திங்கள், 12 ஆகஸ்ட், 2019

கவிதைகள்
தோடுடைய செவியன்களின் மெய்த்தேட்டம்
-------------------------------------------------------------------------   
வீரை பி இளஞ்சேட்சென்னி
-------------------------------------------------------------------------
மார்க்சியம்
லெனினியம்
தலித்தியம்
பெண்ணியம்
பின் நவீனத்துவம்
முன் புராதனத்துவம்
யாவும்
அங்காடிப் பேழைகளில்.
போங்கடா மயிரான்களா
என்று ஆரோகணிக்கின்றான்
நுகர்வியப் புரவி மீது
ஒற்றைக் கடுக்கன் அணிந்த
கான்ட்டம்ப்ரரி டமில் யூத்
இரைச்சலாய் புரவிகளின் குளம்படிகள். 
*************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக