வியாழன், 30 ஏப்ரல், 2020

லண்டன் சிறையில் கம்பி எண்ணும்
வைர வியாபாரி நீரவ் மோடியும் 
பஞ்சாப் நேஷனல் வங்கியும்!
நீரவ் மோடியின் தற்கொலை எப்போது?
--------------------------------------------------------
நீரவ் மோடி என்று ஒருவர். இவர் வைர வியாபாரி.
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில்
ஆயிரம் கோடி அளவில் கடன் வாங்கினார். திருப்பிக்
கொடுக்கவில்லை. லண்டனுக்கு ஓடி விட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி அவரிடம் இருந்து கடனை
வசூலிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கான
சட்டபூர்வ நடைமுறைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தி
ஆயின. லண்டன் நீதிமன்றத்தில் பஞ்சாப்  நேஷனல்
வங்கியானது (represented by govt of India) கிரிமினல் வழக்குத்
தொடர்ந்தது.

நீரவ் மோடி ஜாமீன் கோரினார். நான்காவது முறையாக
அவரின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம்
நிராகரித்தது. இதன் விளைவு: லண்டன் சிறையில்
கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் நீரவ் மோடி.

Extradition என்று ஒரு ஆங்கில வார்த்தை உண்டு.
இதற்கு அர்த்தம் தெரியுமா? பலருக்கும் தெரியாது.
நாடு கடத்துவது என்று பொருள்.

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டாம் என்று
லண்டன் நீதிமன்றத்தில் நீதிபதியின் காலில் விழுந்து
கதறினார் நீரவ் மோடி.

நீங்கள் என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால்,
நான் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவேன்
என்று கதறி அழுதார் நீரவ் மோடி.

இந்தச் செய்திகள் அனைத்தும் ஆங்கிலச் செய்தி
ஏடுளில் வெளிவந்துள்ளது. ஆனால் ஒரு தமிழ்
ஏட்டில் கூட வெளியாகவில்லை. ஒருபோதும் வெளிவராது.

ஆங்கிலம் தெரியாத பலர் தமிழ்நாட்டில் உண்டு.
இங்கு News 18 என்னும் ஆங்கில ஏட்டில் வெளிவந்த
செய்தியைக் கொடுத்துள்ளேன். ஆங்கிலம்
தெரியாதவர்கள் அருள்கூர்ந்து தெரிந்தவர்களின்
உதவியுடன் இச்செய்தியைப் படிக்கவும்.
********************************************************    





2 கருத்துகள்:

  1. ஊரான் பணம் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி கையில் இருக்கு.. இவன் எல்லாம் தற்கொலை பண்ணி சாவுறது எல்லாம்..

    சும்மா தமாஸுக்கு சொல்லி இருப்பாரு.

    பதிலளிநீக்கு
  2. மனது கனக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்தனையோடு..

    பதிலளிநீக்கு