திங்கள், 23 பிப்ரவரி, 2015

மார்க்சிஸ்ட் கட்சியில் ( கேரளம்) பிளவு!
மாநில மாநாட்டில் பிளவு வெடித்தது!
---------------------------------------------------------------
கேரளம் மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கட்சியின் 
மாநில மாநாடு ஆலப்புழையில் நடந்து வருகிறது.
மாநாட்டில் ஆண்டறிக்கை வாசிக்கப் பட்டது.
ஆண்டறிக்கையின் சில பகுதிகளை ( அமைப்பு நிலை பற்றியது)
ஆட்சேபித்து வி எஸ். அச்சுதானந்தன் வெளிநடப்புச் செய்தார்.
------------------------------------------------------------------------------------------ 
அப்போது மேடையில் அமர்ந்து இருந்த மேலிடத் 
தலைவர்கள் பிரகாஷ் காரத்தும் யெச்சூரியும் கடும் 
அதிர்ச்சி அடைந்தனர்.
--------------------------------------------------------------------------------
மாநாட்டு அமர்வின்போது வெளிநடப்புச் செய்த அச்சுதானந்தனோ,
பின்னர் ஆலப்புழையில் இருந்தே வெளியேறி திருவனந்தபுரம்
வந்து விட்டார். உடனடியாகத் திரும்பி வந்து மாநாட்டில்
பங்கேற்க வேண்டும் என்றும், மீறினால் கட்சியில் இருந்து 
நீக்கப் படுவது உறுதி என்றும் பிரகாஷ் காரத் எச்சரித்து 
உள்ளார்.
---------------------------------------------------------------------------------------------
அச்சுதானந்தனும், கேரளா மாநிலச் செயலாளர் பினராயி 
விஜயனும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே கோஷ்டிச் 
சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் ஆட்களை 
இவர் தோற்கடிப்பதும், இவர் ஆட்களை அவர் தோற்கடிப்பதும் 
தான் இவர்கள் இருவரும் செய்து வரும் புரட்சிப் பணி.
---------------------------------------------------------------------------------------------- 
இதற்காக இருவருமே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினருடன் 
கள்ளக் கூட்டு சேர்ந்து, எதிர் கோஷ்டி ஆட்களைத் தோற்கடிப்பது 
என்பதை ஒரு நடைமுறையாகக் கொண்டுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------- 
மார்க்சிஸ்ட் கட்சி ஒரு போலிக் கம்யூனிஸ்ட் கட்சி என்று 
இவர்கள் இருவரும் நிரூபித்து உள்ளனர். போலிக் கம்யூனிஸ்ட்கள் 
என்று இவர்களை நாம் குறிப்பிடும் போதெல்லாம் நம் மீது 
கோபம் கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சியின் அப்பாவித் 
தொண்டர்கள், இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
----------------------------------------------------------------------------------------------
அச்சுதானந்தனும் விஜயனும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 
சுடுகாட்டில் இடம் ஒதுக்கி விடுவார்கள், பாருங்கள்!
----------------------------------------------------------------------------------------          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக