திங்கள், 26 ஜனவரி, 2015

ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன!
------------------------------------------------------------------------------------------------- 
கட்டுரையின் மையக் கருத்து CPMஇன் திவால் அரசியல் பற்றியது.
தொடர்ந்து திவால் அரசியலைப் பின்பற்றி வருவதால் CPM  கட்சி 
காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பது உண்மை. இதை 
ஏகப்பட்ட ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் 
இக்கட்டுரை மெய்ப்பிக்கிறது. கட்டுரையின் இந்த மையக் 
கருத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூடச் சொல்ல இயலாத 
பலவீனமும் ஆற்றாமையும் சேர்ந்து குட்டி முதலாளித்துவ 
அன்பர்களை ஆத்திரம் கொள்ள வைக்கிறது.

இக்கட்டுரை சாதியம் குறித்த கட்டுரை அல்ல.அல்லது 
தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவதில் CPM, திமுக,
அதிமுக கட்சிகளின் நடைமுறைத் தந்திரம், துணிச்சல் 
பற்றிய கட்டுரை அல்ல. கட்டுரையின் பேசுபொருள் 
இது அல்ல.

கடந்த பத்தாண்டுகளாகவே மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
செயல்பட்டு வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில், காத்திரமான 
விவாதங்களை முன்னெடுப்பதிலும் ஒருங்கிணைப்பதிலும் 
குறிப்பிடத்தக்க பங்கை ஆற்ற முடிந்தது. தலித் அறிவுஜீவிகள்,
குறிப்பான சில CPM தோழர்கள், மா.லெ தோழர்கள், மார்க்சிய 
விமர்சகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று , பலகட்ட விவாதங்களின் 
இறுதியில், சில முடிவுகள் பெறப்பட்டன. 

இவை முடிந்த முடிவுகள் என்று நாங்கள் உரிமை கோரவில்லை.
இன்னும் ஒரு பரந்த தளத்தில் இவை விவாதிக்கப் படுவது 
சரியானது மட்டுமல்ல தேவையானது என்றும் நாங்கள் 
கருதுகிறோம்.

படித்தல் மட்டும் போதாது.
சிந்தித்தல் மட்டும் போதாது.
விவாதித்தலும் அவசியம்.
படித்தல்-சிந்தித்தல்-விவாதித்தல் என்பதன் வாயிலாகவே 
மார்க்சியத்தைக் கற்க இயலும்.     

படித்தலும் சிந்தித்தலும் தனிமனித முயற்சியால் சாத்தியமாகும்.
ஆனால் விவாதித்தலுக்குக் கூட்டு முயற்சி தேவைப் படுகிறது.  

எனவே கட்டுரையின் மையக் கருத்தான, CPM திவால் அரசியலைப் 
பின்பற்றுகிறது என்பதை மறுத்தும் எதிர்த்தும் சொல்லப்படும் 
கருத்துக்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

துரதிருஷ்ட வசமாக, காத்திரமானதும் கருத்துச் செறிந்ததும் 
ஆன  எதிர்வினைகள் வரவில்லை. வெற்றிகொண்டான்--
நாஞ்சில் சம்பத் தரத்திலான லாவணிகள் மட்டுமே வருகின்றன.
இவை பரிசீலனைக்கு உகந்தவை அல்ல.

தனக்கு உவப்பில்லாத ஒரு கருத்தை எதிர்கொள்ள நேரும்போது,
ஒரு மார்க்சியவாதி, கருத்து ரீதியாக அதற்கு எதிர்வினை 
ஆற்றுகிறான். தன்னுடைய  ËGO IS OFFENDED" என்று அவன் 
கருதுவதில்லை. ஆனால் குட்டி முதலாளித்துவவாதி தன்னுடைய 
EGO IS OFFENDED என்று கருதி ஆத்திரத்துடன் எதிர்வினை 
ஆற்றுகிறான்.

முகநூல் என்பது குட்டி முதலாளித்துவக் குறைகுடங்கள்
கூத்தாடும் இடம்தான் என்றாலும் அங்கும் சில காத்திரமான 
விவாதங்கள் நடைபெறுகின்றன என்று சில ஆதாரங்களைக் 
காட்டினார் நண்பர். எனவே, நாடாளுமன்றப் புறக்கணிப்பு 
போல, முகநூல் புறக்கணிப்பு வேண்டாம்  என்று 
அறிவுறுத்தினார் நண்பர்.   

காத்திரமான விவாதங்களில் பங்கேற்கவல்ல முதிர்ச்சி உடைய 
ஒரு குழாமை( A GROUP ) அமைக்க முயற்சி செய்யுங்கள் 
என்று கேட்டுக் கொண்டார் நண்பர்.

இறுதியாக ஒரு சொல்!
IS THE POLITICS OF CPM BANKRUPT OR NOT?
WE INVITE MEANINGFUL RESPONSES BOTH FOR AND AGAINST.
THAT IS ALL.

பி இளங்கோ சுப்பிரமணியன் 
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் சார்பாக.  
  
*************************************************************       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக