ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ஜே பி நட்டா உறுப்பினரானால் ஏற்போமா?
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
PM CARES குறித்தும், நேருவின் பிரதமர் நிவாரண நிதி
(PMNRF) குறித்தும் அநேகக் கட்டுரைகளை எழுதி
உள்ளேன்.

கடந்த 37 ஆண்டுகளாக மத்திய அரசில் பணியாற்றி
ஒய்வு பெற்றவன் நான். மத்திய அரசின் கம்யூனிஸ்ட்
தொழிற்சங்கத்தில் கடந்த 35 ஆண்டுகளாகப் பல்வேறு
பொறுப்புகளை வகித்தவன் நான்.

நேரு உருவாக்கிய நிதியில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்
நிரந்தர உறுப்பினர் என்ற செய்தியை முதன் முதலில்
தெரிவித்தவன் நான். கே பிரம்மானந்த ரெட்டி யார் என்று
தெரியுமா? பலருக்கும் தெரியாது. இவர் காங்கிரஸ்
கட்சியின் தலைவராக இருந்தபோது பிரதமரின்
நிவாரண நிதியில் உறுப்பினராக இருந்தார். நிறைய
சாப்பிட்டார். இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா?

மக்களின் பணத்தை காங்கிரஸ்காரன் சாப்பிடுவதற்காக
PMNRF உருவாக்கப் பட்டது. உங்களிடம் ஒரு கேள்வி.
இப்போது மோடி உருவாக்கிய PM CARES நிதியில்
பாஜக கட்சியின் தலைவர் ஜே பி நட்டா நிரந்தர
உறுப்பினராக நியமிக்கப் படுவதாக ஒரு கற்பனை
செய்வோம்.

என்ன ஆகும்? இந்த நாடு ஜே பி நட்டா நிரந்தர உறுப்பினர்
என்பதை ஏற்றுக் கொள்ளுமா? ஏற்றுக் கொள்ளாது.
கண்ணில் கண்டவன் எல்லாம் கையில் செருப்பை
எடுத்துக்கொண்டு ஜே பி நட்டாவையும் அவரை நியமித்த
மோடியையும் அடிக்க வருவானா இல்லையா?

இதே நியாயத்தை, இதே அளவுகோலை ஜவகர்லால்
நேருவுக்கும் பொருத்த வேண்டும் அல்லவா?
காங்கிரஸ் தலைவர் கே பிரம்மானந்த ரெட்டியையும்
 அவரை நியமித்த நேருவையும் அதே செருப்பால்
அடிக்க வேண்டுமா இல்லையா?

ஆனால் நாம் செய்ய மாட்டோம். ஏனென்றால் நேரு
ஒரு கோமான். அவர் வீட்டின் கழிப்பறையும்
மணக்கும். இந்த அடிமைச் சிந்தனையும், இழிந்த
சிந்தனையும் நம் மூளையில் இருக்கும் வரை
இந்தியா உருப்படாது.
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு: மத்திய அரசு எப்போதெல்லாம் நிதி
கேட்டதோ, அப்போதெல்லாம் ஒரு நாள் ஊதியத்தை
மனமுவந்து நேருவின் PMNRFக்கு வழங்கியவர்கள்
நாங்கள். நான் இங்கு எழுதுவதெல்லாம் என்னுடைய
எங்களுடைய நேரடி அனுபவங்கள்.
********************************************************** 

அவர் உயர்ந்த சாதி பிராமணர். அவர் ஆளப் பிறந்தவர்.


அதற்கெல்லாம் நாம் விழிப்போடு இருந்து போராட
வேண்டும் தோழர். இந்த நாட்டை யாருக்கும் நாம்
எழுதிக் கொடுத்து விடவில்லை. எல்லா அரசியல்
நோக்கர்களும், மோடியின் PM CARES என்பது
more democratic என்கிறார்கள். எனவே இதில் என்னென்ன
ஷரத்துக்கள் தேவையோ அவற்றை அரசு கொண்டு
வர வேண்டும். அதற்கு எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்
பேச வேண்டும். பேசுவான் நமது சோம்பேறி எம்பிக்கள்?

மக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியில் வலுவான
வெகுஜன அபிப்பிராயத்தை உருவாக்க வேண்டும்.
இதை விட்டு நேரு புகழ் பாடுவதால் பயன் விளையாது.



கொடுக்கப்பட்ட படம்: Not according to scale.

போர் தி


For the benefit of readers



nallathu. aanaal ennaal

என்னுடைய கண்ணீர் அஞ்சலி.



என்னை விடுங்கள். மற்ற வாசகர்களுக்கு
வாசிக்க முடிந்தால் சரி.



நல்லது. உங்கள் பையனை நியூட்டன் அறிவியல்
மன்றம் வாழ்த்துகிறது. நிற்க.

நீங்கள் கொடுத்துள்ள உங்கள் பதிலை என்னால்
வாசிக்க இயலவில்லை. பெரிய எழுத்தாகவும்,
அழுத்தமான அச்சு உள்ளதாகவும் இருந்தால்
மட்டுமே என்னால் வாசிக்க இயலும். எனது புலன்கள்
தீட்சண்யமானவை அல்ல.






 
 


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக