திங்கள், 7 ஜனவரி, 2019

இயங்கியல் வகுப்பு வெற்றிகரம்!
புதியவர்களின் வருகையால் பொலிவு!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
1) ஞாயிறு மாலை (06.01.2019)  நடைபெற்ற இயங்கியல்
(வகுப்பு-6) வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

2) தொடர்ச்சியாக எமது வகுப்புகளுக்கு
வருபவர்களில் 75 சதம் இந்த வகுப்புக்கு
வரவில்லை. அவர்கள் புத்தகச் சந்தைக்குச்
சென்று விட்டனர். உரிய நேரத்தில் வர இயலவில்லை.

3) எனினும் முற்றிலும் புதியவர்கள் பலர் இந்த
வகுப்புக்கு வந்தமையால், கணிசமான கூட்டம்
சேர்ந்து விட்டது.

4) இதன் விளைவாக, அறிவிக்கப்பட்ட பொருளில்
( நவீன இயற்பியலும் இயங்கியலும்) வகுப்பு நடத்த
இயலவில்லை; அவ்வாறு நடத்தினால், வழக்கமாக
வரும் வாசகர்களுக்கு பாடத் தொடர்ச்சி
அறுபட்டுவிடும் என்பதால்.

5) எனவே பின்வரும் பொருளில் வகுப்பு நடைபெற்றது.
அ) இதுநாள் வரை 1 முதல் 5 வகுப்பு வரை நடந்த
வகுப்புகளில் கூறப்பட்டவற்றின் தொகுப்பு.
ஆ) 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்பட்டது
முதல் இன்று 2018 வரையிலான 170 ஆண்டுகளில்
நிகழ்ந்த மாற்றங்கள்
இ) தத்துவத்தைப் புதுப்பிப்பதன் அவசியம்.
மேற்குறித்த பொருளில் வகுப்பு நடைபெற்றது.

6) அறிவித்தபடி இயங்கியலும் நவீன இயற்பியலும்
என்ற பொருளில் வகுப்பு நடத்த இயலாமல்
போனதற்காக நியூட்டன் அறிவியல் மன்றம்
வாசகர்களிடம்  மன்னிப்புக் கோருகிறது.

7) அடுத்த ஞாயிறு அன்று (13.01.2019) இயங்கியல்
வகுப்பு இல்லை. அன்று அநேகமாக போகிப்
பண்டிகை இருக்கக் ;கூடும்; மேலும் புத்தகச்
சந்தைக்குச் செல்வோரும் இருக்கக் கூடும்.
எனவே 13.01.2019 அன்று வகுப்பு நடத்த வேண்டாம்
என்று நியூட்டன் அறிவியல் மன்றம் முடிவு
செய்துள்ளது.

8) எனவே அடுத்த கூட்டம் (7ஆவது இயங்கியல் கூட்டம்)
20.01.2019  ஞாயிறு மாலையன்று நடைபெறும்.

9) அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு
வேண்டுகிறோம்.
*********************************************************
இங்கு கொடுக்கப்பட்ட சமன்பாடுகளை
உருவாக்கியவர் யார்? அவை எதைக் குறிக்கின்றன?

திமுகவினர் குறிப்பாக வெற்றிகொண்டான்
குடுமத்தினர் அனுமாரை வழிபட்ட
காட்சியின் புகைப்படங்களை அருள்கூர்ந்து
பதிவிடுக.

அனுமன் ஜெயந்தி என்று நடந்தது? அசோக்நகர்
அனுமன் கோவிலில் அனுமன் விக்கிரகம் இதுதானா?
முடிந்தால் உரிய புகைப்படங்களைப் பதியவும்.
கனக்குத் தீர்க்க வேண்டிய வேலை
பாக்கி இருக்கிறது.

ஆஞ்சநேயரை வணங்குவதே பகுத்தறிவு!
அனைத்துச் சாலைகளும் அனுமாரை நோக்கியே!
ஹனுமன் என்ற பெயர்க் காரணம்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
ஹனுமன் என்ற சொல்லை அனுமன் என்று தமிழில்
வழங்குகிறோம். ஹனு என்ற  சமஸ்கிருதச் சொல்லுக்கு
கன்னத்து எலும்பு என்று பொருள். ஹனுமன் என்றால்
உடைபட்ட கன்னத்து எலும்பைக் கொண்டவன்
என்று பொருள்படும். இப்பெயர் எப்படி வந்தது?

அனுமனின் தந்தை வாயு பகவான். அனுமன்
சிறுவனாக இருக்கும்போது ஒருமுறை சூரியனைப்
பார்த்தபோது, அது செக்கச் சிவந்த பழம் போன்று
தோன்றவே, அதன் மீது ஆசை கொண்டு, சூரியனை
எடுத்து விழுங்கி விட்டான். ஹனுமன் சூரியனை
விழுங்கி விட்டமையால் உலகமே இருண்டு போனது.
எனவே அனைவரும் அனுமனின்  தந்தையான
வாயு பகவானிடம் முறையிட்டனர்.

வாயில் போட்டுள்ள சூரியனைத் துப்பி விடுமாறு
வாயு பகவான் எவ்வளவோ சொல்லியும் அனுமன்
கேட்கவில்லை. கோபமடைந்த வாயு பகவான்
தன் கையில் இருந்த கதாயுதத்தால் அனுமனின்
கன்னத்தில்  ஓங்கி அடித்தான். அடி விழுந்ததும்
ஹனுமான் சூரியனைத் துப்பி விட்டான். ஆனால்
விழுந்த அடியில் அனுமனின் கன்னத்து எலும்பு
உடைந்து விட்டது. இவ்வாறு ஹனுமன் (உடைந்த
கன்னத்து எலும்பினன்) என்ற பெயர் பெற்றான்
அனுமன்.

அண்மையில் அனுமன் ஜெயந்தி வந்து போனது.
 தமிழகம் முழுவதும் உள்ள அனுமார் கோவில்களில்
பெருங்கூட்டம்.  சுசீந்திரம் அனுமார் கோவில் முதல்
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் வரை கூட்டமோ
கூட்டம் பெருங்கூட்டம்.

பக்தர்களால் அல்ல "பகுத்தறிவாளர்"களால்
ஆஞ்சநேயரின் பிரகாரங்கள் நிரம்பி வழிந்தன.
அனைவரும் முன்னாள் பகுத்தறிவாளர்கள்;
போலிப் பகுத்தறிவாளர்கள்!

மனிதகுல வரலாறு கண்டும் கேட்டும் இராத
ஆபாசப் பேச்சாளர் திமுகவின் மறைந்த பு இ
வெற்றிகொண்டானின்  குடும்பத்தினர்
அசோக் நகர் ஆஞ்சநேயர்  ஆலயத்தில்
வழிபட்டு ஆஞ்சநேயரின் அருளைப் பெற்றனர்.

திமுகவின் கே கே நகர் பகுதிச் செயலாளர்
பு இ தனசேகரன் தலைமையில் பெருங்கூட்டமாக
போலிப் பகுத்தறிவாளர்கள் கோவிலுக்கு வந்து
ஆஞ்சநேயரின் அருளைப் பெற்றனர்.

கணிதப் புள்ளியியல் (mathematical statistics) படித்தவர்களைக்
கொண்டு ஒரு புள்ளிவிவர ஆய்வு மேற்கொண்டால் அது
கீழ்க்கண்டபடி இருக்கும்.

ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றவர்கள்
யார் யார் என்ற விவரம்:
1. திமுகவினர் = 54 சதம்
2. அதிமுகவினர் =42 சதம்
3. பாஜகவினர் =1.8 சதம்
4. இதர கட்சியினர் = 2,2 சதம்.

கொடிகட்டிப் பறக்கிறது போலிப்பகுத்தறிவு!
ராஜாத்தி அம்மாள், துர்கா அம்மையார்
ஆகியோரின் கொள்கைகளை உயர்த்திப்
பிடிப்போம்!
********************************************************

பு இ = புழுவினும் இழிந்த.
  
நீங்கள் கொடுப்பது வேறு ஒரு புள்ளி விவரம்.
நான் கொடுத்திருப்பது ஆஞ்சநேயர் கோவிலுக்கு
அனுமன் ஜெயந்தி நாளன்று சென்றவர்களில்
எந்தெந்தக் கட்சியினர் எவ்வளவு சதம் என்பது
பற்றிய புள்ளி விவரம். இந்தப் புள்ளி விவரத்தை
சரித்தன்மையை எம்மால் நிரூபிக்க இயலும்.

கன்னம் வீங்கி விட்டது.


புத்தகச் சந்தை தமிழ்மண் பதிப்பகம்
(கடை எண் 276) செல்க. அங்குள்ள  அறிவியல் ஒளி
ஏட்டின் ஆசிரியர் சிதம்பரம் அவர்களிடம்
ஆண்டுச்சந்தா ஆயுள்சந்தா செலுத்துக!   


திருப்பூர் குணா மருதுபாண்டியன் செந்தழல் ஞானம்
சிலம்பரசன் சே

அறிவியல் ஒளி ஏடு சந்தா விவரம்:
ஆண்டுச் சந்தா ரூ 180'ஆயுள் சந்தா ரூ 2500.

அறிவியல் ஒளி ஏடு அறிவியலுக்கென்றே
தமிழில் வெளிவரும் ஏடு. காத்திரமான
அறிவியல் கட்டுரைகளைப் படிக்க
தமிழில் வேறு ஏடு இல்லை. இது கடைகளில்
கிடைக்காது. சந்தா கட்டித்தான் இதழைப்
பெற முடியும். எனவே சந்தா கட்டுக.
ஆண்டுச் சந்தா ரூ 180'ஆயுள் சந்தா ரூ 2500.


அறிவியல் ஒளி ஆசிரியரின் அலைபேசி
94440 63497.
மின்னஞ்சல் ariviyaloli@yahoo.co.in


செலுத்துங்கள்.

ஐயா,
முழுமை அறிவியல் உதயம் ஏட்டைப் பல
ஆண்டுகளாக நான் வரவழைத்து வாங்கிப்
படிக்கிறேன். அறிவியல் ஒளி வாசகர்களில்
பலர் முழுமை அறிவியல் உதயம் வாசகர்களே.
அது மிகுதியும் வேதியியல் சார்ந்து நடத்தப்படும்
ஓர் ஏடு. தமிழனுக்கு அதன் அருமை தெரியவில்லை.
ஒவ்வொரு இதழிலும் ஒரு தனிமத்தை அலசி
ஆராய்ந்து எழுதி இருக்கின்றனர்.

அறிவியல் ஒளி ஆசிரியர் சிதம்பரம் அவர்கள்
அண்மையில் அமெரிக்கா சென்று வந்தார்.
தமது பயண அனுபவங்களை தொடராக
எழுதி வருகிறார்.

தாங்கள் சந்தா செலுத்த முன்வருவது
வரவேற்கத்தக்கது. ஆர்வம் உடைய
சிலரின்  பட்டியலை நான் அனுப்பலாமா?

மிக்க நன்றி. நாளை பட்டியலை
முழு விவரங்களுடன் அனுப்புகிறேன்.
பட்டியலில் இடம் பெறுவோர் அறிவியலில்
பெரும் ஆர்வம் உடையவர்கள். நன்றி.  

பாதிரியின் கயமை!
இவனைப் போன்ற கயவர்கள் வீதியில்
நடமாடக் கூடாது! நடமாட விடக்கூடாது!


அநேகமாக இவன் நாளையோ அல்லது
நாளை மறுநாளோ ஜாமீனில் வந்து விடுவான்.
மனித உரிமைப் போராளிகள் அவனுக்கு
ஜாமீன் வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.


அப்படிப்பட்ட போலிப் பாதிரியார்களையும்
அவர்களின் சபைகளையும் கிறிஸ்துவ
மதத்  தலைமைப் பீடம் ஏன் தடை செய்யக் கூடாது?




இந்தியாவில் எந்த ஒன்றாவது ஒருபடித்தான தன்மை
(homogeneous) கொண்டிருக்கிறதா? இல்லையே!
எல்லாமே heterogeneousஆகத்தான் உள்ளது.
அது போலவே மனித உரிமைத் துறையிலும்
இரு வகையினர் உள்ளனர்.
1. மனித உரிமைப்  போராளிகள்    
2. மனித உரிமை பேசும் கயவர்கள்.

நான் இங்கு கயவர்களை  மட்டுமே குறிப்பிடுகிறேன்.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பார் யாம்கண்ட(து) இல்.


மருதுபாண்டியன்

இயற்கையாகத் தோன்றி  வளர்ந்ததே தமிழ்.
இயற்கையில் இருந்து, இயற்கையைப் பார்த்துப்
பிறந்ததே கணிதம். இயற்கையில் எதுவும்
வட்டமாக இல்லை என்று ஒரு கற்பனை செய்வோம்.
அப்போது கணிதத்தில் வட்டத்தின் பரப்பளவுக்குரிய
சூத்திரமும் இருந்திருக்காது. நிற்க.

தமிழுக்குப் புத்திலக்கணம் சமைக்க வேண்டும்
என்று நீண்ட காலமாகக் சொல்லி வருகிறேன்.
கேட்பாரில்லை. புத்திலக்கணம் சமைக்கப்
படுமாயின் இன்று நிலவும் வேறுபாடுகள்,
முரண்பாடுகள் ஆகியன மறைந்து போகும்.

************************************************
பொருளாதார அடிப்படை இடஒதுக்கீட்டை
வரவேற்கிறார் மார்க்சிஸ்ட் பினராயி விஜயன்!
கேரளத்தில் செயல்படுத்துகிறார்!
************************************************

ஸ்டெர்லைட் ஆலை  

இன்று 08.01.2019 இரவு 7 மணி 
சத்யம் டிவியில் ஸ்டெர்லைட் ஆலை 
 தீர்ப்பு பற்றிய விவாதம்!
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு! 
ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர்  இன்றுதான் 
டிவி விவாதங்களில் பங்கு கொள்ள ஆரமித்துள்ளேன்.
அறிவியல் விஷயங்கள் குறித்த விவாதங்களில்
மட்டும் பங்கேற்க முடிவு.  எடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக