வெள்ளி, 2 ஜனவரி, 2015

முதல்வர் கனவில் குஷ்பூ! 
----------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------- 


நடிகை குஷ்பூ கண்ணாடியில்  முகத்தைப் பார்க்கிறார்.
அவர் முகம் தெரியவில்லை. ஒரு முதலமைச்சரின் 
முகம் தெரிகிறது. ஆக, முதல்வர் கனவில் மிதக்க 
ஆரம்பித்து விட்டார் குஷ்பூ. சினிமாவில் பல 
கனவுக் காட்சிகளில் நடித்தவர் அல்லவா!

இது தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு 
அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் 
பேச இருக்கிறாராம் குஷ்பூ. முதல் கட்டமாக,
கம்யூனிஸ்ட் தலைவர்கள் தா பாண்டியன்,
நல்லகண்ணு ஆகிய இருவரையும் சந்திக்கத் திட்டமாம்.

தா பாண்டியனையும் நல்லகண்ணுவையும் ஏன் 
தேர்ந்தெடுத்தார் குஷ்பூ? பதில் தருகிறது குஷ்பூ வட்டாரம்.
சினிமா நடிகைகள் அரசியலில் பிரதமர், முதல்வர் 
போன்ற உயர் பதவிகளுக்கு வருவதை ஆதரிக்கக் 
கூடியவர்கள் இந்தியாவிலேயே இவர்கள் இருவர் 
மட்டும்தானாம். ஜெயலலிதாவை பிரதமர் பதவியில் 
அமர்த்த வேண்டும் என்று இவர்கள் இருவரும் 
குரல் கொடுத்ததைச் சுட்டிக் காட்டுகிறது குஷ்பூ 
வட்டாரம்.

எனவே கூடிய விரைவில் குஷ்பூ-தா பாண்டியன் சந்திப்பு 
நிகழலாம். சந்திப்புக்குப் பின், "தமிழக முதல்வர் ஆவதற்கு 
குஷ்பூவைத் தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை" என்று
தா.பா அறிக்கை விடலாம். நல்லகண்ணு அதை வழிமொழியலாம்.

இதெல்லாம் நடக்குமா என்று யாரும் சந்தேகம் கொள்ளத் 
தேவையில்லை. நடக்காமல் இருந்தால்தான் அதிசயம்!
சகல கேவலங்களுக்கும் தயாராகத் தானே இருக்கிறது தமிழ்நாடு!

யாரோ காறித் துப்பும் சத்தம் கேட்கிறது!

************************************************************** 

-----------------------------------------
(வகை: அரசியல்/பகடி) 
------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக