வியாழன், 19 பிப்ரவரி, 2015

AK-47 தெரியும்! அது என்ன AK-67?
------------------------------------------------------- 
1) AK-67 என்பது அரவிந்த் கேஜ்ரிவால் 67 இடங்களில் 
வென்றார் என்று பொருள்படும்.
2) டில்லியில் கேஜ்ரிவால் வென்றதை முன்னிட்டு,
இங்கு தமிழ்நாட்டில் உள்ள ஆம் ஆத்மிகள் 
கர்வத்துடனும் ஆணவத்துடனும் நடந்து கொள்கிறார்கள்.
3) வல்லமை வாய்ந்த நரேந்திர மோடியின் முகத்தில் 
எட்டி உதித்தவர் அல்லவா இவர்களின் தலைவர் கேஜ்ரிவால்!
4) எனவே, லோக்கல் ஆம் ஆத்மிக்களுக்குத் திமிர் 
இருக்கும்தான். இருந்துவிட்டுப் போகிறது, அதனால் என்ன?
------------------------------------------------------------------------------------------------- 
5) மக்கள் என் பக்கம் என்கிறார் கேஜ்ரிவால். மக்களைத் 
தன பக்கம் இழுத்துக் கொண்டவர்களுக்கு கர்வம் 
இருக்கும்தான்.திமிர் இருக்கும்தான்!
------------------------------------------------------------------------------------- 
6) 95 வருஷம் கட்சி நடத்தியும் மக்களைத் தங்கள் 
பக்கம் இழுக்க முடியாத CPI போன்ற போலிக் 
கம்யூனிஸ்ட்களுக்குத் தான் திமிர் இருக்கக் கூடாது.
7) தா பாண்டியன், நல்லகண்ணு போன்ற போலிக் 
கம்யூனிஸ்ட்கள், டில்லிக்குப் போய் கேஜ்ரிவாலின்
காலை அமுக்கி  விடட்டும்.  
----------------------------------------------------------------------------------------- 
8) நாங்கள் (இடதுசாரிக் கூட்டணி) 15 இடங்களில் போட்டி 
இடுகிறோம். மீதி 55 இடங்களிலும் கேஜ்ரிவாலை 
ஆதரிக்கிறோம் என்று அறிவித்த போலிக் கம்யூனிஸ்ட்
தலைவர்கள் கேஜ்ரிவாலுக்கு சிசுரூசை செய்யட்டுமே!   
----------------------------------------------------------------------------------------- 
95 வருஷம் கட்சி நடத்தியும் ஏன் மக்கள் நம்மை 
நம்பவில்லை என்ற கேள்விக்கு விடை தேடுங்கள்.
போலிகளே, இதுதான் இப்போது முக்கியம்.
***************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக