வியாழன், 19 பிப்ரவரி, 2015

போலிக் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான தீர்ப்பு   
என்பது மார்க்சியத்துக்கு எதிரான தீர்ப்பு அல்ல.
------------------------------------------------------------------------------------ 
டில்லி மாநிலத் தேர்தல்,
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்.
மேற்கு வங்க கிருஷ்ணகன்ச் இடைத் தேர்தல் 
இங்கெல்லாம் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளை 
மக்கள் விரட்டி விரட்டி அடித்துள்ளனர்.
இதனால், மார்க்சியத்தை மக்கள் விரும்பவில்லை 
என்று பொருள் கொள்ள முடியுமா?
நிச்சயமாக முடியாது.
----------------------------------------------------------------------------- 
ஏக் தோ சீட்டுக்காக செங்கொடியை போயஸ் 
தோட்டத்தில் அடகு வைத்துவிட்ட இப்போலிகளுக்கு
மார்க்சியம் பற்றிப் பேச அருகதை இல்லை என்றுதானே 
மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர்.
----------------------------------------------------------------------------------------- 
மக்கள் மார்க்சியத்தை விரும்புகிறார்கள்!
ஆனால், போலிகளை வெறுக்கிறார்கள்.
இதுதானே உண்மை!
-----------------------------------------------------------------------------------
டி.கே. ரங்கராஜனுக்கு எம்.பி பதவி, அம்மா போட்ட பிச்சை 
என்றும், யாருடைய தயவில் டி.ராஜா டில்லியில் 
எம்.பி.யாக வலம் வர முடிகிறது என்றும் கொக்கரிக்கும்
அதிமுகவினரைப் பார்த்து தலைகுனிந்து போவதைத் 
தவிர இந்தப் போலிகளுக்கு என்ன வழி இருக்கிறது?
----------------------------------------------------------------------------------- 
போலிகளே, நீங்கள் மார்க்சியம் பேசாதீர்கள் என்றுதானே 
மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளார்கள்.
--------------------------------------------------------------------------------- 
இது போலிகளுக்கு எதிரான தீர்ப்பே தவிர,
மார்க்சியத்துக்கு எதிரான தீர்ப்பு அல்ல.
-----------------------------------------------------------------------------------
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக