கப் பட்டன. மன்மோகனின் பத்தாண்டு
ஆட்சியில் குரோனி முதலாளித்துவம் அசுரத் தனமாக
வளர்ந்தது. குரோனி முதலாளிகள் புற்றீசலாகப்
பெருகி வளர்ந்தனர்.

குரோனி முதலாளித்துவம் என்றாலே பிறழ்நெறி
முதலாளித்துவம் என்று பொருள். இவர்கள் எந்தச்
சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள். குரோனி
முதலாளிகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்.

குரோனி முதலாளித்துவம் ஒழிய வேண்டும்!


பிரணாய் ராய் ஒரு குரோனி முதலாளி.
இவரைப்போல நிறைய குரோனி முதலாளிகள்
நாட்டிலுள்ளனர். இவர்கள் ஒழிக்கப் பட வேண்டும்.
குறோணி முதலாளித்துவம் என்றால் என்ன என்று
வாசகர்கள் நன்கு அறிந்து கொண்டால் மட்டுமே
இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலும்.


வண்டி வண்டியாக அறிக்கை விட்டு இருக்கிறார்
பிரணாய் ராய். அனால் எந்த நாட்டுக்குச் செல்ல
இருந்தார் என்று ஒரு வரிகூட எழுதவில்லை.
இதில் இருந்தே அவர் ஒரு மோசடிப் பேர்வழி
என்பது தெரிந்து விடுகிறது.







  

                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக