புதன், 23 ஜனவரி, 2019

பொண்டாட்டிகளை விவாகரத்து செய்ய விரும்புவோரே
EVMகளை எதிர்க்கின்றனர்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலாது!
கட்டுரைத் தொடரின் பகுதி-2.
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------    
அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலுமே
EVM முறையைக் கைவிட்டு காகித வாக்குச் சீட்டு
முறைக்கு வந்து விட்டபோது, நாம் ஏன் EVMகளைக்
கட்டிக்கொண்டு அழ வேண்டும் என்பது
EVM எதிர்ப்பாளர்களின் வாதம்.

அமெரிக்காக்காரன் எவனும் ஒரே மனைவியோடு
காலம் பூராவும் வாழ்வதில்லை. நாம் ஏன் ஒரே
பொண்டாட்டியை ஆயுள் முழுவதும் கட்டிக்கொண்டு
அழ வேண்டும்? நம் பொண்டாட்டிகளை விவாகரத்து
செய்தால் என்ன என்ற கேள்விக்கும் இதற்கும்
பெரிய வித்தியாசம் கிடையாது.

மேலும் அமெரிக்காவும் எல்லா ஐரோப்பிய நாடுகளும்
EVM முறையைக் கைவிட்டு காகித வாக்குச் சீட்டு
முறைக்கு வந்து விட்டன என்று கூறுவது உண்மையல்ல.
ஒரு சில நாடுகள் காகித வாக்குச்சீட்டு முறைக்குத்
திரும்பி இருப்பது உண்மையே. ஜெர்மனியில்
அந்நாட்டு உச்சநீதிமன்றம் (German Constitutional Court) 2009ல்
வழங்கிய தீர்ப்பின்படி, ஜெர்மனி காகித வாக்குச்சீட்டு
முறைக்குத் திரும்பி இருக்கிறது. இது போல ஒரு
சில நாடுகள், அங்குள்ள குறிப்பான சூழல்கள்
காரணமாக EVM முறையைக் கைவிட்டுள்ளன.

வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது,
கள்ள ஓட்டுப் போடுவது, மக்களில் சில பிரிவினரை
வாக்களிக்க விடாமல் தடுப்பது,
தேர்தல் அதிகாரியை மிரட்டி தேர்தல் முடிவை
மாற்றிச் சொல்லுவது ஆகிய நடைமுறைகள்
மேற்கூறிய நாடுகளில் இல்லை என்பதால்
வாக்குச்சீட்டு முறைக்கே மீண்டும் திரும்புவதால்
அங்கெல்லாம் எந்த நஷ்டமும் கிடையாது.
இந்தியாவில் அப்படி அல்ல. வாக்குச் சீட்டு
முறைக்குத் திரும்புவதானது எவ்விதத்திலும்
நிலைமையைச் சீராக்காது என்பதுடன் முன்னிலும்
மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும் என்பது
கண்கூடு.

சரி, ஜெர்மனி போன்ற நாடுகள் ஏன் EVMகளைக்
கைவிட்டன? அங்கெல்லாம் ஒட்டு மொத்த தேர்தல்
நடைமுறையுமே முழுவதுமாகக் கணினிமயம்
ஆக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவிலும் அப்படியே.
அதாவது வேட்பு மனு தாக்கல் செய்வது முதல்
வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பது
வரை அனைத்துமே கணினிமயம்.

இதன் காரணமாக அந்நாடுகளின் EVMகள் தகவல்
தொடர்பு வலைப்பின்னலுடன் இணைக்கப்
பட்டவையாக இருந்தன (connected to a communication network).
நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட EVMகளை
மிகவும் சுலபமாக ஹேக் (hack) செய்ய முடியும்.
அதாவது அத்தகைய EVMகளின் முடிவுகளை
எவர் வேண்டுமானாலும் எளிதில் திருத்த முடியும்.

நம் நாட்டின் EVMகள் அனைத்தும் எந்த
வலைப்பின்னலுடன் இணைக்கப்படாத தனித்த
கணினிகள். அதாவது நம் நாட்டு EVMகள்
stand alone வகைக் கணினிகள்.

நம் நாட்டில் ஒட்டு மொத்த தேர்தல் நடைமுறையானது
முழுவதுமாகக் கணினிமயம் ஆக்கப் படவில்லை.
வாக்குப்பதிவு மட்டுமே இங்கு கணினி மூலமாக
(அதாவது EVMகள் மூலமாக) நடைபெறுகிறது. மீதி
அனைத்தும் மனிதச் செயல்பாடுதான் (manual actions).

எனவே மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், நமது
EVMகள் அனைத்தும் stand alone தன்மையிலானவை.
அதாவது நெட்வொர்க்குடன் இணைக்கப்
படாதவை. இவற்றை ஹேக் (hack) செய்வது எளிதல்ல.

அப்படியானால், நம் நாட்டின் standalone EVMக்கும்,
பிற நாடுகளின்  நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட
EVMக்கும் பாரதூரமான வேறுபாடு உள்ளதா என்று
கேட்டால், ஆம் ஆம் என்று அடித்துக் கூறலாம்.

வீட்டில் கதவைப் பூட்டிக் கொண்டு பாதுகாப்புடன்
இருக்கும் பெண் போன்றது standalone EVM. வெளியில்
நள்ளிரவில் சாலையில் நடந்து செல்லும் பெண் 
போன்றது நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட EVM.

நம் நாட்டின் EVMகளுடன் எந்த ஒரு
"தொடர்புக்கருவி"யையும் (communication device)
பொருத்த முடியாது. ஒரு ப்ளூ டூத் (Bluetooth) கருவியையோ
அல்லது வேறு ஏதாவது வயர்லெஸ் கருவியையோ
(Wi-Fi device) நம் நாட்டு EVMகளில் பொருத்த முடியாது.
ஏதேனும் கருவியைப்  பொருத்துவதற்கான ஏற்பி
(receptor) எதுவும் நம் EVMகளில் கிடையாது.     

அப்படியானால், இந்தியாவின் standalone EVMஐ ஹேக் (hack)
செய்யவே முடியாதா? முடியும் என்றால், அதற்கான
நிகழ்தகவு (probability) என்ன என்று எவரும் கேட்கலாம்.
இதற்கு அறிவியல் கூறும்  விடை இதுதான்.
Yes, it can be hacked and there is a NON ZERO probability for hacking.

இதன் பொருள் என்ன? நம் நாட்டின் standalone EVMகளையும்
ஹேக் (hack) பண்ண முடியும். ஆனால் அதற்கு
அந்த EVMகளுடன் PHYSICAL ACCESS வேண்டும்.
அதாவது அந்த EVMகளைக் கைப்பற்றினால் மட்டுமே
அவற்றை ஹேக் பண்ண முடியும்.

பூஜ்யமற்ற நிகழ்தகவு (non zero probability) என்பது
கோட்பாட்டு ரீதியாகக் கூறப்படும் ஒன்று
(a theoretical possibility). மிக மிக அற்பமான
நிகழ்தகவையே பூஜ்யமற்ற நிகழ்தகவு
(non zero probability) என்னும் சொல் குறிப்பிடுகிறது.
Probability always lies between 0 and 1 என்ற கோட்பாட்டைக்
கணக்கில் கொண்டால், பூஜ்யமற்ற நிகழ்தகவு
என்பது 0வுக்கு மிக நெருக்கமாக இருப்பது என்ற
புரிதலுடனே இந்தப் பகுதியை வாசகர்கள் படிக்க
வேண்டும். பூஜ்யமற்ற நிகழ்தகவானது நடைமுறையில்
சாத்தியப் படுவது என்பது கணக்கற்ற
நிபந்தனைகளுக்கு உட்பட்டது; நிறைவேற்ற இயலாத
நிபந்தனைகளையும் உள்ளடக்கியது.

EVMகளைக் கைப்பற்றுவது என்பது எளிதல்ல.
எனவே நம் நாட்டு EVMகள் பாதுகாப்பானவை.
அவை வெளியில் இருந்து கொண்டு ரிமோட்
கண்ட்ரோல்  மூலம் ஹேக் பண்ண முடியாதவை.
மிக எளிமையாகவும் குறைந்த நேரத்திலும்
அவற்றை ஹேக் பண்ண இயலாது.
இதுதான் உண்மை! இது மட்டுமே உண்மை!
--------------------------------------------------------------------------------
தொடரும்
*******************************************************
 

   
         



 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக