திங்கள், 16 பிப்ரவரி, 2015

மார்க்சிஸ்ட் கட்சிக்கு மேலும் மரண அடி!
மேற்கு வங்க இடைத்தேர்தல் முடிவுகள்!!
மார்க்சிஸ்ட்டை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது பாஜக!!
---------------------------------------------------------------------------------------------
1) மேற்குவங்கத்தில் பாங்கான் மக்களவைத் தொகுதி,
 கிருஷ்னகஞ்ச் சட்டமன்றத் தொகுதி ஆகிய இரண்டுக்கும் 
நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (16.02.2015)
அறிவிக்கப் பட்டன.
2) இரண்டிலும் ஆளும் கட்சியான திரணமூல் காங்கிரஸ் 
வென்றது.
3) கிருஷ்ணகன்ச் தொகுதி முடிவு:
------------------------------------------------------ 
சத்யஜித் பிஸ்வாஸ் ( TMC): 95469 வாக்குகள் 
மானபெந்திரா ராய் (BJP):        58436  வாக்குகள் 
அபூர்வா பிஸ்வாஸ் (CPM);    37620  வாக்குகள்.
முடிவு: திரனமூல் வெற்றி. மார்க்சிஸ்ட் மூன்றாம் 
இடத்துக்குத் தள்ளப் பட்டது. கடந்த 2011 தேர்தலில்,
இத்தொகுதியில் இரண்டாம் இடத்தில் இருந்த மார்க்சிஸ்ட்
கட்சி, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, தற்போது 
மூன்றாம் இடத்துக்குத் தள்ளப் பட்டது.
-------------------------------------------------------------------------------- 
4) பாங்கான் லோக் சபா  தொகுதி முடிவு:
இங்கு TMC பிரம்மாண்டமான வெற்றி பெற்றுள்ளது.
வாக்கு வித்தியாசம்: 2,11,794 
கடந்த 2014 தேர்தலில் வாக்கு வித்தியாசம் 1,46,000.
கடந்த தேர்தலை விட TMC தனது வாக்கு வித்தியாசத்தை 
அதிகரித்துள்ளது.
மாமாதபால தாக்கூர் (TMC): 5,39,990
தேபேஷ் தாஸ் (CPM); 3,28,196
சுப்ரதா தாக்கூர்(BJP):  3,14,119
காங்கிரஸ் நான்காம் இடம், படுதோல்வி.
--------------------------------------------------------------------------------------------
மேற்கு வங்கத்தில் தனது வாக்குவங்கியை மம்தா 
கட்சியிடமும், பாஜகவிடமும் பறிகொடுத்து விட்டு 
இறுதி ஊர்வலத்துக்குத் தயாராக நிற்கிறது  CPM கட்சி.
மக்கள் ஆதரவை இழந்து அனாதையாகி நிற்கும் 
மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிர்காலம் இனி 
விண்ணுலகில்தான் என்று புலம்புகிறார்கள் தோழர்கள்.
************************************************************8        
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக