புதன், 18 பிப்ரவரி, 2015

என்னுடைய இளமைக் காலத்தில் "கண்டது கற்கப் பண்டிதன்
ஆவான்" என்பது  என் தாரக மந்திரமாக இருந்தது. கண்டதையும்
கற்றேன். ( அது இன்று பயன்படுகிறது).
ஆனால், தற்போது என் தாரக மந்திரம் இதுதான்.
'கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல ஆதலினால்
ஆராய்ந்து அமைவுடைய கற்கவே
பாலுண்  குருகின் தெரிந்து."
மேற்கண்ட நாலடியார்ச் செய்யுள்தான் இன்று எனக்கு
வழிகாட்டும் கோட்பாடு. பொருள் புரிகிறதா?
ஆராய்ந்து அமைவுடைய கற்பது! எல்லாவற்றையும் கற்பது அல்ல.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக