செவ்வாய், 26 ஜனவரி, 2021

மத்திய அரசு ஊழியரான (தென்னக ரயில்வே) 

அனிதா பால்துரைக்கு பத்மஸ்ரீ! வாழ்த்துகிறோம்!

-------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------

அனிதா பால்துரைக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி 

உள்ளது. இவர் கூடைப்பந்து வீராங்கனை. கிரிக்கெட் 

ஆடுபவர்களைத் தவிர தமிழகம் வேறு விளையாட்டு 

வீரர்களை அறிந்து கொள்வதில்லை. எனவே அனிதா பால்துரை 

என்றால் தெரிந்தவர்கள் பொதுவெளியில் பூஜ்யமே. விளையாட்டுத் 

துறையினருக்கு மட்டுமே அனிதாவைத் தெரியும்.


தமது 19 வயதிலேயே இந்திய தேசிய அளவிலான மகளிர் 

கூடைப்பந்து அணியின் (national team) கேப்டனாக இருந்தவர் 

அனிதா. உரிய  GK புத்தகங்களை படித்து அவரின் 

சாதனைகளை அறிந்து கொள்ளுமாறு வாசகர்களைக் 

கேட்டுக் கொள்கிறோம்.


அனிதா பால்துரை ஒரு தமிழ்ப்பெண் ஆவார். 

மத்திய அரசு ஊழியரும் ஆவார். தென்னக ரயில்வேயில் 

TTEஆக (Travelling Ticket Examiner) பணிபுரிந்து வருகிறார். 

காங்கிரஸ் அரசு இவரைக் கண்டுகொள்ளவில்லை.

இவருக்கு அர்ஜுன் அவார்டு கூட வழங்கவில்லை.

தற்போது பத்ம விருது வழங்குவதில் உள்ள இழிந்த 

அரசியல் வெகுவாகக் குறைந்துள்ளது. காங்கிரஸ் 

ஆட்சியின்போது இது கொடிகட்டிப் பறந்தது. 


எனினும் விருது வழங்குவதில் உள்ள இழிந்த அரசியல்

பாஜக அரசில் முழுவதுமாகக் குறையவில்லை. அப்படி 

முழுவதும் குறைந்திருந்தால் நியூட்டன் அறிவியல் 

மன்றத்துக்கு, அதன் நிறுவனருக்கு  அல்லவா  பத்மஸ்ரீ 

வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

    

இந்த இடத்தில் ஒரு உண்மையைக் கூறிவிட வேண்டும்.

நியூட்டன் அறிவியல் மன்றம் தனக்கு விருது வழங்கப்படும்  

என்ற எதிர்பார்ப்பில் செயலாற்றுவதில்லை. நியூட்டன் 

அறிவியல் மன்றத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் பட்டால் 

அதை ஏற்க மறுப்பதே எங்கள் கொள்கை. நியூட்டன் அறிவியல் 

மன்றத்துக்கு விருது அறிவிக்கப் பட்டால், உடனடியாக 

அதை ஏற்க மறுத்து அறிக்கை வெளியிடுவோம் நாங்கள்.  


மத்திய அரசு ஊழியரான அனிதா பால்துரை 

பத்மஸ்ரீ விருது பெற்றமைக்கு நியூட்டன் அறிவியல் 

மன்றம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


அனிதா பால்துரை விவரங்கள்:

----------------------------------------------

வயது: ஜூன் 22 1985, 35

படிப்பு: B.Com, MBA

Community: OBC Christian 

Nationality: Indian, Tamil. 

*************************************        

கலைஞரை பார்க்க ஆசைப்பட்டேன், ஸ்டாலினைப் பார்த்து என் ஆசையைச் சொன்னேன்! ஆனா மூனு மாசத்துலயே கலைஞர் இறந்து போய்ட்டார்,அப்புறம் குன்னூர் வந்தப்ப ஸ்டாலினை பார்த்து பேசினேன்! கடைசி வரை கட்சிக்காக பாடுபடுவேன்! எல்லா கட்சிக் கூட்டத்துலயும் முதல் ஆளா கலந்துப்பேன்!சாகுறதுக்குள்ள இன்னொருதடவை ஸ்டாலினைப் பார்த்து பேசனும்னு ஆசையா இருக்கு என பேட்டி கொடுத்தார், பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியான 105 வயது மூதாட்டி பாப்பம்மாள்!அவர் சார்ந்த கட்சிக்கு விசுவாசமாய் இருக்க அவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது, இந்த வயதிலும் விவசாயத்தை தொடரும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழும் அவர் இந்த விருதுக்கு தகுதியானவர், அவருக்கு வாழ்த்துக்கள்!
ஸோஹோ ஸ்ரீதர் வேம்பு ஐயா அவருக்கு வர்த்தகத்தில் பத்மஸ்ரீ விருதும் மகிழ்ச்சி, மறைந்த சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஐயா, லாப நோக்கமல்லாது 20ரூ உணவகம்,மருந்தகம், ஏழைகளுக்கு மின்மயானம் உள்ளிட்ட பல சாதனைகளை செய்தவருக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது! அசல் 5ரூ டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் தேர்வாகியுள்ளார், மகிழ்ச்சி! பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, விளையாட்டு வீராங்கனை அனிதா இவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும்!பின்னனிப் பாடகி சித்ராவுக்கு பத்ம பூஷனும், SPB அவர்களுக்கு பத்ம விபூஷனும் கிடைத்திருக்கிறது, தகுதியான தேர்வு! மொத்தம் 119 பத்ம விருதில் 7பேருக்கு பத்ம விபூஷன், 10பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் கொடுக்கப்பட்டுள்ளது!
சச்சின் ஓய்வு பெறும் போது பாரதரத்னா அறிவித்தது காங்கிரஸ் அரசு, சச்சின் அதற்கு தகுதியானவர் என்பது ஒருபுறம் இருக்கட்டும்!விளையாட்டுக்கு அதுநாள் வரை இல்லாத பாரதரத்னாவை புதிதாக தந்தது ஓட்டு அரசியலுக்கு! தொடர்ந்து தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் ஆதாயம் என்றால் விருது அல்ல நாட்டின் முதல் குடிமகனாகக் கூட அமர வைக்கும் காங்கிரஸ்! தொடர்ந்து எளியவர்களுக்கு,சாதித்து உரிய அங்கீகாரம் இல்லாதவர்களுக்கு பாஜக பெருமை தருகிறது! பாப்பம்மாளோ, ராஜீ முருகனோ அவர்களின் பின்னனியைப் பார்ப்பதில்லை! அரிசியலும் செய்வதில்லை!

குறிப்பாக இந்த ஆட்சியில் விருதுகள் விற்பனைக்கு அல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக