புதன், 18 பிப்ரவரி, 2015

மார்க்சிஸ்ட்களுக்கு அசாமிலும் அடி!
அடி மேல் அடி விழுவது ஏன்?
----------------------------------------------------------------- 
அண்மையில் அசாம் மாநிலத்தில் உள்ளாட்சி 
அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது.
வழக்கம் போலவே, இங்கும் மார்க்சிஸ்ட்கள் படுதோல்வி 
அடைந்து உள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------- 
இங்கு பாஜக பெரும் வெற்றி அடைந்துள்ளது.
அடுத்து 2016இல் வரும் சட்டமன்றத் தேர்தலில் 
பாஜக எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடும் என்று 
எல்லா அரசியல் நோக்கர்களும் எழுதி உள்ளனர்.
---------------------------------------------------------------------------- 
காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய் நடத்தும் 
ஊழல் மலிந்த ஆட்சியும், அவரது மகன் அரசு நிர்வாகத்தில் 
தலையிட்டுச் செய்யும் அத்துமீறல்களும், பாஜகவின் 
செல்வாக்குப் பெருகிட முக்கியமான காரணம்.
--------------------------------------------------------------------------------- 
மார்க்சிஸ்ட்கள் தங்களின் சித்தாந்த ஓட்டாண்டித்
தனத்தால், பாஜகவின் செல்வாக்குப் பெருகிட வழி வகுத்தனர்.
அசாம் மக்கள் போலிகளுக்கு மரண அடி கொடுத்துள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------- 
தந்தை பெரியார் பாணியில், 
"பாம்பையும் போலிக் கம்யூனிஸ்ட்டையும் கண்டால்,
பாம்பை விட்டுவிடு, போலிக் கம்யூனிஸ்டை அடி!" 
என்ற முடிவை அசாம் மக்கள் எடுத்துள்ளனர்.
*************************************************************88      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக