வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

கண்ணை விற்றுச் சித்திரமா?
காவிரி நீரைக் கொடுத்து கொக்கொ கோலாவா?
---------------------------------------------------------------------------- 
அமெரிக்காவின் கொக்கோ கோலா நிறுவனம் 
தனது குளிர்பானத் தயாரிப்பு ஆலையை 
பெருந்துறை நகரில் நிறுவப் போகிறது.
இதற்குத் தமிழகத்தின் அதிமுக அரசு 
அண்மையில் அனுமதி வழங்கி உள்ளது.
பெருந்துறையின் சிப்காட் பகுதியில் 72 ஏக்கர் 
பரப்பளவில் இந்த ஆலை அமைகிறது.
ஒரு நாளுக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரைக் 
காவிரி ஆற்றில் இருந்து எடுத்துக் கொள்ள 
கொக்கோ கோலா நிறுவனத்துக்கு அதிமுக 
அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதை எதிர்த்து பெருந்துறை மக்கள் 
போராடி வருகிறார்கள். மக்களின் நியாயமான 
இப்போராட்டத்தை அதிமுக அரசு மிகக் 
கடுமையாக ஒடுக்கி வருகிறது.    

வேண்டாம் கொக்கோ கோலா!
காவிரி ஆற்று நீரைப் பறி  கொடுக்க மாட்டோம்! 
மக்கள் போராட்டம் வெல்க!
அதிமுக அரசின் அடக்குமுறையை முறியடிப்போம்! 

**************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக