செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மதிப்புக்குரிய ஐயா,

BODMAS rule என்று சொல்லப் பட்டாலும், கணிதத்தில்
BODMAS என்பது ஒரு RULE அல்ல. அது நம் வசதிக்காக
வைத்துக்கொண்ட ஒரு சம்பிரதாயமே (CONVENTION.

ஒரு Group with a binary opearation என்பதை எடுத்துக்
கொண்டால்,
Associative property
Distributive property
identity element
inverse
ஆகிய பண்புகள் மட்டுமே கணக்கில் வரும்.

a(b+c) = ab+ac என்பதுதான் கணித விதியே தவிர
BODMAS rule அல்ல. இது distributive property.

பல்வேறு கால்குலேட்டர்களில் BODMAS rule கணக்கில்
கொள்ளப் படுவதில்லை. உங்களின் மொபைலில்
உள்ள கால்குலேட்டரை நீங்கள் பரிசோதித்துப்
பார்க்கலாம்.

எனவே தற்போது மிகவும் தெளிவாக உரிய bracketகளுடன்
எழுதுவதை மட்டுமே கணித உலகம் ஏற்கிறது.
4x3+2 என்று தெளிவற்று எழுதுவது இன்று தவிர்க்கப்
படுகிறது.
4x3+2 = 14? or 20?

இத்தகைய dubious எழுத்து முறை இன்று உலகெங்கும்
கைவிடப்பட்டு வருகிறது. எனவே BODMAS போன்ற
பழங்குப்பைகளை பெருக்கித் தள்ளிச் சுத்தம் செய்ய
வேண்டும்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
***********************************************               

"எந்த ஆதாரமும் இல்லாமல்
ஜெயமோகன் மேலடுக்கு, எட்வின் கீழடுக்கு
என்று ஜெயமோகன் கருதுவார் என்றால்"  
என்று எழுதுகிறீர்கள். இதற்கு என்ன ஆதாரம்?

இது போன்ற சுயபச்சாதாபப் பதிவுகளை
எழுதி சுயஇன்பம் அனுபவிப்பது உலக மகா
அற்பத்தனம் ஆகும். You are looking everything with
a jaundiced eye. 

எட்வின் அவர்களே,
நான் ஒரு பறையன் என்றும்
நீங்கள் ஒரு பார்ப்பான் என்றும்
நீங்கள் கருதுவீர்கள் என்றால்,
நீங்களே மலத்துக்குச் சமம் என்றுதான்
கருதுவேன் நான்.

நீங்கள் சொன்னதை நீங்கள் நிரூபித்தால்
நாகர்கோவிலுக்குச் சென்று ஜெயமோகனைச்
செருப்பால் அடிப்பேன் நான்.

உங்களால் நிரூபணம் தர முடியவில்லை என்றால்,
செருப்படி உங்களுக்கு விழும். சாதிய ரீதியான
அவமானத்தை நீங்கள் சகித்துக் கொள்ளலாம்.
நான் சகித்துக் கொள்ள மாட்டேன்.


மதிப்புக்குரிய பென்சி ஐயா,

கடையநல்லூர் அல்ல வீரவநல்லூர்க் காரராகவே
தங்களை உணர்கிறேன்.  BODMAS rule என்று
அதற்குப் பெயர் வந்து விட்டது. அதற்கு நீங்களோ
நானோ காரணம் அல்ல என்ற போதிலும்.

இன்றைக்கு இதெல்லாம் சலித்துப் போய் விட்டது.
Computational maths என்பதில் இதையெல்லாம்
நீக்கி விடுகிறார்கள். தாங்கள் பலரையும்
ஒன்று திரட்டி, அறிவியல் செய்திகளைப் பரவலாக்கியமை
உள்ளபடியே பாராட்டுக்கு உரிய ஒன்று.

தங்களை நேரில் சந்தித்தது போலவே உணர்கிறேன்.
ஊரடங்கு அடங்கிய பிறகு வீரவநல்லூருக்கு
வர வேண்டும். நன்றி. நலம் சேரட்டும்.


மதிப்புக்குரிய எட்வின் ஐயா,
எந்த விதத்திலும் பொருட்படுத்தத் தகுதியற்ற
ஒரு passageஐ கீழே படித்தேன். அதில் சொல்லப்பட்ட
எதுவும் தமிழர்களைக் குறித்துச் சொல்லப் பட்டதல்ல.
எனவே நீங்களோ நானோ  offendஆக என்ன உள்ளது
என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.
கண்டனம் தெரிவிப்பது என்றால் முதல் ஆளாக
நான் இருப்பேன். ஆனால் இதெல்லாம் பொருட்படுத்தத்
தகுதியற்ற விஷயமாக நான் உணர்கிறேன்.

நீலக்கண்கள் நம்மிருவருக்கும் இல்லை.
கொங்கணி பிராமணர்கள், மாத்வ பிராமணர்கள்
என்று அவர் பட்டியலிடும் ஐந்து வகை சாதிகளில்
நீங்களோ நானோ வர .மாட்டோம்.

ஐயா, அவர் மலையாளிகளைப் பற்றி எழுதுகிறார்.
அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஏனெனில் அவர்
ஒரு மலையாளி. நாம் இருவரும் தமிழர்கள். நம்மைக்
குறித்து ஏதேனும்  எழுதினால், நாம் கோபம்
கொள்ளலாம். அவரை கெளசாம்பி லெவலுக்குக்
கொண்டு செல்ல வேண்டாம்.

மற்றப்படி அவரை நம்முடைய அஜெண்டாவில்
நிரந்தரமாக வைக்க இயலாது.
(தாங்கள் குறிப்பிட்டது இதுதான் என்று நானாக
அனுமானித்து, அந்த passageஐப் படித்து விட்டு
என்னுடைய கருத்தை எழுதுகிறேன்).    




 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக