வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

இன்னுமா 1552 பேர் நம்மள நம்புதான்?
----------------------------------------------------------- 
சுப மங்களமாக இனிதே முடிந்தது மார்க்சிஸ்ட் கட்சியின் 
21ஆவது மாநில மாநாடு, நேற்று (19.02.2015.).
இசக்கிமுத்து அண்ணாச்சி மாநாட்டுக்குப் போய் விட்டு 
வந்து விட்டார்.
------------------------------------------------------------------------
மாநாட்டில் சாப்பாடு பிரமாதம் என்றார் அண்ணாச்சி.
பிரியாணி போட்டாங்களா என்றேன்.
ஏ, அவுங்க சைவம்லாடே , பியூர் வெஜிடேரியன் 
சாப்பாடுல்லா போட்டான்; தூள் பரத்திப் புட்டானே, 
சமையல் கான்ட்ராக்ட் கூட யாரோ ஒரு அய்யரு 
என்று இழுத்தார் அண்ணாச்சி.
" பிராமணஹ போஜனப் பிரியஹ" என்று சிவாஜி 
கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் அறிஞர் அண்ணா 
எழுதியது எனக்கு நினைவுக்கு வந்தது.
----------------------------------------------------------------------------- 
சரி அண்ணாச்சி, ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு பற்றி 
ஏதேனும் விவாதம் நடந்ததா என்றேன்.
விவாதம் என்னத்தடே நடத்த, எல்லாம் 
ஆச்சரியப் பட்டுக்கிட்டுலா  கிடக்கான் என்றார் அண்ணாச்சி.
என்னத்துக்கு ஆச்சரியம் என்றேன் நான்.
---------------------------------------------------------------------------- 
" இன்னுமா 1552 பேரு நம்மள கம்யூனிஸ்ட்டுன்னு
நம்புதான்"ன்னு எல்லாரும் ஆச்சரியம்லாடே படுதான்
என்றார் அண்ணாச்சி.
டெல்லியில் இருந்து வந்திருக்காங்களே காரத், எச்சூரி,
அவுங்க அபிப்பிராயம் என்ன சொன்னாங்க என்றேன் நான்.
------------------------------------------------------------------------------------ 
" ஏ என்னத்தெ காரட்டு பீட்ருட்டுன்னுட்டுக் கெடக்கே, 
டெல்லில எப்படி 49 பேரு நமக்கு ஓட்டுப் போட்டான், 
இன்னுமா இவனுக நம்மள கம்யூனிஸ்ட்டுன்னு
நம்பிதான்" ன்னு அவரே ஆச்சரியப் பட்டுக்கிட்டுக் 
கெடக்காரு" என்று உண்மையைப் போட்டு உடைத்தார் 
இசக்கிமுத்து அண்ணாச்சி!
---------------------------------------------------------------------------------
***************************************************************
     
    
              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக