ஞாயிறு, 27 ஜூன், 2021

அண்ணன் தன் தங்கையுடன் உடலுறவு கொள்வதை

ஆதரித்தும் வரவேற்றும் எழுதியதால்  

அருந்ததி ராயின் புத்தகத்துக்கு 

அமெரிக்கப் பள்ளிகளில் தடை! 

---------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------

முன்னாள் ஆவணப்பட நடிகையும் எழுத்தாளருமான 

சூசன்னா அருந்ததி ராய் எழுதிய  "Walking with the comrades"

என்னும் ஆங்கிலப் புத்தகம் நெல்லை மனோன்மணீயம் 

சுந்தரனார் பல்கலையில் பாடமாக இருந்தது. கடந்த 

ஆண்டில் அப்புத்தகத்தை பல்கலைக்கழகம் தடை செய்தது. 

தடை செய்த வேகத்திலேயே தடை நீக்கப் பட்டது. 

வாசகர்களுக்கு இது நினைவிருக்கலாம்.


அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் சூசன்னா 

அருந்ததிராயின் "The God of small things" என்னும் புத்தகம் 

பள்ளிகளில் summer reading பகுதியில் பாடமாக இருந்தது. 

Summer reading என்றால் Non detailed reading என்று பொருள்   

கொள்ளலாம்.


"The God of small things" என்னும் இப்புத்தகம் அலபாமா 

மாகாணத்தில் கடந்த ஆண்டில் 2019ல் தடை செய்யப்பட்டு 

பாடப் பகுதியில் இருந்து நீக்கப் பட்டது. பெற்றோர்கள் 

கொடுத்த புகாரின் பேரில்  இப்புத்தகத்திற்கு தடை 

விதிக்கப் பட்டது.


இந்த நாவலில் வரும் ஒரு அண்ணன் தன் தங்கையுடன் 

உடலுறவு கொள்வதை ஆதரித்தும் வரவேற்றும் அற்புதமாக 

வர்ணித்தும்  எழுதி உள்ளார் அருந்ததி ராய். இதைப் படிக்கும்

அமெரிக்கக் குழந்தைகள் கெட்டுப் போவார்கள் என்று 

பெற்றோர்கள் அளித்த புகார் காரணமாக இப்புத்தகம்      

பாடப் பகுதியில் இருந்து நீக்கப் பட்டது.


யாரும் யாருடனும் படுக்கலாம் என்பது அமெரிக்காவில் 

நிலவும் சுதந்திர பாலுறவுக் கொள்கை. அப்பேர்ப்பட்ட 

அமெரிக்காவில் கூட, சிறு குழந்தைகள் கெட்டுப் போகக்

கூடாது என்பதால் அருந்ததி ராயின் வக்கிரமான 

காமத்தைப் போற்றும் புத்தகம் தடை செய்யப் பட்டுள்ளது.


ஆனால் இந்தியாவில் போலி முற்போக்குகள், போலி 

இடதுசாரிகள், போலி மாவோயிஸ்டுகள் என்று அனைவரின் 

அபிமானத்துக்கும் இலக்கானவர் அருந்ததி ராய். நூறு

ஆண்டுகள் ஆன பின்னரும், இந்தியாவில் மார்க்சியம் 

ஏன் செல்வாக்குப் பெறவில்லை என்பதற்கு விடை 

இந்தப் போலிகளே. 


பின்நவீனத்துவம் வக்கிரம் பிடித்த பாலுறவைப் 

போற்றுகிறது. யாரும் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்

என்பது பின்நவீனத்துவத்தின் கோட்பாடு. 10 வயதுப் 

பெண் குழந்தையுடன் 70 வயதுக் கிழவன் உடலுறவு 

கொள்வதை பின்நவீனத்துவம் ஏற்கிறது; ஆதரிக்கிறது.


மேலும் உடலுறவில் உள்ள சமூகத் தடைகள் அனைத்தையும் 

மூர்க்கத் தனமாக எதிர்க்கிறது பின்நவீனத்துவம்.

உடலுறவில் உள்ள சமூகத்தடை என்பது என்ன?

அண்ணனும் தங்கையும் உடலுறவு கொள்ளக் கூடாது 

என்பது ஒரு சமூகத் தடை. பின்நவீனத்துவ வெறியரான 

சூசன்னா அருந்ததி ராய், மிகச்  சரியானதும் 

அறிவியல்பூர்வமானதுமான இந்த சமூகத் தடையை 

உடைத்து தமது "The God of small things" நாவலில் 

வக்கிரத்தை வெளிப்படுத்துகிறார்.


சாராம்சத்தில் சூசன்னா அருந்ததி ராய் யார்? அவர் ஒரு 

இடதுசாரியோ மார்க்சிஸ்டோ அல்லது மாவோயிஸ்டா 

மாவோயிஸ்ட் அபிமானியோ அல்லர். அவர் ஒரு லிபரல் 

பூர்ஷ்வா. மேலும் அவர் ஒரு பின்நவீனத்துவர்.


ஏகாதிபத்தியத்திடம் நிதி உதவி பெற்று ஒரு அரசுசாரா 

நிறுவனத்தை (NGO) அவர் நடத்தி வருகிறார். அவருக்கு 

நிதி வழங்கும் ஏகாதிபத்தியமே அவரின் எஜமானர் ஆகும்.


திருமணம், குடும்பம் ஆகியவற்றைக்  கடுமையாக 

எதிர்க்கும் அருந்ததி ராய் திருமணமோ குடும்பமோ

இல்லாமல் வாழ்ந்து வருகிறார். முதலில் ஒருவரோடு 

சில ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, அவருக்கு உடல் நலிவுற்ற 

நிலையில் அவரை விரட்டி விட்டு,வேறு ஒருவருடன் வாழத் தொடங்கினார்.பின்னர்  அவரையும் விட்டு விலகினார். 


அருந்ததி ராயின் அகராதியில் கணவர் (husband) என்ற 

சொல்லுக்கு இடம் கிடையாது. அதற்குப் பதிலாக 

பாலியல் பங்காளி (sexual partner) இடம் பெறுகிறார். 

இவ்வாறு மாபெரும் கலாச்சாரச் சீரழிவின் ஐக்கானாக 

(icon) அருந்ததி ராய் இருந்து வருகிறார்.


அருந்ததிராய் மட்டுமல்ல, பின்நவீனத்துவர்கள் அனைவருமே 

இந்தியாவின், தமிழகத்தின் கலாச்சாரத்தைக் குறிவைத்து 

அடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பின்நவீனத்துவத்தைப் 

பரப்பியவரான  இழிந்த அ மார்க்ஸ் இதே போன்று பெருத்த 

கலாச்சாரச் சீரழிவை சில பத்தாண்டுகளுக்கு முன்பே 

தமிழகத்தில் ஏற்படுத்தியவர்.  


தன்னிடம் வந்த எல்லா இளைஞர்களையும் திட்டமிட்டே 

குடிகாரர்களாக ஆக்கினார் அ மார்க்ஸ். அவர்களிடம் 

கட்டற்ற பாலியல் சுதந்திரத்தின் மேன்மை குறித்துப் 

பேசி, அவர்களைக் காமவெறியர்கள் ஆக்கினார் 

அ மார்க்ஸ்.


Fornicationஐ எங்கல்சே ஆதரிக்கிறார் என்று அ மார்க்ஸ்
பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியதை நான் காதால்
கேட்டேன்.
(Fornication = the action of having sex with someone who
you are not married to)
மார்க்சியம் நோக்கி வர வேண்டிய பல இளைஞர்களை,
அறிவுஜீவிகளை திட்டமிட்டு எதிர் முகாமுக்கு அனுப்பியவர்
அ மார்க்ஸ்.

அருந்ததி ராய்க்கு முற்போக்கு என்றும் இடதுசாரி என்றும்
போலியான பிம்பம் இருக்கிறவரை தமிழ்நாட்டிலும்
இந்தியாவிலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை
நீடித்துக் கொண்டே இருக்கும்.

நீங்கள் அருந்ததி ராயை ஆதரிக்கிறீர்கள் என்றால்

1) நீங்கள் குழந்தைகள்மீதான பாலியல் வக்கிரத்தை
ஆதரிக்கிறீர்கள் என்று பொருள்.

2) நீங்கள் அண்ணன் தங்கை உடலுறவை ஆதரிக்கிறீர்கள்
என்று பொருள்.
-------------------------------------------------------------------------------

       


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக