வெள்ளி, 17 ஏப்ரல், 2020

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!
-----------------------------------------------
பா ஏகலைவன் அவர்களின் மேலான கவனத்திற்கு,

தாங்கள் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் அவர்களின்
மருந்துக்குப் பரிந்துரை செய்கிறீர்கள். தங்களைப்
போன்று பலரும் தத்தமக்குத்  தெரியவந்த சித்த
மருத்துவரின் மருந்தை அரசு அனைவருக்கும் வழங்க
வேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள்.

சுமார் 50க்கும் மேற்பட்ட சித்த மருந்துகளும் சித்த
மருத்துவர்களும் அவர்களின் ஆதரவாளர்களால்,
அவர்கள் போடும் கூச்சல்களால் அரசின் கவனத்தை
ஈர்த்து நிற்கிறார்கள்.

இவை அனைத்தும் தற்குறித்தனத்தின் உச்சம் ஆகும்.
ஒரு மருந்தைப் பரிந்துரை செய்ய ஒருவருக்கு அருகதை
இருக்க வேண்டும். அவர் ஒரு MBBS, MD படித்த அல்லது
BS,MS படித்த மருத்துவராக இருக்க வேண்டும். அல்லது
மருந்துத் தயாரிப்பில் பட்டப்படிப்புப் படித்தவராக
(B Pharm, M Pharm) இருக்க வேண்டும். குறைந்தபட்சம்
biology, human physiology, அல்லது Biotech படித்தவராக
இருக்க வேண்டும்.

இப்படி எதையுமே படிக்காமல், தணிகாசலம் மலையைப்
புரட்டி விட்டார் என்று  நாட்டில் வதந்தி பரப்பிக்
கொண்டிருப்பது கிரிமினல் குற்றம் ஆகும்.

உதாரணமாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் அந்தக் காலத்து SSLCயில், 1970ல் இங்கிலீஷிலும்
கணக்கிலும் பெயிலாகப் போனவன். எனக்கு மருத்துவம்
குறித்து என்ன இழவு தெரியும்?

SSLC பாஸ் பண்ண முடியாத நான் என்னை எல்லாம்
தெரிந்த ஏகாம்பரமாகக்  கருதிக் கொண்டு,
என்னைத் தவிர மற்றவர்கள்  அனைவரையும் முட்டாள்
என்று கருதிக் கொண்டு, தணிகாசலம் மலையைப்
புரட்டுகிறார் என்று வறட்டுக் கூச்சலிடுவது
சமூக விரோதத் தன்மை உடையது.       
------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக