செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

தா பாண்டியன் பிரச்சாரத்தால் ஸ்ரீரங்கத்தில் 
மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு வாக்குகள் குறைவு!
கிடைக்கிற ஓட்டையும் கெடுத்த தா பாண்டியன்!
-------------------------------------------------------------------------------- 
1) ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் அண்ணாதுரையை 
ஆதரித்து சூறாவளிப் பிரச்சாரம் செய்தார் தா பாண்டியன்.
2) இவர் பிரச்சாரம் செய்யாமல் இருந்தால், கூடுதலாக 
ஒரு 500 ஓட்டு கிடைத்திருக்கும், கெடுத்து விட்டாரே 
பாவி மனுஷன் என்று வருத்தப் பட்டனர் CPM தோழர்கள்.
3) என்ன என்று விசாரித்தோம். CPM தோழர்கள் சொன்ன 
விளக்கம் இதுதான்.
4) தா.பாண்டியனின் தலையைப் பார்த்தவுடனே, ராஜனை 
மிஞ்சிய ஒரு ராஜ விசுவாசி, யாரையும் மிஞ்சிய ஜெயா 
விசுவாசி என்று மக்கள் உணரத் தொடங்கி விடுகின்றனர்.
அப்படி ஒரு பிம்பத்தைக் கட்டி அமைத்தவரும் அவரே;
வேறு யாருமில்லை.
5) ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்கப் பாடுபடுவேன் என்று 
சொன்ன ஒரே ஒரு கோமாளித் தலைவரும் இவர்தான்.
6) எனவே, இவர் வந்து பிரச்சாரம் செய்கிற இடத்தில் 
எல்லாம், நமக்கு விழ வேண்டிய ஓட்டுகள் இரட்டை இலைக்கு 
விழுந்து விடுகின்றன என்று மூக்கைச் சிந்தினார்கள் 
CPM தோழர்கள்.
7) நமக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.
8) கேட்டுக் கொண்டே இருந்த இசக்கிமுத்து அண்ணாச்சி 
காறித் துப்பினார்.
****************************************************8888888888888       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக