புதன், 4 பிப்ரவரி, 2015

ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்த்துக் குரைப்பதால் மட்டும் 
ஆர்.எஸ்.எஸ்.ஐ வீழ்த்த முடியுமா? 
தோழர் தொல் திருமாவளவன் பேசியதை முன்வைத்து 
கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் அணிகளுக்கு ஒரு கேள்வி!  
----------------------------------------------------------------------------------------- 
ஆர் .எஸ்.எஸ்-ஐ சித்தாந்த ரீதியாக, அமைப்பு ரீதியாக,
அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு CPI, CPM கட்சிகள் 
எவ்வளவு வலிமை பெற்றுள்ளன? எத்தனை முழுநேர 
ஊழியர்கள் சுகங்களைத் துறந்து கட்சிப்பணியாற்றத்
தயாராக உள்ளனர்? பார்ப்பன குட்டி முதலாளித்துவ 
மேனாமினுக்கிகளை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் 
செயல்பாடுகளை முறியடிக்க இயலுமா? சிந்திப்பீர்!
------------------------------------------------------------------------------------------    

திருமணமே செய்து கொள்ளாமல்  
முழுநேரப்பணி ஆற்றும் 
பதின்மூன்றாயிரம் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள்!
------------------------------------------------------------------------------

"எப்போதும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும்;
ஆட்சி அதிகாரத்தை இழந்து விடக்கூடாது;
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
அதற்கென்று இந்தியாவில் 13 ஆயிரம் பேர் 
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் 
18 வதில் இருந்து 90 வயது வரையில் முழுநேரப் 
பணியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள்".
..... தொல் திருமாவளவன்
செய்தி ஆதாரம்:
------------------------- 
நமது தமிழ்மண், சனவரி 2015, பக்கம்-20.
நமது தமிழ் மண் ஏட்டின் ஆசிரியர்:
தொல் திருமாவளவன். 
---------------------------------------------------------------------------------------------------- 
குறிப்பு: ஆர்.எஸ்.எஸ்சின் அமைப்பு வலிமை குறித்து 
இந்துத்துவ எதிர்ப்பாளர்களுக்கு உணர்த்தும் பொருட்டு 
திருமாவளவன் அவர்கள் கூறியது இது. வெறும் 
குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கித் தனத்தை மட்டும் 
வைத்துக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்கொள்ள 
இயலாது என்பதை வலியுறுத்தும் பொருட்டுக் கூறியது 
இது. இடதுசாரி மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு இயக்கங்களில் 
எத்தனை பேர் திருமணமே செய்து கொள்ளாமல் 
முழுநேர ஊழியர்களாக வேலை செய்கிறார்கள்? 
********************************************************     
காரல் மார்க்ஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக