புதன், 29 ஏப்ரல், 2020

தற்போதைய முறையில்


தாராளமாக எழுதலாமே.

மூவெண்மகமே 647 எழுவகற்கு 


அத்துச் சாரியை ஒன்றும் உயிர் போன்றதல்ல.
அழகாக அதை வெட்டி விட்டு எழுதலாம்.
எழுதப்படும் எந்த ஒன்றுக்கும் அத்துச் சாரியை
தேவையில்லை. வேண்டாத கிளைகளை வேண்டாத
இலைகளை வெட்டுவது போன்றதுதான் இது.
கைதேர்ந்த ஒரு தோட்டக்காரன் மிகஅழகாக
வெட்ட வேண்டியதை வெட்டி விடுவான்.

காலப்போக்கில் பல்வேறு சாரியைகள் வழக்கு
வீழ்ந்துள்ளன. ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
என்பதில் என்னென்ன சாரியைகள் இருந்தன?
அவை ஏன் இன்றில்லை என்று சிந்திப்பது நல்லது.

நன்னூலுக்குப் பின்னர் எந்தப் புது இலக்கணமும்
எழுதப்படவில்லை. இது மொழி வளர்ச்சிக்குப்
பெரும் இடர்ப்பாடு. எனவே புத்திலக்கணம் தேவை.
இதை எதிர்ப்பவர்கள் கடைந்தெடுத்த பிற்போக்குச்
சக்திகள் ஆவர்.

இந்தப் பதிவு தமிழில் புதிய எண்ணுப் பெயர்களை
அறிமுகப் படுத்தி, அவற்றின் அடிப்படையில்
ஆங்கிலத்தில் எளிதாகக் கூறுவது போல, தமிழிலும்
நவீன காலப் பேரெண்களைச் சொல்லலாம் என்று
நேரடியாக விலக்கிக் காட்டும் ஒரு பதிவு.
ஆம், இது வெறும் பதிவன்று; It is a clear demonstration.

இதில் பழைய முறைப்படியே எண்கள் சொல்லப்
படுகின்றன. ஆனால் புதிய எண்ணுப் பெயர்களுடன்!
(ஆக்டிலியன் என்பதற்கு எண்மகம் என்ற தமிழ்ச்
சொல்லைப் பெய்து புதிய எண்ணுப்பெயர் உருவாக்கப்
பட்டுள்ளது).

இதில் எடுத்த எடுப்பிலேயே அத்துச் சாரியைதனை
நீக்கம் செய்து, தமிழ் என்றாலே கடினம் என்ற
தோற்றப்பாட்டை வாசகர்களுக்கு ஏற்படுத்துவது 
அறிவுடைமை ஆகாது.

மதிப்புக்குரிய திரு வீரராகவன் ஆர் ஜே அவர்கள்,
மிக இயல்பாக, தன்னெழுச்சியாக (spontaneously)
நவீனப் பேரெண்களைப் பயன்படுத்தி, கணக்கில்
உள்ள எண்ணைத் தமிழில் சொல்லி உள்ளார்.
திரு வீரராகவன் அவர்கள் தமது இயல்பான
மனப்போக்கை இதன் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
மரம் வளர்வதும் விதை முளைப்பதும் மட்டும்
இயற்கை அல்ல. திரு வீரராகவன் பேரெண்ணை
தமிழில் சொன்னதும் இயற்கைதான். 

தமிழ் வளர்வதும் சரி, பரவுவதும் சரி, இவ்வாறுதான்
காற்றில் மகரந்தம் பரவுவது போன்று இயல்பானது.
வேறொரு அரங்கத்தில் மேற்கொள்ள வேண்டிய
சர்ச்சையை இந்த இடத்தில், புதிய ஒன்றை அறிமுகம்
செய்யும் இடத்தில் மேற்கொள்வது தவிர்க்கப்படுவதே
நல்லது.


அத்துச் சாரியை வேண்டாம் என்று கடந்த இருபது
ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். இடைவிடாமல்
சொல்லி வருகிறேன். இது இன்று நேற்று சொல்வதல்ல.
தமிழனுக்காகத்தான் தமிழே தவிர, தமிழுக்காகத்
தமிழன் என்று இல்லை.


நீக்க வேண்டாம்: தொடராமல் இருந்தாலே போதும்.

நவீன காலப் பேரெண்களை ஆங்கில முறையில்
எழுதுவதும்கூட பலருக்கும் தெரியவில்லை.  

ஆயின், திரு வீரராகவன் படித்தவுடன் நானும் நீக்கி
விடுகிறேன்.



நல்லது;எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.
முற்றிலும் ஆங்கில முறைப்படி (அதாவது லட்சம்
கோடியைத் தவிர்த்து விட்டு) எழுதுவது ஒரு வழி.
இப்பதிவில் திரு வீரராகவன் அப்படித்தான் எழுதி
உள்ளார்.    

இன்னொன்று தங்களின் நிரல் (program) கூறுகிறபடி
லட்சம் கோடியைத் துறக்காமல் எழுதுவது.
எந்த முறையை ஏற்பது? இரண்டும் இருக்கட்டும்.
மக்கள் முடிவு செய்யட்டும்.




நிரல் கூறுவதே சரி என உணர்கிறேன்.


எண்மகமே என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப்
பொருளில் வருகிறது. தேற்றம் = தெளிவு)
நூற்று முப்பது கோடியே அறுபத்தைந்து லட்சம்
என்று சொல்லுகிறபோது, கோடியே என்றுதான்
சொல்கிறோம்.

இங்கு கோடியே என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப்
பொருளைத் தந்து நிற்பது போல, எண்மகமே என்பதில்
உள்ள ஏகாரம் தேற்றப் பொருளைத் தந்து நிற்கிறது. 


3,00,00,001 இந்த எண்ணை எப்படி எழுதுவது?
மூன்று கோடியே ஒன்று என்றுதான் எழுத முடியும்.



தமிழில் எண்கள் இல்லையா? சொற்கள் இல்லையா?
-------------------------------------------------------------------------------
இது கணிதம் மற்றும் அறிவியல் குறித்த பதிவு!

நவீன அறிவியல் முற்றிலும் புதிய பெரிய பெரிய
எண்களை உருவாக்கி இருக்கிறது. இவை நவீன
காலப் பேரெண்கள் எனப்படுகின்றன.

மில்லியன்,  பில்லியன், டிரில்லியன், குவாட்ரில்லியன்,
குவின்டில்லியன் என்று தொடர்பவை அந்தப்
பேரெண்களின் ஆங்கிலப் பெயர்கள்.

இதே பேரெண்களுக்கு தமிழில் சொற்கள் வேண்டாமா?
அவற்றை உருவாக்க வேண்டாமா?

உருவாக்க வேண்டுமென்றால் யார் உருவாக்க வேண்டும்?
அப்படி உருவாக்க ஒருவர் முயற்சி செய்வாரெனில்,
அவர் கணிதம் அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில்
அறிவு பெற்றிருக்க வேண்டும் அல்லவா?

உலகிலேயே முதன் முதலாக நவீன கால ஆங்கிலப்
பேரெண்களுக்கு சரியான தமிழில் கலைச்சொற்களை
உருவாக்கி உள்ளேன் நான். கால் நூற்றாண்டு காலத்துக்கு
முன்னரே இச்சொற்களை உருவாக்கி விட்டேன்.

தற்போது அமெரிக்கவாழ் மென்பொறியாளர் தோழர்
வேல்முருகன் அவர்கள் நான் உருவாக்கிய சொற்களைக்
கொண்டு, ஒரு நிரல் (புரோகிராம்) உருவாக்கி உள்ளார்.
புரோகிராம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன
என்று புரிந்தால் மட்டுமே இந்த நிரலின் முக்கியத்துவம்
பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.

இன்னொரு மூத்த பொறியாளரான வீரராகவன் ஆர் ஜே
அவர்கள், நான் உருவாக்கிய சொற்களைப் பயன்படுத்தி
கொடுக்கப் பட்ட பெரிய நம்பரை தமிழில் எப்படிச்
சொல்வது என்று எழுதிக் காட்டி உள்ளார்.

வாசகர்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
மேலே சொன்ன கணக்கைச் செய்ய வேண்டும்.
தமிழ் தமிழ் என்று கூச்சலிடுவோர் என்ன செய்ய
வேண்டும்? நவீன காலப் பேரெண்களைத் தமிழில்
சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சொல்லத் தெரியாதவர்கள் யாராக இருந்தாலும்,
அவர்கள் உயிர் வாழத் தகுதியற்றவர்கள்.

கீழே கொடுக்கப்பட்ட 22 இலக்க எண்ணைத்
தமிழில் சொல்லுங்கள்! சொல்ல வேண்டும்!
2,837,462,162,364,789,531,864.
-----------------------------------------------------------------
இதற்கான பதில் கீழ் உள்ளது. அருள்கூர்ந்து
வாசிக்கவும்.

ஆயிரம் இலட்சம் ஆகிய சொற்களுக்கு இல்லாத
உரிமையை தமிழிலக்கணம் "கோடி"க்கு வழங்குகிறது.


நீங்கள் சொல்வது ஒரு permutation.
நான் சொல்வது ஒரு permutation.
அவ்வளவுதான். பெருமளவில் Collective wisdom
தோன்றியிராத தமிழ்ச் சமூகத்தில் இது இயல்பானதே.



வைரம் வைடூரியம் முத்து பவழம்
மரகதம் கோமேதகம் புஷ்பராகம்
நீலம் மாணிக்கம்.இவை நவரத்தினங்கள்!
==========================


உரிய தமிழ்ச் சொற்கள்!
Million = எண்ணம். Billion = இரட்டம்.
Trillion = மூவகம். Quadrillion = நாவகம்
Quintillion = ஐவகம். Sextillion = அறுவகம். 
  


நல்ல தமிழ்ச் சொற்களைப்  பயன்படுத்துங்கள்!

சரிதான்.


  



     










     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக