வெள்ளி, 24 ஏப்ரல், 2020

பட்டினிச் சாவுகளும்
குட்டி முதலாளித்துவமும்!
தயிர்சாதக் கண்ணோட்டமா? இரத்த அடியா?
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
பிரிட்டிஷ் இந்தியாவில் பட்டினிச் சாவுகள் இருந்தன.
1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் பட்டினிச்
சாவுகள் இருந்தன; நீடித்தன.

1950களில், 1960களில் நாட்டில் பட்டினிச் சாவுகள் இருந்தன.
சாரு மஜூம்தார் நக்சல்பாரி இயக்கத்தை ஆரம்பித்த
1970களிலும் நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளில்
பட்டினிச் சாவுகள் இருந்தன.

இன்று இந்த 2020ல் இந்தியாவில் பட்டினிச் சாவுகள்
உண்டா? நக்சல்பாரி இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 1970க்கும்
இன்றைய 2020க்கும் இடையில் அரை நூற்றாண்டு காலம்
ஓடி மறைந்து விட்டது என்பதை நாம் முதலில் நினைவு
கொள்ள வேண்டும்.

இன்றைய 2020ல் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி
பட்டினிச் சாவுகள் கிடையாது என்ற உண்மையை மனதில்
இருத்த வேண்டும். இந்த வாக்கியத்தை வாசித்ததுமே
புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவம் அடிவயிற்றில்
கத்திக்குத்து விழுந்தது போல் அலறும்.

எப்போதுமே குட்டி முதலாளித்துவத்தால் உண்மையை
ஜீரணிக்க இயலாது. தற்போது கொரோனா சீசன்.
கொரோனாவால் போதிய அளவு சாவு விழவில்லையே
என்று ஏக வருத்தத்தில் இருக்கிறது குட்டி முதலாளித்துவம்.

தமிழ்நாட்டில் 20 பேருக்கு மேல ஒருத்தரும் சாகலியா,
அட தேவடியாப் பசங்களா இது நியாயமா என்று ஆழ்ந்த
வருத்தத்தில் உள்ளது குட்டி முதலாளித்துவம்.

1970 முதல் 2020 வரையிலான இந்த 50 ஆண்டுகளில் எந்த
மாற்றமுமே இந்திய சமூகத்தில்  நிகழவில்லையா?
இந்தியாவில் உள்ள எல்லா ஆறுகளிலும் அணைகளைக்
கட்டினாரே நேரு, அதனால் லட்சோப லட்சம் ஹெக்டேர்
நிலங்கள் பாசன வசதி பெறவில்லையா? விளைச்சல்
பெருகவில்லையா?

திருநெல்வேலி மாவட்டத்தில் 1940,1950களில் பாபநாசம்,
மணிமுத்தாறு என்ற இரண்டு அணைகள் செயல்பாட்டுக்கு
வந்தன. இந்த அணைகள் வந்த பிறகு அம்பாசமுத்திரம்
தாலுகாவில் நெல் உற்பத்தி எவ்வளவு என்பதையும்
அதற்கு முன்பு அங்கு நெல் உற்பத்தி எவ்வளவு என்பதையும்
வீரவநல்லூர், சேர்மாதேவியில் விவசாயம் பார்த்தபோது  
நேரடி அனுபவம் மூலம் அறிந்தவன் நான். மற்றும் ஊர்ப்
பெரியவர்களிடம் இருந்தும் அறிந்து கொண்டவன் நான்.

இந்தியாவில் இந்த 50 ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும்
உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் தங்கள் ஆட்சியின்போது
கணக்கற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளன.
தமிழ்நாட்டில் ராமச்சந்திர மேனன் முதல்வராக
இருந்தபோது பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத்
திட்டத்தைக் கொண்டு வந்தார்.

புஞ்சைப் பகுதியில் உள்ளவர்கள் பனைமர உயரத்துக்கு
அதாவது ஒரு பனை, ஒன்றரைப் பனை என்ற ஆழத்துக்குக்
கிணறு தோண்டினால்தான் தண்ணீர் வரும். அதற்கான
மின்சாரச் செலவை அரசே ஏற்றால்தான் விவசாயி வாழ
முடியும். இந்த நிலையில் மு கருணாநிதியின் இலவச
மின்சாரத் திட்டம் விவசாயிகளின் வாயிற்றில் பால்
வார்க்கவில்லையா?

இந்த 50 ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும்
நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை வரிசையாகத்
தொகுத்துப் பாருங்கள். கர்ப்பத்தில் உள்ள குழந்தை
முதல், கட்டையில் போகப் போகிற கிழவி வரை
(மேனன் இவளுக்கு முண்டச்சி பணம் வழங்கினார்)
அரசுகளின் நலத்திட்டங்களால் பயனடையாதோர் இல்லை
என்பதே உண்மை. அகில இந்திய அளவில் டாக்டர்
மன்மோகன்சிங் காலத்தில் கொண்டு வரப்பட்ட
உணவுப் பாதுகாப்புச் சட்டம் (Food Security Act) ஒரு
மகத்தான சோஷலிஸத் திட்டம் அல்லவா? சோஷலிச
நாடுகளைத் தவிர வேறெங்கும் இது போன்ற இலவச
உணவு வழங்கும் திட்டம் உண்டா?

கட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு
நலத்திட்டங்களை அறிவிப்பதுதான் நடப்பு அரசியல்.
2019 தேர்தலில் வென்ற மோடி, ஏழைப் பெண்களுக்கு
இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தைக்
கொண்டு வந்தார். இத்திட்டத்தால் கோடிக்கணக்கான
ஏழைப்பெண்களுக்கு மாதாமாதம் இலவச எரிவாயு
கிடைத்துக் கொண்டிருக்கிறது.

எனவே பட்டினிச் சாவு என்பதற்கெல்லாம் இன்று
இந்தியாவில் இடமில்லை. பட்டினிச்சாவுகள் திடீரென்று
ஏற்பட்டு விடுவதில்லை.மக்களுக்கு சோற்றுக்கு
வழியில்லை என்றதுமே பல்வேறு இடங்களில் கஞ்சித்
தொட்டிகள் திறக்கப்படும். அதன் பிறகு பல்வேறு
கட்டங்களைக் கடந்த பிறகே பட்டினிச் சாவுக்கான
நிலைமைகள் ஏற்படும்.

இந்திய  சமூகத்தை முறையாக ஆய்வு செய்யும் யாரும்
இங்கு பட்டினிச்சாவு இல்லை என்ற உண்மையை ஒத்துக்
கொள்ள வேண்டும். இது 1970 அல்ல; 2020.

இந்தியாவில் பட்டினிச் சாவு என்று பேசும் குட்டி
முதலாளித்துவத் தற்குறிப் பயல்களின் மண்டையை
உடைக்க வேண்டும். குட்டி முதலாளித்துவப் பயல்களைப்
பொறுத்தமட்டில், அவர்களிடம் தயிர்சாதக் கண்ணோட்டம்
எடுபடாது. ரத்த அடி அடிக்க வேண்டும்.
************************************************************ 
ஜெயலலிதாவின் அம்மா உணவகங்கள் பட்டினிக்கு
எதிரான பெரும் போர்முழக்கம் அல்லவா?


மருதுபாண்டியன் கயவாளிப் பயல்கள்; அடித்துக் கொல்லாமல்
விடிவு கிடையாது.
ரகுபதி



இது பாஜக ஆதரவு நிலைபாடு என்று கருதுவது பேதைமை.
இந்திய சமூகம் பற்றிய எனது ஆய்வு இது.
பட்டினிச் சாவுகள் இருந்த 1970 முதல் இன்று வரையிலான
50 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி எந்தப்
பிரக்ஞையும் இல்லாதவர்களே பட்டினிச் சாவுகள் பற்றிப்
பிரஸ்தாபிக்க முடியும்.

டாக்டர் மன்மோகன்சிங் கொண்டு வந்த உணவுப்
பாதுகாப்புச் சட்டம் ஒரு சோஷலிஸத் திட்டம் என்று
அடித்துச் சொல்கிறேன் நான். இது எப்படி பாஜக
ஆதரவாகும்?

நேரு கட்டிய அணைகளால் பெருகிய உற்பத்தி பற்றிப்
பேசுகிறேன்.இது எப்படி பாஜக ஆதரவு ஆகும்?
மு கருணாநிதியின் இலவச மின்சாரம் பற்றி
சிலாகிக்கிறேன். இது எப்படி பாஜக ஆதரவு ஆகும்?

முன்வைக்கப்படும்  எந்தத் தர்க்கத்துக்கும் எந்தவொரு
பதிலையும் சொல்லத் துப்பில்லாமல் பாஜக ஆதரவு என்று
உளறிவிட்டு ஓடுவதா?

பாஜக ஆட்சி என்பது கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத்தான்.
இங்கே ஐம்பதாண்டு ஆட்சிகள் அலசப் படுகின்றன.
கருத்து இருந்தால் பதிலளிக்க முயலவும். அவதூறில்
இறங்க வேண்டாம். நான் பாஜக ஆதரவு என்று நீங்கள்
சொன்னால், நீங்கள் கியூ பிராஞ்சு போலிசுக்கு
ஆள் காட்டிக் கொடுக்கும் இன்பார்மர் என்று நான்
சொல்லுவேன்.

இந்திய சமூகம் பற்றிய எனது ஆய்வு இது.
இங்கு இன்று பட்டினிச்சாவு கிடையாது.
இது தவறு என்றால், தவறு என்று நிரூபிக்கவும்.



தினமலரை அதில் வெளிவரும் "ஆய்வுகளை" (????)
அறிவார்ந்த சமூகம் ஏற்பதில்லை. அது பார்ப்பானின் மலம்.
பாஜக ஆதரவு தினமலரை சான்று காட்டுகிறீர்கள்.
இதற்கு வெட்கப்பட மாட்டீர்களா?




அவை ஏற்கத்தக்கவை அல்ல.
முதலாளித்துவ ஆய்வுகள்; அமெரிக்க ஏகாதிபத்திய
நலன்களை முன்னிட்டு ஆய்வுகள் என்ற பெயரில்
மக்களை ஏமாற்றும் இழிந்த பொய்கள் ஆகியவை
முதலாளியத்தால் ரெகுலராகப் பரப்பப் படுகின்றன.
அது மார்க்சிய ஆய்வு ஆகாது.


ஒரு காலத்தில் அரசை மட்டுமே வள்ளல் தன்மைக்கு
மக்கள் நம்பிக் கொண்டிருந்த காலம் இருந்தது. வளர்ச்சியின்
போக்கில் அந்த நிலைமையும் மாறி இருக்கிறது.

இன்று நிறையத் தன்னார்வலர்கள் அன்னதானத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். வள்ளலாரின் என்றும் அணையா
நெருப்பாக அடுப்பு எரிந்து கொண்டுள்ளது.

ஒரு சத்திரத்தில் போய்ச் சோறு சாப்பிட முயன்று
முடியாமல் போன சோகத்தை ஒளவையார் பாடியுள்ளார்.
(அண்டி நெருக்குண்டேன் தள்ளுண்டேன் சோறுண்டிலேன்)

நாகப்பட்டினம் காத்தான் சத்திரத்தில் சோற்றுக்காகக்
காத்துக் கிடந்த சோகத்தை காளமேகப் புலவர்
ஒரு வெண்பாவில் பாடி உள்ளார்.
(கத்துகடல் சூழ்நாகைக்  காத்தான்தன் சத்திரத்தில்) 

இன்று அந்த நிலை இல்லை. மாற்றங்ளை உணர வேண்டும்.
சோனியா மன்மோகனின் திட்டமான உணவுப் பாதுகாப்புச்
சட்டம் மகத்தான சோஷலிஸத் திட்டம். ஆனால் புழுவினும்
இழிந்த குட்டி முதலாளியத் தற்குறிகளுக்கு இதன் அருமை
தெரியாது. மன்மோகன் திட்டப்படி எவ்வளவு அரிசி
பருப்பு கோதுமை இலவசமாக மாதந்தோறும் வழங்கப்
படுகிறது என்று எத்தனை குட்டி முதலாளியர்களுக்குத்
தெரியும்?

 

மு க ஸ்டாலின் படம் போட்ட சாக்குகளைப் பார்த்தேன்.
இந்தச் சாக்குகளில் அரிசியை அடைத்து வைத்து
இருக்கிறார்கள். எதற்காகாக? ஏழை எளிய மக்களுக்கு
கொடுப்பதற்குத்தானே! யோசித்துப் பாருங்கள்.
பட்டினிச்சாவு ஏற்பட ஸ்டாலின் விடுவாரா?
அல்லது எடப்பாடிதான் விடுவாரா? இவர்கள் எல்லாம்
முட்டாள்களா?

பட்டினிச்சாவு இன்னும் ஏற்படவில்லையே என்ற
வயிற்ரஎரிச்சலில்   


இது லோக்கலாக நீங்கள் ஒன்றிரண்டு பேர்
உங்கள் விருப்பத்தை நிதர்சனமாகக் கற்பனை
செய்து கொண்டு இருக்கிறீர்கள். இதை நான்
எப்படி ஏற்க இயலும்?

நீங்கள் சொல்வது உண்மையெனில் இந்நேரம்
பிரதான இந்திய ஊடகத்தில் இந்தச் செய்தி
வந்திருக்கும். சோனியா ராகுல் போன்றவர்கள்
அரசை எதிர்த்து ஒரு தீவிரமான போரைப் பிரகடனம்
செய்திருப்பார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை.


நல்லது.
1) இதுவரை எத்தனை பேர் பட்டினியால்
செத்துள்ளனர்? எண்ணிக்கை எவ்வளவு?

2) எந்தெந்த மாநிலத்தில்? எந்தெந்த ஊரில் எத்தனை பேர்?

இதுபோன்று புள்ளி விவரங்களை ஆதாரத்துடன்
பதிவிடுக. அதன் பிறகு பேசலாம்.



   

 

  

    


     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக