சனி, 11 ஏப்ரல், 2020

ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்று
எல்லா சோஷலிச நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக
வீழ்ச்சி அடைந்த பின்னால், வலதுசாரி எழுச்சி ஏற்படுவது
இயற்கையே. அப்படி ஏற்படாமல் இருந்தால்தான்
ஆச்சரியம்.  



வரலாற்றுச் சக்கரம் ஒருபோதும் பின்னோக்கித்
திரும்புவதில்லை. எனவே 1917க்கோ பண்டைக்கால
பழமைவாதத்துக்கோ திரும்பிச் செல்ல யாராலும்
இயலாது.

சமகால உலகில், இடதுசாரி வலதுசாரி என்ற
பதங்கள் பாரம்பரியமான அர்த்தத்தை இழந்து
விட்டன. அதாவது மார்க்ஸ் காலத்திய அர்த்தம்
இன்று  பொருந்தாது.

என்ன காரணம்? சமூகமானது தொடர்ந்து மாறிக்
கொண்டும் இயங்கிக் கொண்டும் இருப்பதால்,
சமூகம் advancement என்பதை நோக்கித் தவிர்க்க
இயலாமல் செல்கிறது. அந்த அளவுக்கு 
வலதுசாரித் தன்மையானது, தன் வலதுசாரித் 
தன்மையை இழந்து விடுகிறது.

வலதுசாரித் தன்மையை ஒரு solutionன் strengthஉடன்
ஒப்பிடுவோம். Normality of the solution என்பது
வலதுசாரித் தன்மையின் அடர்த்தியைக்
குறிப்பிடுவதாக வைத்துக் கொள்வோம்.
காலப்போக்கில் சமூகம் முன்னேறி முன்னேறிச்
செல்வதன் விளைவாக, வலதுசாரித் தன்மை
குறைந்து கொண்டே போகும்.
     

இல்லை; இது நிகழ்தகவு பற்றிய கணக்கு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக