சனி, 5 ஜூன், 2021

 வாட்சப்பை விவாகரத்து செய்! 

சிக்னலுக்குத் தாலி கட்டி குடும்பம் நடத்து!

எலான் மஸ்க் அறிவுரை!

-----------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------

நடப்பது கலியுகம் அல்ல;; சைபர் யுகம் (cyber age). அதாவது 

இது கணினிகளின் யுகம்; தகவல் தொழில்நுட்பம் உலகை 

ஆளும் யுகம்.   

 

வாட்சப் (WhatsApp) என்ற ஒன்றைப் பலரும் பயன்படுத்தி  

வருகிறோம். வாட்சப்பின் பயன்பாடு உலகளாவியது.

வாட்சப் என்பது ஒரு ஆப் (app) ஆகும். பிரதானமாக 

மொபைல் போன்களுக்கு என உருவாக்கப்பட்ட போதிலும் 

இது கணினி, லேப்டாப்களிலும் வேலை செய்யும். பல்வேறு 

OS களிலும் வேலை செய்யும்.


நமது தமிழ் முட்டாள்கள் ஆப் (app) என்ற சொல்லுக்கும் சரி,

பிராசஸர் (processor) என்ற சொல்லுக்கும் சரி, "செயலி" என்ற 

ஒரே சொல்லைப் பயன்படுத்தி தங்களின் மூளைவறட்சியை 

வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழையும் கெடுத்து 

வருகின்றனர்.

 

ஆப்புக்கு (app) நிகராக ஒரு புதிய சொல்லை சற்றுமுன் 

உருவாக்கி உள்ளேன். 200 நொடிகளுக்குள் உருவான 

அச்சொல் "உறுபேறு" என்பதே. App = உறுபேறு.  

ஆக, ஆப் (app) என்ற சொல்லுக்கு நிகராக இனி 

ஒவ்வொருவரும் உறுபேறு என்ற சொல்லையே 

பயன்படுத்த வேண்டும். ஆப்புக்கு (app) செயலி என்று 

எழுதுபவன் தற்கொலை செய்து கொண்டு செத்துப் 

போக வேண்டும். தற்கொலை செய்துகொள்ள மறுப்பவனை 

அடித்துக் கொல்ல வேண்டும். ஆம், வேறு வழியில்லை.

வன்முறையைக் கையாளாமல் தமிழ் வளராது.


ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவது அன்றுஇவ் வுலகத்து இயற்கை.

(புறநானூறு, சந்தி பிரித்து எழுதப் பட்டுள்ளது)  


உறுபேறு என்ற சொல்லின் பொருளையும் அதன் 

பயன்பாட்டையும் தமிழன் அறிவான். உறுதல், 

கருவுறுதல் ஆகிய சொற்கள் பள்ளிப் பாடங்களில் 

இடம் பெறுபவை. பேறு, மக்கட்பேறு ஆகிய சொற்களும் 

வழக்கில் உள்ளவை. எனவே ஆப்புக்கு (app) உறுபேறு 

என்பதே ஆகச் சிறந்த சொல் என்பது இயல்பாக 

நிறுவப்பட்டு விடுகிறது. நிற்க.உறுபேறு, பயனுறுபேறு

ஆகிய சொற்கள் பயிலட்டும்!   

  

தற்போது ஒரு மாபெரும் exodus நடந்து வருகிறது.அமெரிக்க 

நாவலாசிரியர் லியான் அரிஸ் (Leon Uris) எழுதிய Exodus 

என்ற நாவலைப் படித்து இருக்கிறீர்களா? இல்லை. 

சரி, பைபிளில் EXDOUS பற்றி இருக்கிறதே! அதையாவது 

படித்து இருக்கிறீர்களா? இல்லை. 


Exodus என்றால் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது என்று 

பொருள். வாட்சப்பில் இருந்து கூட்டம் கூட்டாமாக  

வெளியேறுகிறார்கள். வெளியேறியவர்களைக் கணக்கெடுத்தால் கோடிக்கணக்கில் இருக்கிறது.


வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை 

எங்களின் தேவைக்கு ஏற்ப நாங்கள் பயன்படுத்துவோம் 

என்று அறிவித்து விட்டது வாட்சப். வரும் 8 பெப்ரவரி 2021 

முதல் இப்புதிய விதிகள் செயல்பாட்டுக்கு வருகின்றன.

இவ்விதிகளிடம் தங்களின் அந்தரங்கத் தகவல்களை 

இழக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.


"We require certain information to deliver our Services and without this 

we will not be able to provide our Services to you" என்று தெள்ளத் 

தெளிவாகச் சொல்லி விட்டது வாட்சப். நேர்மையாளர்கள்;

சொல்லிச் செய்கிறார்கள்.  


என்னுடைய தகவல்களை வாட்சப் எடுத்துக் கொள்வது 

ஆக்கிரமிப்பு ஆகும்.  அது என் சுதந்திரத்தைப் பறிக்கிறது. 

எனவே வாட்சப்பில் நீடிக்க நான் விரும்பவில்லை என்று முடிவு 

எடுத்தவர்கள் வாட்சப்பில் இருந்து வெளியேறுகிறார்கள்/


வாட்சப்பை விட்டு வெளியேறினால் வேறு எங்கே 

செல்வது? போக்கிடம் உண்டா? உண்டு. வாட்சப்பைப் போல 

SIGNAL என்று  ஒரு உறுபேறு (app) உள்ளது. இதுவும் 

அமெரிக்க நிறுவனமே. எனினும் வாட்சப்பைப்போல 

இவர்கள் நமது தகவல்களைக் கேட்பதில்லை. எனவே 

அந்த அளவுக்கு இது பாதுகாப்பானது.


உண்மையில், சைபர் உலகில் பாதுகாப்பு (safety and security 

of our data) என்ற பதத்துக்கெல்லாம் அர்த்தம் கிடையாது. 

கற்பிழந்த பெண்கள்  என்பதைப்போல, safety security 

ஆகியவை  அர்த்தம் இழந்த சொற்கள். போஸ்ட் கார்டு 

எனப்படும் அஞ்சலட்டை நினைவு இருக்கிறதா? பல 

ஆண்டுகளுக்கு முன்பு, (1970களில்) இதன் விலை 15 பைசா. 

பின்னர் 50 பைசா. அஞ்சல் அட்டையில்  எழுதிப் போட்டால் 

எவன் வேண்டுமானாலும் படிப்பான்  அல்லவா? அதைப் 

போலத்தான் இன்றுள்ள சைபர் யுகத்தில்  நமது அந்தரங்கத் 

தகவல்களின் பாதுகாப்பு. எனவே  பாதுகாப்பு 

பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதால் 

பயனில்லை.


வாட்சப்பை விவாகரத்து செய்யுங்கள்; சிக்னலுக்குத் தாலி 

கட்டுங்கள் என்கிறார் எலான் மாஸ்க். யார் இவர்? அமெரிக்கர்.

மின்சாரத்தால் இயங்கும் டெஸ்லா கார் நிறுவனத்தின் 

அதிபர். வெறும் தொழிலதிபர் மட்டுமா? இல்லை. இவர் 

மிகச் சிறந்த தொழில்நுட்ப அறிஞர். உலகின் பணக்காரர்களில் 

முதலிடத்தில் இருக்கிறார். இவரைப் பற்றி எதுவும் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் முட்டாள் என்று அர்த்தம்!


நீங்கள் முட்டாளாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்,

எலான் மஸ்க் பற்றி விரிவான ஒரு கட்டுரையை எழுதினேன். 

அறிவியல் ஒளி ஏட்டில் அது பிரசுரம் ஆகியுள்ளது. சில 

மாதங்களுக்கு முந்திய அறிவியல் ஒளியைப் பாருங்கள்.

அதில் உலகைக் குலுக்கும் எலான் மஸ்க் என்னும் 

தலைப்பிலான கட்டுரையைப் படியுங்கள். அந்தக் 

கட்டுரையைப் படித்தீர்களா? இல்லை. 


சரி, அதை விடுங்கள்; உங்கள்  வாழ்க்கையில் என்றாவது 

யாராவது ஒருவர் எழுதிய  அறிவியல் கட்டுரையை 

முழுசாகப் படித்தது உண்டா? கிடையாது. நல்லது. 

உங்களுக்கு உயிர் வாழும் உரிமை உண்டா? கிடையாது.


சிக்னல் என்னும் உறுபேறு(app) end-to-end encryption  

செய்கிறது. வாட்சப்பும் இது போல end-to-end 

encryption செய்து நீங்கள் அனுப்பும் செய்திகளை 

unintelligible மற்றும் unreadableஆக மாற்றுகிறது.

ஆனால் வாட்சப்புக்கும் சிக்னலுக்கும் உள்ள 

பெரிய வேறுபாடு என்னவெனில், நமது தரவுகளை 

வாட்சப் கோருகிறது; சிக்னல் கோரவில்லை. அதாவது 

தற்போது கோரவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளின் 

பிறகு இவர்களும் கோரலாம். அப்போது பார்த்துக் 

கொள்ளலாம். அதுவரை சிக்னல் என்னும் உறுபேறு 

பாதுகாப்பானதுதான்.


எனவே உங்களின் தகவல்களின் பாதுகாப்பைப் 

பற்றி (safety and security of your data) அதிகம் அலட்டிக் 

கொள்பவரா நீங்கள்? அப்படியானால் உடனடியாக 

நீங்கள் வாட்சப்பை விவாகரத்து செய்து விடுங்கள். 

இரண்டாம் தாரமாக சிக்னலுக்குத் தாலி கட்டி 

குடித்தனம் நடத்துங்கள். இதுவே நியூட்டன் அறிவியல் 

மன்றத்தின் வழிகாட்டுதல். 

------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

1) தொழில்நுட்பம் சார்ந்து இன்னும் அதிக விவரங்களை 

எழுத வேண்டும். தொழில்நுட்பம் குறித்து எந்த அறிவும் 

இல்லாமலே, தொழில்நுட்பத்தின் பயனை மட்டும் 

அனுபவிக்கும் கூட்டம் தமிழ்நாட்டில் அதிகம். 


2) 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, 

வாட்சப், சிக்னல் போன்று ஒரு உறுபேற்றை (app) 

தனக்கென்று உருவாக்கிக் கொள்ளலாம். அது எளிது.

இது குறித்து கரடியாகக் கத்தி இருக்கிறேன். எவரும் 

செவிசாய்க்கவில்லை. ஏனெனில் இந்தியா ஒரு 

scientifically illiterate state. எவன் செவி சாய்ப்பான்?

******************************************

Master, Visa மற்றும் Rupay card இவைகளுக்குள் உள்ள வித்தியாசம் என்ன?

இவை மூன்றுமே பற்று அட்டைகள் தான்
அதாவது டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு வகைகளில் அடங்குபவை.
மிகவும் வெளிப்படையான வித்தியாசம்
Rupay card நம்முடைய உள்நாட்டு இணைய பண பரிவர்த்தனைகள் செய்ய உதவும் பற்றுஅட்டை.
Master கார்டு / VISA கார்டு இவை இரண்டும் அமெரிக்க நிறுவனங்கள்.
Rupay கார்டு
இந்தியா, UAE, பக்ரைன், சிங்கப்பூர், பூட்டான், சவுதி அரேபியாவில் மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
Master/ VISA கார்டுகளை எந்த நாட்டிலும் பயன்படுத்த முடியும்.
Rupay கார்டு-ஐ டெபிட் கார்டு சேவையை மட்டும் வழங்குகிறது
Master/ VISA கார்டுகளை டெபிட்- கிரெடிட் என இரண்டு சேவைகளையும் வழங்குகின்றன.
Master / VISA கார்டு சேவையை நாடும் ஒரு வங்கியானது அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு காலாண்டு கட்டணம் செலுத்த வேண்டும்.
Rupay கார்டுக்கு அப்படி கட்டணம் எதுவும் இல்லை.
பாதுகாப்பு என்று கருத்தில் கொள்ளும் பொழுது, Rupay கார்டில் பாதுகாப்பு இருக்கும்.
மாஸ்டர்/விசா கார்டர்கள் உலகளவில் செயல்படுவதால் அவை எளிதில் பாதிப்புக்குள்ளாகலாம்.

Rupay அட்டையை குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், இதன் மூலம் பரிவர்த்தனை செய்யும்பொழுது நாம் payment gatewayக்கு செலுத்தும் கட்டணம் Master / VISA கார்டுகளை காட்டிலும் மிகவும் குறைவு.
மேலும், Rupay கார்டு உபயோகிக்கும் பொழுது பண பரிவர்த்தனைகள் வேகமாக இருக்கும். (உள்நாட்டு சர்வர் என்பதால்)
--------------------------------------------------

வாட்சப்பில் இருந்து ஏன் விலக வேண்டும்?

விலகுவதற்கான நியாயங்கள் என்னென்ன?

---------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------

இன்றைய தினத்தில் உலகின் மக்கள்தொகை = 783 கோடி.

இந்த 783 கோடியில் பிறந்த குழந்தைகள், கைக்குழந்தைகள்,

ஏனைய குழந்தைகள், செயலற்ற முதியோர், தற்குறிகள் 

என்று பலரையும் கழித்தால், மீதி குறைந்தது 400 கோடி ஆகும்.


மொபைல் போனில் சமூக வலைத்தளங்களைப் 

பார்ப்போர் = 326 கோடி. இது முன்னர்க் கூறிய 

400 கோடியில் 81 சதவீதம்.


இந்தியாவில் வாட்சப்புக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் 

அதிகம். நம்பத்தக்க ஒரு புள்ளி விவரப்படி இது 34 கோடி ஆகும்.

(செப்டம்பர் 2019ல் MAU = 340 மில்லியன்; அதாவது 34 கோடி.

MAU = Monthly Active Users).


சிக்னலின் வாடிக்கையாளர்கள் உலக அளவிலேயே 

1 கோடிதான். இந்தியாவில் எவ்வளவு? சில நூறு பேர்.

அவ்வளவுதான். சிக்னல் என்ற ஒன்று இருப்பதே 

தமிழ் வாசகர்களுக்கு நேற்று நான் எழுதிய கட்டுரையைப் 

படித்த பின்னர்தான் தெரியும்.   


அடுத்து டெலிகிராமுக்கு இந்தியாவில் வாட்சப்பை விடக் 

குறைவான வாடிக்கையாளர்களே உண்டு. உலக அளவில் 

20 கோடி. இந்தியாவில் 3 கோடி இருக்கும். செப்டம்பர் 2019ல் 

ஆண்டிராய்டில் மட்டும் டெலிகிராமின் MAU எண்ணிக்கை

2.9 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்.


வாட்சப் இந்தியாவில் 34 கோடி (உலகில் 200 கோடி).

டெலிகிராம் இந்தியாவில் 3 கோடி. (உலகில் 20 கோடி).

சிக்னல் இந்தியாவில் 1000 (approx). (உலகில் 1 கோடி).


ரஷ்யப் பின்னணியோடு கூடிய டெலிகிராமில் 

end to end encryption ஆனது by defaultஆக இல்லை என்பது 

அதன் மீதான குற்றச்சாட்டு.


வாட்சப்பில் இருந்து ஏன் விலக வேண்டும்?

------------------------------------------------------------------

1) Messaging supremacy என்பதில் நம்பர் 1 ஆக இருப்பது 

வாட்சப். உலகில் 200 கோடி வாடிக்கையாளர்களைக்  

கொண்டுள்ள இந்த ஏகபோகம் தகர்க்கப் பட வேண்டும்.


2) Security features என்னும் விஷயத்தில் பல்வேறு 

நிறுவனங்களுக்கு இடையே மெல்லிய வேறுபாடுதான் 

உண்டே தவிர பாரதூரமான வேறுபாடு கிடையாது.

எனவே எந்த நிறுவனத்தில் சேர வேண்டும் என்பதைத்  

தீர்மானிப்பதில் Security featuresஆனது deciding factorஆக 

இருக்க முடியாது. அப்படியே Security என்று எடுத்துக் 

கொண்டால், வாட்சப்பை விட சிக்னல் ஆயிரம் மடங்கு 

மேலானது.


3) பின் எதுதான் deciding factor? இந்தியாவைப் பொறுத்த 

மட்டில், messaging இண்டஸ்டிரியை வாட்சப்தான் 

ஏகபோகமாக வைத்துள்ளது (WhatsApp has monopolised).

34 கோடி வாடிக்கையாளர்களை வாட்சப் பிடித்து 

வைத்துள்ளது. இது இந்தியாவின் சுதேசியான இளம் 

நிறுவனங்களின் எதிர்காலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக 

விளங்குகிறது.


Paytm என்ற நிறுவனத்தைப் பற்றிச் சிலர் கேள்விப்பட்டு 

இருக்கலாம். அது ஓர் இந்திய நிறுவனம் என்ற 

உண்மை கூட நம் நாட்டில் பலருக்குத் தெரியாது.

Paytm 2010 ஆகஸ்டில் தொடங்கப் பட்டது. இதன் Founder & CEO

இந்தியரான விஜய் சேகர் சர்மா.இதன் உபயோகிப்பாளர்கள் 

10 கோடியைத் தாண்டி விட்டனர். Paytm Payments Bank என்றும் 

Paytm Mall என்றும் அண்மை ஆண்டுகளில் சேவை 

விரிவாக்கம் செய்தது இந்நிறுவனம்.


UPI paymentsஐ மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியானது 

Paytmக்கு அனுமதி வழங்கி உள்ளது. எனவே UPI payment

சேவையை Paytm நடத்தி வருகிறது.


ஜூலை 2017ல் வாட்சப் நிறுவனம் UPI Payments சேவையை 

இந்தியாவில் தொடங்கியது. இந்திய அரசின் NPCI இதற்கு 

அனுமதி வழங்கியது. தற்போது நவம்பர் 2020ல் 

UPI முறையில் 2 கோடி வாடிக்கையாளர்கள் வரை 

வாட்சப் நிறுவனம் சேர்த்துக் கொள்ளலாம் என்று

சேவை விரிவாக்கத்துக்கும்  NPCI அனுமதித்துள்ளது.

(NPCI = National Payments Corporation of India;

UPI = Unified Payments Interface).


இப்போது ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். UPI முறையில் 

பணப் பரிமாற்றம் செய்வதை ஏற்கனவே இந்திய 

நிறுவனமான Paytm செய்து வரும்போது, வாட்சப் 

நிறுவனமும் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்றால் 

பாதிப்பு யாருக்கு? நிச்சயம் இந்திய நிறுவனத்துக்குத்தான்.

அதனால்தான் Paytmன் CEO விஜய் சேகர் சர்மா வாட்சப்புக்கு 

எதிரான நிலை எடுக்கிறார். 


வாட்சப் போன்ற ஏகாதிபத்திய நிறுவனமானது ஒவ்வொரு 

இண்டஸ்டிரியாக ஏகபோகம் செய்ய முற்படுமானால்,

அந்த இண்டஸ்டிரியில் உள்ள இந்திய நிறுவனங்கள் 

திவால் ஆகும். எனவே ஏகபோகத்தை-- யாருடைய 

ஏகபோகத்தையும்-- அனுமதிக்காக கூடாது.


எனவேதான் வாட்சப்பில் இருந்து வெளியேறுமாறு 

கேட்டுக் கொள்கிறோம். தனி ஒருவராக வெளியேறிப் 

பயனில்லை. கூட்டம் கூட்டமாக குரூப் குரூப்பாக

வெளியேற வேண்டும். அட்மின்கள் முடிவெடுத்து 

ஒரு குரூப்பில் இருந்த அனைவரும் அப்படியே 

கூண்டோடு சிக்னலுக்குச் செல்ல வேண்டும்.

***************************************************        

இன்றோடு முடிகிறது இந்தியாவின் ஹைக் மெசஞ்சர்!

வாட்சப்பின் ஏகபோகத்தால் பலியான இந்திய ஹைக்!  

வாட்சப்பை ஒழிக்காமல் வாழ்வு இல்லை! 

----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------------------  

ஏர்டெல்லின் அதிபர் சுனில் மிட்டல். இவரை அநேகமாக 

எல்லோருக்கும் தெரியும். யாருக்குத் தெரியாவிட்டாலும்

1) போலி இடதுசாரிகள் 

2) போலி மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள் 

3) போலி நக்சல்பாரிகள் 

ஆகிய மேற்கூறிய கயவர் கூட்டத்துக்குத் தெரியும்.  

இவர்கள் எல்லாருக்கும் படியளக்கும் முதலாளி 

சுனில் மிட்டல்தானே! 


BSNLக்கு எதிராக நாளொரு பொய்யும் பொழுதொரு 

அவதூறுமாக அவிழ்த்து விட்டு, சுனில் மிட்டலின் 

ஏஜெண்டுகளிடம் எச்சில் காசு வாங்கிச் சாப்பிடும் 

இந்த ஈனப் பயல்களுக்கு சுனில் மிட்டல்தான் கடவுள்.


இந்த இடத்தில் லட்சுமி மிட்டல் பற்றியும் குறிப்பிட 

வேண்டும். சுனில் மிட்டல் வேறு; லட்சுமி மிட்டல் வேறு.

லட்சுமி மிட்டல் இரும்பு எஃகு துறையின் கடவுளாக  

இருப்பவர். இவர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் 

பத்ம விபூஷண் விருது பெற்றவர். சுனில் மிட்டலுடன் 

லட்சுமி மிட்டலை யாரும் குழப்பிக் கொள்ளக் கூடாது.   

சுனில் மிட்டல் பத்ம பூஷண் விருது பெற்றவர்.


இந்தக் கட்டுரை கவின் மிட்டல் பற்றியது. 

யார் இந்த கவின் மிட்டல்? இவர் சுனில் மிட்டலின் மகன். 

ஹைக் (HIKE) எனப்படும் messenger appஐ இவர் நடத்தி 

வந்தார். (கவனிக்கவும்: வந்தார் என்பது past tense). 

வாட்சப், டெலிகிராம், சிக்னல் போன்று ஹைக்கும் 

ஒரு மெசஞ்சர் சேவையே.  


லண்டன் இம்பீரியல் கல்லூரியில் Electrical and Electronics 

engineering பிரிவில் M Tech படித்தவர் கவின் மிட்டல். மேலும் 

நிர்வாகமேலாண்மையும் படித்துள்ளார். புழுவினும் 

இழிந்த நம்மூர் எட்டாங்கிளாஸ் பெயிலாகிப்போன 

போலி நக்சல்பாரிப்பயல் துலுக்காணத் தற்குறி இவரைத் 

தரகு முதலாளி என்பான். என்னிடம் சொன்னால் புழுத்த  

தற்குறி துலுக்காணத்தின் முதுகுத் தொலியை உரிப்பேன்.


இதற்கு முந்திய கட்டுரையில் Paytm நிறுவனர் மற்றும் CEO

விஜய் சேகர் சர்மா பற்றி எழுதி இருந்தேன். இவர்கள் 

யாரும் தரகு முதலாளிகள் அல்லர். நிற்க.


அங்கீகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, ஹைக் மெசஞ்சர் 

மே 2019ல் 16 கோடி பயனர்களைக் கொண்டிருந்தது. எனினும் 

இன்றுடன் இந்த சேவையை முடித்துக் கொள்வதாக இதன் 

அதிபர் கவின் மிட்டல் அறிவித்துள்ளார். ஹைக் மெசஞ்சரை 

இழுத்து மூடுகிறார்.



வாட்சப்பின் ஏகபோகத்துக்குப் பலியானது கவின் மிட்டலின் 

ஹைக் மெசஞ்சர். இந்தியாவின் சுதேசி நிறுவனங்களுக்கு 

வாட்சப் இருக்கும் வரை வாழ்வு இல்லை. எனவே வாட்சப்பின்   

ஏகபோகம் தகர்க்கப்பட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக 

இந்தியாவில் வாட்சப்பின் பயனர்கள் 34 கோடி என்பதை ஏற்க 

இயலாது. இது உடைந்து துண்டு துண்டாகச் சிதற வேண்டும்.


உலக அளவில் வாட்சப்புக்குப் போட்டியாக  சிக்னல் 

வளர்வதற்கு  வாய்ப்பு உள்ளது. 200 கோடி பயனர்களைக்  

கொண்ட வாட்சப்பை  1 கோடி பயனர்களை மட்டுமே 

கொண்ட சிக்னல்  எதிர்த்து நிற்பது என்பது டேவிட் 

கோலியாத் (David and Goliath)  கதையை நினைவூட்டுகிறது. 

என்றாலும் இந்தச் சண்டையில் கோலியாத்தை (வாட்சப்பை)  

டேவிட் வீழ்த்தி விடுவான் என்றே தோன்றுகிறது.


வாட்சப்பில் ஏகபோகத்தைத் தகர்ப்பது உலகளாவிய 

ஒரு நிகழ்வு. இதில் வாட்சப்பை போல, அவர்கள் 

நாட்டிலேயே உருவான சிக்னலுக்கு  எலான் மஸ்க் 

போன்றோரின் ஆதரவு உள்ளது. எனவே போட்டியாளர்களில் 

சிக்னலுக்கு மற்றவர்களை விட edge உள்ளது. எனவேதான் 

வாட்சப்பை எதிர்த்த போரில் உலகளாவிய நிகழ்வு என்ற 

அடிப்படையில் சிக்னலை ஆதரிக்கிறோம்.


கவின் மிட்டல் தமது ஹைக் மெசஞ்சரை இழுத்து மூடிவிட்டார் 

என்பது வருத்தம் தருகிறது. வாட்சப்பின் ஏகபோகம் அவரைப் 

பலி வாங்கி விட்டது. அதற்குப் பதிலாக வேறு ஒரு  appஐ 

உருவாக்கி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

அது நடக்கட்டும். 


வாட்சப்பில் இருந்து வெளியேறாமல் நமக்கு விடிவு இல்லை. 

வாட்சப் தனது வாட்டர்லூவைச் சந்திக்கட்டும்!

----------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

போலி இடதுசாரித் தற்குறிகளும் போலி மார்க்சிஸ்டு 

லெனினிஸ்டு தற்குறிகளும் வாட்சப்பை வரிந்து கட்டிக் 

கொண்டு ஆதரிக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 

கைக்கூலிகளான அவர்களின் முதுகுத் தொலியை  

உரிக்காமல் அவர்கள் திருந்த மாட்டார்கள்.

****************************************************   

சமூக வலைத்தளங்களின் தான்தோன்றிதத்தனமான போக்கை இந்தியா கட்டுப்படுத்த முடியுமா? இந்திய அரசியல்வாதிகளுக்கு சில தனியார் நிறுவனங்கள் இப்படி நடந்தால் தங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று யோசனைகள் வருகிறதா?

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாக்ஷி லேகி கொண்டு வந்த Personal Data Protection Bill, 2019 பற்றி மேலும் பேச Facebook, Twitter ஆகிவற்றை summon செய்து அழைத்ததை அக்கம்பனிகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்தன என்பது நாம் அறிந்ததே. சிங்கப்பூர் பாராளுமன்றம் அழைத்தால் உடனடியாக எந்த மறுப்பும் சொல்லாமல் அங்கு சென்று ஆஜராகும் இந்தக் கம்பனிகள்,ஏன் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்றம் கூப்பிட்டால் வர மறுக்கின்றன? இங்கிருக்கும் ஆட்சியாளர்கள், அரசு நிர்வாகத்தின் மீதான அவர்களின் அபிப்பிராயம் என்னவாக இருந்தால் அவை இப்படி நடந்து கொள்ளும்?
நம் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் மட்டும் என்ன வாழ்கிறது? வெள்ளைக்காரன் நம்மை recognize செய்வானா என்று ஏங்கிக் கிடக்கும் சமூகமாக இருக்கிறது இந்தியா. யாராவது ஒரு வெளிநாட்டுக்கார அரசியல்வாதி நம்மைப் பற்றி ஏதாவது புகழ்ச்சியாக சொன்னால் போதும், இங்கே கோடிக்கணக்கான பேர் புளகாங்கிதம் அ


Twitterல் தன் handle, blue-tick-mark உடன் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் அரசியல்வாதிகள் எத்தனை பேர்? அந்த அங்கீகாரம் கிடைத்து என்னவாகப் போகிறது?
இதோ, Joe Biden ஒரு handle உருவாக்கி, ஒரே ஒரு tweet செய்கிறார், உடனடியாக அது verified நிலையை (blue-tick-mark) அடைகிறது, எப்படி? அப்படியானால், இது பலர் பின்-தொடர்வதைக் கருத்தில் கொண்டு, algorithm முடிவு செய்து, பின் Twitter அந்த blue-tick-mark கொடுக்கவில்லை, இது physical verification மட்டுமே. இந்த algorithm, அப்படி ஒன்று இருந்தால், Twitter வெளியிடத் தயாரா? (*3)
இவ்வாறான ஒரு grey-shaded நடைமுறையில் இயங்கும் கம்பனிகள் நாளை நம் நாட்டில் பிரச்சனைகள் செய்யாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
தாக்குனூண்டு ஊகாண்டா - அது சமூக வலைத்தளங்களை தேர்தல் முடியும் வரை தடை செய்து இருக்கிறது. (*2) Facebook, ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாக அவ்வரசு சொல்கிறது. இந்த மனத் திண்மை இந்திய அரசியல் வாதிகளிடம் வரவேண்டும்.
உடனே, இங்கு பலர், சீன செயலிகளைத் தடை செய்ததை சுட்டிக் காட்டலாம். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, தடை செய்த செயலிகளில் மிகப் பெரியது TikTok. அதில் எந்த அரசியல்வாதியும் இல்லை, அதிகார வர்க்கத்தினரும் இல்லை, அதில் இருந்தவர்கள் அனைவரும் சாதாரணர்கள் என்பதால் அரசியல்வாதிகளால் அப்படி ஒரு முடிவை எளிதாக எடுக்க முடிந்தது.
நாளை இந்தியாவில், எந்தக் கட்சிக்கு வெல்லும் வாய்ப்பு இருக்கிறதோ, அதற்கு சாதகமாக நடப்பது போய், எந்தக் கட்சி வெல்ல வேண்டும் என்று சமூக வலைத்தள கம்பனிகள் தீர்மானிக்கும் நிலை வந்தால்?
Parler என்று ஒரு சமூக வலைத்தள சேவையை Amazon முடக்கியது, காரணம் ரிபப்ளிகன் கட்சியினர் அதிகம் பயன்படுத்தும் வலைத்தளம், அதனால் வன்முறை தூண்டப்படும் என்று காரணம் சொன்னது. Amazonனுடன் சேர்ந்து Google மற்றும் Apple, தன் App Storeல் உள்ள Parler செயலியை நீக்கியது. இது எந்த விதத்தில் நியாயம்? இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்தவித ஆதாரங்களும் காட்டப்படவில்லை – டெமாக்ரடிக் கட்சி முதல் தனியார் நிறுவனங்கள் வரை சொல்லும் காரணம் – Trump தேர்தல் முறைகேடுகள் பற்றி திரும்பத்-திரும்பப் பேசினார் என்பதனைத் தவிர வேறில்லை. (Trump தேவையில்லாமல் தேர்தல் தில்லுமுல்லு என்று அதிகமாகப் பேசி, அனைவரையுமே irritate செய்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை).
இந்தியாவில் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் இது போன்ற பிரச்சனைகள் வராது என்பது என்ன நிச்சயம்?
அப்போதைய சூழலுக்கு ஏற்ப, பாஜகவிற்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ இந்நிறுவனங்கள் சாதகமாக நடந்தால் என்ன செய்வது? கடைசி நிமிடத்தில் Trump போல முழி பிதுங்கி நிற்பதை விட, இப்போதே அரசு தகுந்த முன்னேர்ப்பாடுகளை, சட்டங்களை கொண்டுவருவது நல்லது.
WhatsAppஐ எடுத்துக் கொண்டால், ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களுக்கு கொடுக்கும் தனியுரிமைகளை இந்தியர்களுக்குக் கொடுப்பதில்லை. (*4) இது பற்றி எந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவது ஒரு 5 நிமிடங்களுக்குப் பேசும் அளவிற்கு தகுதி உள்ளவரா என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளவும்.
கருத்துரிமை பற்றி பேசும் இடதுசாரி லிபரல்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் Trump முடக்கப்பட்டதை ஆதரிக்கிறார்கள். இதே, இங்கே ராகுல் காந்தி அவர்களின் சமூக வலைத்தள கணக்கு முடக்கப்பட்டால் ஆதரிப்பார்களா?
Parlor செயலியை நீக்கியது போல, 2024 தேர்தலுக்கு முன் MyGovIndia செயலியை, பாஜக பிரச்சாரதிற்குப் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக சொல்லி, Google தனது play storeல் இருந்து நீக்கினால் ஏற்றுக் கொள்வோமா?
அவ்வளவு ஏன், நம் ஒவ்வொருவரின் சமூக வலைத்தள கருத்துக்களை வைத்து, நாம் பயன்படுத்தும் Jio அல்லது Airtel கம்பனிகள், தனது கொள்கைக்கு ஒவ்வாத முறையில் எழுதுகிறவன் என்று சொல்லி தனது internet அல்லது mobile சேவைகளை நிறுத்தினால் எப்படி இருக்கும்?
“நீ வலது சாரிச் சிந்தனையுடன் எழுதுகிறாய்”, என்று VISA நிறுவனம், எனது debit card சேவையை நிறுத்தினால் எப்படி இருக்கும்? வங்கி என் கணக்கினை முடக்கினால் என்ன ஆகும்?
இதே காரணத்தைச் சொல்லி, எனது internet service provider, இனி உனக்கு 56 kbps தான், இந்தக் கருத்து கொண்டவர்களுக்கு இந்தெந்த வேகத்தில் internet சேவை கொடுக்கப்படும் என சொன்னால் என்ன ஆகும்?
உடனடியாக இந்தியா செய்ய வேண்டியது.
1. இந்தியாவில் விற்கப்படும் கைபேசிகள் அனைத்தும், அது Android, iOS, KaiOS என எந்த இயக்க முறைமை கொண்டதாக இருந்தாலும் சரி, Indian App Store அதில் இருக்க வேண்டும். அதனை அந்த மென்பொருள் நிறுவனம் எந்த சூழநிலையிலும் நீக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும், நீக்கிகனால் இயக்க முறைமை / கைபேசி செயல்படக் கூடாது. Indian App Storeல் தான் இந்திய அரசுசார் செயலிகள் இருக்கவேண்டும், தரவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
2. எந்த சமூக வலைத்தள நிறுவனமும், இந்திய நாட்டின் IP addressல் வரும் தரவுகளை இந்திய serverகளில் மட்டுமே சேமிக்க வேண்டும்.
3. உடனடியாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் போல, தனியுரிமைச் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
4. முடிந்தவரை open source மென்பொருட்களை இந்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். முடிந்தால், சில incentives கூடக் கொடுக்கலாம்.
5. சமூக வலைத்தளங்களில் anonymous ஆக இருக்க முடியலாம், ஆனால், identity இல்லாமல் இருக்கக் கூடாது. அதற்கேற்றவாறு இந்தியாவில் சமூக வலைத்தள நிறுவனங்கள் செயல்படுமாறு கொள்கைகளை வகுக்க வேண்டும்.
6. பேச்சுக்கு, எழுத்துக்குத் தடை விதிப்பதை இந்த மண்ணின் சட்டங்கள் தான் செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்கள் அல்ல. அப்படி செய்ய விழையும் தனியார் சமூக வலைத்தள நிறுவனங்கள், அதில் வரும் கருத்துக்களுக்கும் எழுதுபாவரோடு சேர்ந்து சம பொறுப்பினை ஏற்க வேண்டும்.
7. தனிநபர், தனியார் அல்லது அரசு கட்டுப்படில்லாத ஒரே ஒரு சமூக வலைத்தளமாவது இம்மண்ணில் செயல்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை அரசு செய்ய வேண்டும்.
Critical theories என்பது 1920களில் உருவானது. அதில் இருந்துதான் சில சமூக பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது, அதே சமயம் தீர்க்க முடியாத பிரச்சனைகளும் உருவானது. இதனைப் பற்றி பலர் படித்து இருப்போம் - ஈ.வெ.ரா கூட இதில் இருந்து தான் பல கருத்துக்களை எடுத்து, தனக்கு ஏற்றவாறு யோசித்து சொல்லி இருக்க வேண்டும். இதன் பரிணாம வளர்ச்சியாகத்தான் cynical theories வந்திருக்கும். இதன் பலனை இப்போது அமெரிக்கா அனுபவிக்கறது, இந்தியா சரியான நடவடிக்கைகளை எடுக்க சரியான நேரம் இதுவே, எடுக்காமல் போனால் கூடிய விரைவில் அதன் பலனை அனுபவிக்கும். (*5)
தனியுரிமை மற்றும் சமூக வலைத்தள செயல்பாடுகளை அரசுகள் சரியாகக் கையாளாமல் போனால், பின்னாளில் பெரும் பிரச்சனைகளை மனித சமுதாயம் சந்திக்க நேரிடும். (*6).
------------------------------------
References:-
(*1) Open Secrets: Who are the Biggest Organization Donors?
(*2) The New York Post: Uganda bans all social media ahead of election, sparking outrage
(*3) Inspiration Search: Verified in one tweet: Joe Biden launches new Twitter handle to build following before taking command of White House
(*4) Wion: WhatsApp pushes new rules on Indian users, but Europeans are exempt
(*5) Book: Cynical Theories, by Helen Pluckrose & James Lindsay
(*6) Book: Artificial Intelligence and the Future of Power, by Rajiv Malhotra
Courtesy: Karthik Srinivasan
--------------------------------------------------------------

 




  

     

  

  


          

 



         

         

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக