ஞாயிறு, 24 ஜூலை, 2022

எங்களுக்கு நாணம் இல்லை என்று சொல்லும் 
இந்தியப் பெண்கள்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------- 
இந்தியப் பெண்கள் கட்டுப் பெட்டிகள்; பத்தாம் 
பசலிகள்.உடலுறவின்போது இப்பெண்கள் 
உணர்ச்சியற்ற ஜடமாகப் படுத்துக் 
கிடப்பார்கள்.இவர்கள் ஒருபோதும் முழுமையான 
செக்ஸ் இன்பத்தை தாங்களும் அனுபவித்தது 
இல்லை; தங்கள் கணவன்மார்களையும் அனுபவிக்க 
விட்டதில்லை. 

இவையெல்லாம் இந்தியப் பெண்களின் பாலுறவு 
நாட்டம் மற்றும் பாலுறவு நடத்தை குறித்து
லிபரல் பூர்ஷ்வக்கள் முன்வைக்கும் புகார்கள்!
இப்புகார்கள் உண்மையா? பரிசீலிப்போம்.    

இந்தியப் பெண்கள் மற்றும் ஆண்கள் மீதும் 
செக்சை அனுபவிக்கத் தெரியாதவர்கள் என்ற 
குற்றச்சாட்டு 1980களில் முதன் முதலாக வைக்கப்பட்டது. 
வைத்தவர் ஆச்சார்ய ரஜனீஷ் (1931-1990) என்னும் 
ஒரு வட இந்தியச் சாமியார்.  

செக்ஸ் இன்பத்தில் "உச்சகட்ட யோகநிலை" என்னும்  
ஒரு கிளைமாக்ஸ் நிலை இருப்பதாகவும் இந்தியக் 
குடும்பஸ்தர்கள் அந்த உச்ச நிலையை அடைவதே 
இல்லையென்றும் ஆச்சார்ய ரஜனீஷ் ஆதங்கப்பட்டார்.
அவருக்கு நிறையச் சீடர்கள் சேர்ந்தனர். எல்லாம் உச்ச 
கட்ட யோகநிலையை அடைய விரும்பியவர்கள்தான்!

சரி, இந்தியப் பெண்கள் உணர்ச்சியற்ற பதுமைகளா?
ஆராய்வோம். சங்க காலப் பெண்கள் முதல் 
இன்றையப் பெண்கள் வரை ஆராய்ந்து விடலாம்.

திருக்குறளில் ஒரு காட்சி! காமத்துப்பால்; அதிகாரம் 
நிறையழிதல். நிறை = ஒழுக்கம். நிறையழிதல் 
என்றால், காதலனுடன் கூடும் விருப்பத்தால்,
பெண் தனது சகல கட்டுப்பாடுகளையும் இழந்து 
நிற்றல்.

நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால் 
பேணியார் பெட்ப செயின்.

நாண் = நாணம் 
நாண் என ஒன்றோ = நாணம் எனப்படும் ஒன்றை 
அறியலம் = அறியாமல் உள்ளோம், தெரியாது.
காமத்தால் = காமம் மேலோங்கி நிற்க 
பேணியார் = காதலர் அல்லது கணவர் 
பெட்ப செயின் = விரும்பியதைச் செய்தார்கள் என்றால்.
(செயின் = செய்யின், செய்தால்)  
   
இக்குறளின் பொருள் என்ன? அந்தப் பெண் கூறுகிறாள்:
உடலுறவின்போது, காமம் மேலிட, எங்களின் 
கணவன்மார்கள் நாங்கள் விரும்பியதை எல்லாம் 
செய்வார்கள் என்றால், நாணம் என்ற ஒன்று 
இருப்பதையே அறியாதவர்களாக நாங்கள் 
நடந்து கொள்வோம்.

இந்தக் குறள் காமத்தின் உச்சம்! செக்சின் உச்சம்.
நாணமாவது வெட்கமாவது, எங்களுக்கு அதெல்லாம் 
தெரியாது! காமத்தின் உச்சத்தை அடைய, எங்கள் 
கணவன்மார்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் 
போவோம் என்கிறாள் அந்தப் பெண்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாலுறவில் 
இவ்வளவு புரட்சிகரமான கருத்துக்களை 
வள்ளுவர் சொல்லி இருக்கிறார். அதுவும் ஒரு 
பெண்ணின் கூற்றாகச் சொல்லி இருக்கிறார்.

அவருக்கு முன்னோடியாக வாத்சாயனர் பொசமு 
400ஆம் ஆண்டில் (கிறிஸ்து பிறப்பதற்கு 400 
ஆண்டுகளுக்கு முன்பே) உடலுறவை முற்றிலும் 
அறிவியல் அடிப்படையில் விளக்கி காமசூத்ரா 
என்னும் நூலை எழுதி உள்ளார்.

காமசூத்ராவின் காலத்திற்கு வெகுவாகப் பிந்தி,
கொக்கோக முனிவரின் கொக்கோக சாஸ்திரம் 
உள்ளது. அதற்கு அதிவீர ராம பாண்டியர் 
எழுதிய உரையை நான்  படித்திருக்கிறேன்.

கண்ணதாசனும் 
"முறையுடன் மணந்த கணவர் முன்னாலே 
பரம்பரை நாணம் தோன்றுமா?" 
என்று பெண் பாடுவதாக எழுதி இருப்பார்.

நமக்குத் தெரிந்த காம சூத்திரங்களை எல்லாம் 
ஐரோப்பியர்கள் அறிந்து கொள்ள, 19ஆம் நூற்றாண்டு 
வரை, அதாவது  சிக்மண்ட் பிராய்டு (1856-1939) 
வரும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.
   
ஆக அறிவில் மூத்தவன் தமிழனும் இந்தியனுமே!
ஐரோப்பியன் அல்லன்.இதை இந்தக் கட்டுரையில் 
நிரூபித்து இருக்கிறேனா? ஆம்! QED.
-----------------------------------------------------------------
பின்குறிப்பு:
இந்தக் கட்டுரையின் இறுதியில் QED என்று 
குறிப்பிட்டுள்ளேன். ஏன்? அதன் பொருள் என்ன?
வாசகர்கள் விடை கூற வேண்டும்.
********************************************

 
      


 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக