புதன், 15 ஏப்ரல், 2020

சீனா அழியப் போவது திண்ணம்!
கொரோனா பற்றிய உண்மைகளை மறைத்த சீனா
போர்க்குற்றம் புரிந்துள்ளது!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
விடுதலைப் புலிகளை அழித்ததில் இலங்கையானது
போர்க்குற்றம் புரிந்துள்ளது என்ற குற்றச்சாட்டின் மீது
விசாரணை நடந்து வருகிறது.

அதே போல, கொரோனா பற்றிய பல தகவல்களை
திட்டமிட்டே மறைத்து, உலக நாடுகளை ஏமாற்றிய
குற்றத்துக்காக சீனா மீது போர்க் குற்றம் போன்ற
குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறும்.

இந்தியாவானது ரூ 2 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு
சீனா மீது வழக்குத் தொடர வேண்டும்.

போர்க்குற்ற விசாரணையில் இலங்கையை உலக நாடுகள்
அனைத்தும் சீனா உட்பட சேர்ந்து பாதுகாக்கின்றன.
ஆனால் கொரோனா விசாரணையில் சீனாவைப்
பாதுகாக்க நாதி இருக்காது.

எப்படியும் இந்த ஆண்டே விசாரணை தொடங்கி விடும்
என்று எதிர்பார்க்கிறோம்.

மூன்று முன் குறிப்புகள்!
----------------------------------------
1) கொரோனா வைரஸை சீனாவே தனது ஆய்வகத்தில்
செயற்கையாகத் தயாரித்தது என்பது போன்ற
கேடுகெட்ட முட்டாள்தனத்துக்கு இங்கு இடமில்லை.

2) கொரோனா வைரஸ் என்பது ஒரு உயிரி ஆயுதம்
(bio weapon) என்றும் நடப்பது உயிரி யுத்தம் (bio war)
என்றும் பேசும் அடிமுட்டாள்தனங்களுக்கு இங்கு
இடமில்லை.  

3) சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடாகவே இன்னமும் இருக்கிறது
என்னும் இழிந்த முட்டாள்தனத்தின் முதுகெலும்பை
குறிப்பது எமது பிரதான வேலை.

போல்ஷ்விக் கட்சியின் வெகுஜன அமைப்பான மஜஇக
(மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) சார்பாக
சீனா ஒரு ஏகாதிபத்திய நாடா என்ற நூல் வெளியிடப்
பட்டுள்ளது. அந்த நூலில் சீனா ஒரு ஏகாதிபத்திய நாடே
என்று ஆணித்தரமாக நிருவப் பட்டுள்ளது. இந்தப்
புத்தகத்தை இன்னும் படிக்காதவர்கள் தாராளமாகத்
தற்கொலை செய்து உயிரை விடலாம்.
***************************************************    





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக