ஞாயிறு, 25 ஜனவரி, 2015

குட்டி முதலாளித்துவ வாசகர்களின்  
சொற்காமுகமும் ( PHRASE MONGERING)
-------------------------------------------------------------
CPM கட்சியின் சந்தர்ப்பவாதம் தமிழக அரசியலில் 
நீண்ட வரலாற்றைக் கொண்டது. நெருக்கடி நிலையின்போது 
தமிழ்நாட்டில் திமுக, திக, ஆர்.எஸ்.எஸ், மார்க்சிஸ்ட் 
ஆகிய கட்சிகள் கடுமையாக ஒடுக்கப் பட்டன. மக்களுக்குத் 
துரோகம் செய்து, CPI  கட்சியும் அதிமுகவும் நெருக்கடி நிலையை 
ஆதரித்தன. எம்.ஜி.ஆர் பட்டவர்த்தனமாக நெருக்கடி நிலையை 
ஆதரித்தார்.
நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டு, 1977இல் 
தேர்தல் நடைபெற்றது இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி 
நெருக்கடி நிலையை ஆதரித்த அதிமுகவுடன் கூட்டணி 
வைத்தது. இது கட்சி அணிகளிடையே பெரும் கொந்தளிப்பை 
ஏற்படுத்தியது.கட்சியை விட்டுப் பலர் விலகினர். (அப்போது 
கட்சியில் இருந்த இக்கட்டுரையாளர், தோழர் பி.ஆர்.பி 
அவர்களிடமே சண்டை போட்டார்.) 

இது சந்தர்ப்பவாதமா இல்லையா? இதை நியாயப் படுத்த இயலுமா/
இதைக் கூறினால் திமுக ஆதரவு என்று கூறுவதா?
எவ்வளவு பேதைமை!

திராவிட இயல் சித்தாந்தம் பாட்டாளி வர்க்க சித்தாந்தம் 
அல்ல. அது அடையாள அரசியலையும் தன்னுள்  ஒரு பகுதியாகக் 
கொண்டது.மார்க்சியம் வர்க்க சித்தாந்தம்;அதில் அடையாள அரசியலுக்குப் 
பெரிதான இடம் இல்லை.

இக் கட்டுரை ஒரு மார்க்சியப் பகுப்பாய்வு. திராவிட இயல் 
கட்டுரை என்றால் அது வேறு மாதிரி இருக்கும். முற்றிலும் வேறுபட்ட இடத்தில் வேர் கொண்டிருக்கும். இந்த வேறுபாட்டைப் புரிந்து 
கொள்வது, கட்டுரையைப் புரிந்து கொள்ள உதவும்.  

குட்டி முதலாளித்துவ நுனிப்புல் வாசகர்கள், எல்லாவற்றையும் 
எளிமைப் படுத்திப் புரிந்து கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் 
எளியவொரு சூத்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் வாழ்க்கை 
அவ்வாறு இல்லை. அது மிகவும் COMPLEX ஆக உள்ளது.
எந்த ஒன்றுக்கும் நேர்கோட்டுப் பாதை இல்லை.ZIGZAG ஆக உள்ளது.

இது புரியாமல் கு.மு வாசகர்கள், கட்டுரையாளர் திமுகவை 
ஆதரிக்கிறார் என்று சுலபமாக முடிவுக்கு வருகிறார்கள்.

கட்டுரையின் மையக் கருத்துக்கு எதிராக ஒரு உதாரணமோ 
அல்லது விஷயம் அடங்கிய ஒரு வாக்கியமோ கூற இயலாத 
வெறுமை காரணமாக, கு.மு அன்பர்கள் சொற்காமுகத்தில் இறங்கி 
விடுகிறார்கள்.  

கட்டுரை ஜெயா -CPMஇன் இறுக்கமான பிணைப்பை ஏகப்பட்ட 
ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறது. CPM கட்சியின் வர்க்க 
அடித்தளத்தை ஆதாரத்துடன் அம்பலப் படுத்துகிறது.

இது தவறு என்றால், கு.மு அன்பர்கள் இதை DISPROVE செய்ய 
வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்பதால் 
கட்டுரையின் சாரம் சரியானது என்பது மீண்டும் 
நிரூபிக்கப் படுகிறது. 

 *************************************************88.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக