செவ்வாய், 8 ஜனவரி, 2019

ஸ்டெர்லைட் ஆலை: மாசும் மூடலும்
திறக்கச் சொல்லும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!
-------------------------------------------------------------------------------
பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு
------------------------------------------------------------------------
தொழிற்சாலைகள்  ஏற்படுத்தும் மாசும்
ஸ்டெர்லைட் ஆலை  மூடலும்!
=================================
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------
ஒவ்வொரு தொழிலும் மாசு ஏற்படுத்துகிறது.
மாசு ஏற்படுத்தாத தொழில் என்று எதுவும்
கிடையாது. குறைவான மாசு, கூடுதலான மாசு
என்பதுதான் வேறுபாடு..

மத்திய அரசு அதிகமாக மாசு விளைவிக்கும்
17 தொழில்களை சிவப்பு நிறத் தொழில்களாக
ஏற்கனவே வகைப்படுத்தி இருந்தது. குறைவான மாசு
விளைவிக்கும் தொழில்களை ஆரஞ்சு நிறத்திலும்
மாசு விளைவிக்காத தொழில்களை பச்சை
நிறத்திலும் வகைப்படுத்தி இருந்தது.

இந்த வகைமை 2016ஆம் ஆண்டு வரை நீடித்தது.
2016 மார்ச்சில் புதிய வகைமையை (new categorization)
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவித்தது.
சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மார்ச் 5, 2016இல் இதற்கான அரசாணையைப்
பிறப்பித்தார்.

புதிய வகைமையில் சிவப்பு நிறப் பிரிவில்
60 தொழில்கள் உள்ளன. முன்பு 17 தொழில்கள்
மட்டுமே ஆபத்தானவை என்ற நிலைமை மாறி
60 தொழில்கள் ஆபத்துப் பட்டியலில் கொண்டு
வரப் பட்டுள்ளன. அணுமின்சாரம் தயாரிக்கும்
தொழில் பழைய பட்டியலில் சிவப்புப் பிரிவில்
இல்லை. தற்போது அது சிவப்புப் பட்டியலில்
உள்ள 60 தொழில்களில் ஒன்றாக உள்ளது.

தொழில்களை வகைப் படுத்துவதில் மாசுக்குறியீடு
(pollution index) முக்கிய அளவுகோலாக உள்ளது
("Re-categorization of industries based on their pollution load is a 
scientific exercise") என்கிறது சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அறிக்கை.
0 முதல் 100 வரையிலான எண்களைக் கொண்டது
இந்த மாசுக் குறியீட்டு அளவுகோல்.

புதிய வகைமையின்படி தொழில்கள் நான்கு
பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.
சிவப்பு = அதிக ஆபத்து,
மாசுக் குறியீடு (pollution index) 60ம் அதற்கு மேலும்.

ஆரஞ்சு = இரண்டாம் நிலை ஆபத்து
மாசுக்குறியீடு 41 முதல் 59 வரை.

பச்சை = மிகக் குறைந்த மாசு
மாசுக்குறியீடு 21 முதல் 40 வரை.

வெள்ளை= மிக மிகக் குறைவான மாசு.
மாசுக்குறியீடு 20 வரை (20ஐ உள்ளடக்கியது).

ஒவ்வொரு வகையிலும் எத்தனை தொழில்கள்
உள்ளன என்பதைப் பார்ப்போம்.
சிவப்பு = 60
ஆரஞ்சு = 83
பச்சை = 63
வெள்ளை = 36.

60 சிவப்புத்  தொழில்களில் சில:
1. சர்க்கரை ஆலைகள் (வரிசை எண்:12)
2. பட்டாசு ஆலைகள் (எண்: 14)
3.சிமிண்டு ஆலைகள் (எண்: 26)
4. அணு மின்சார உலைகள் (எண்: 36)
5.தோல் பதனிடும் ஆலைகள் (எண்: 44)
6.தாமிர உருக்காலை (எண்: 50)
இன்னும் பல.

தோல் பதனிடும் ஆலைகளும் தாமிர உருக்காலையும்
ஏற்கனவே 17 தொழில்களைக் கொண்ட பழைய
பட்டியலிலும் இருந்தன.

ஆரஞ்சுப் பட்டியலில் உள்ள 83 தொழில்களில் சில:
1. குறுந்தகடு, கணினி பிளாப்பி தயாரிப்பு (CD, FLOPPY)
2. ஐஸ்கிரீம் தயாரிப்பு
3. ஸ்பிரே பெயிண்டு தயாரிப்பு
4. கொசு விரட்டிச் சுருள் தயாரிப்பு
5.மென்பானங்கள் தயாரிப்பு (soft drinks)

பச்சைப் பிரிவில் வரும் தொழில்களில் சில:
1. அலுமினியப் பாத்திரம் தயாரிப்பு
2. ஆயுர்வேத மருந்து தயாரிப்பு
3. மாவு அரவை ஆலைகள் (flour mills)
4. நீற்றுச் சாம்பல் ஏற்றுமதி (Fly ash export)
5. மினரல் வாட்டர் தயாரிப்பு

வெள்ளைப் பிரிவில் வரும் தொழில்கள்:
1. நீற்றுச் செங்கல் தயாரிப்பு (Fly ash bricks/block)
2.வாசனைப் பாக்கு தயாரிப்பு
3. பவுன்டன் பேனா தயாரிப்பு
4.கைத்தறி மற்றும் ஜமுக்காளம் நெசவு
5. கயிறு தயாரித்தல் (பிளாஸ்டிக் மற்றும்  பருத்தி)

ஸ்டெர்லைட் ஆலை மூடல்!
------------------------------------------------
தூத்துக்குடியில் மீளவிட்டான் கிராமத்தில் உள்ள
ஸ்டெர்லைட் எனப்படும் தாமிர உருக்காலையை
தமிழக அரசு மூட உத்தரவிட்டு உள்ளது. அந்த
ஆலை மூடப்பட்டு விட்டது. மூலத்தாதுவில் இருந்து
தாமிரத்தைப் பிரித்தெடுக்கும் தாமிர உருக்காலைகள்
(copper smelter) சிவப்பு நிற வகைமையில் வருகின்றன.

தமிழ்நாட்டில் இனிமேல் இதுபோன்ற, சூழலை அதிகமாக
மாசு படுத்தும் சிவப்பு நிற ஆலைகளுக்கு மக்களின் ஒப்புதல்
கிடைப்பது கடினம். ஆலை தொடங்குவதாக
அறிவிப்பு வெளியிட்ட உடனேயே மக்களின்
போராட்டங்கள் வெடிக்கும். இதுதான் மக்களின்
இன்றைய மனநிலை. எனவே தமிழக அரசு ஸ்டெர்லைட்
உருக்காலையைத் தமிழகத்தில் தொடர்ந்து இயங்க
அனுமதிப்பதில்லை என்று கொள்கை முடிவு
எடுத்திருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில்
அறிவித்துள்ளது/ இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட்
ஆலை நிரந்தரமாக மூடப் படுவதாக தமிழக
அரசு அறிவித்துள்ளது.
*******************************************************
வைகுண்டராஜனின் சம்பளப் பட்டியலில்
இல்லாத ஒரே ஒரு போராளியைக் காட்ட முடியுமா?
குட்டி முதலாளித்துவமே உன் பதில் என்ன?
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி எந்த திசையில் இருக்கிறது என்று
தெரியாதவர்களும், தூத்துக்குடிக்கு ஒருமுறைகூட
போகாதவர்களும் தூத்துக்குடியின் மாசு குறித்து
தான்தோன்றித் தனமாக எதை எதையோ பேசியும்
எழுதியும் வருகிறார்கள்.

1970களில், நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு
பேருந்தில் சென்றால், வழியெல்லாம்
வெம்பரப்பாக கிடக்கும். இன்று நிலைமை
தலைகீழாக மாறி விட்டது. (வெம்பரப்பு= வெட்ட வெளி,
பொட்டல் காடு).

தூத்துக்குடி பிரிக்கப் படாமல் நெல்லை மாவட்டத்துடன்
இருந்தபோது, நெல்லையின் அவுட்டர் பகுதி போன்றுதான்
தூத்துக்குடி இருந்தது. இன்று மக்கள் நெருக்கமும்
ஏராளமான தொழிற்சாலைகளும், அவை உண்டாக்கும்
மாசும் நச்சுமாக தூத்துக்குடி வாழத் தகுதியற்ற
நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் மூடப்பட்டு விட்டது. இனி உச்சநீதிமன்றம்
திறக்கச்சொல்லி உத்தரவு இட்டாலும், தூத்துக்குடியில்
ஸ்டெர்லைட்டைத் திறக்க முடியாது. உள்ளூர்
மக்களின் தீவிரமான எதிர்ப்பையும் மீறி, கடவுளே
வந்தாலும் ஸ்டெர்லைட்டைத் திறந்து நடத்த முடியாது.
இது அனில் அகர்வாலுக்கும் தெரியும்.

2007-2008இல் தூத்துக்குடியில் டைட்டானியம் டை
ஆக்ஸைடு ஆலையை பல்லாயிரம் கோடி முதலீட்டில்
தொடங்க வந்த டாட்டாவின் கதி என்ன ஆனது?

அன்றைய முதல்வர் கலைஞரின் முழுமையான
ஆதரவு இருந்தபோதும், டாட்டாவால் ஆலையைத்
தொடங்க முடியவில்லை. ஓட ஓட விரட்டி அடிக்கப்
பட்டார் டாட்டா.

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த விவரம் தெரியுமா?
தெரியாது. தூத்துக்குடி ஊர்க்காரனைத் தவிர
வேறு யாருக்கும் தெரியாது.

டாட்டாவை விரட்டி அடித்தது யார்? மக்களா?
போராட்டமா? எதுவும் .இல்லை. ஒரே ஒரு தனி
மனிதர், சக்தி வாய்ந்த தனி மனிதர்தான் டாட்டாவை
விரட்டி அடித்தார். யார் அவர்? அவர்தான்
வைகுண்டராஜன்.

தூத்துக்குடியில் சகலமும் வைகுண்டராஜனின்
ஏகபோகம் (monopoly)தான். அவரை மீறி அங்கு ஒரு
சருகு கூட அசையாது.
  
சரி, ஆபத்தான டைட்டானியம் டை ஆக்ஸைடு
அலையை விரட்டி அடித்தாரே வைகுண்டராஜன்,
அது பாராட்டுக்கு உரியதுதானே!

டாட்டாவை விரட்டி அடித்த வைகுண்ட ராஜன்
அதே டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலையை
தானே ஆரம்பித்து விட்டார். வெற்றிகரமாக நடத்தி
சூழலை மாசு படுத்தி வருகிறார்.

ஆக, வைகுண்ட ராஜனின் கொள்கை என்ன?
1.தூத்துக்குடியில் என்னைத் தவிர யாரும்
தொழில் தொடங்கள் கூடாது.
2. என்னைத் தவிர யாரும் தூத்துக்குடியை மாசு
படுத்தக் கூடாது.
3. தூத்துக்குடியில் தொழில் தொடங்குவதும்
ஊரையே நச்சுப் படுத்துவதும் என்னுடைய
ஏகபோகம் மட்டுமே!

இவ்வளவு சக்தி வாய்ந்த வைகுண்டராஜனை யாரும்
எதிர்க்க முடியாது. திமுக, அதிமுக, மதிமுக,
கம்யூனிஸ்ட் கட்சிகள் யாரும் எதிர்க்கவில்லை.
சுற்றுச் சூழல் போராளிகளாக வேஷங்கட்டி
ஆடும் எந்த ஒரு கோமாளியும் வைகுண்டராஜனை
எதிர்க்கவில்லை. அனைவரும் வைகுண்டராஜனின்
சம்பளப் பட்டியலில் இருப்பவர்கள்.

மேலும் வைகுண்டராஜனை எதிர்ப்பதும் சுலபமல்ல.
எதிர்ப்பவனை தேரிக்காட்டில் புதைத்து விடுவார்
வைகுண்டர்.

என்றாலும், மொத்தப் பிரபஞ்சத்திலும் ஒரே ஒருவர்
வைகுண்டராஜனை எதிர்த்தார். தீவிரமாக
எதிர்த்தார், சில ஆண்டுகளுக்கு முன்பு. அவர் யார்?
அரசியல் கோமாளி என்று அறியப்படும் தேமுதிக
தலைவர் விஜயகாந்த் தான். அவர் மட்டுமே
வைகுண்டரை எதிர்த்தவர். அரசியலின் ஒரே ஆண்மகன் ஆண்மகன் விஜயகாந்தின்
காலில் விழுந்து வணங்குகிறேன்.
---------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: படத்தில் வேட்டியை மடித்துக் கொண்டு
வைகுண்டராஜன் நடந்து வருவதைக் .கவனியுங்கள்.
அவர் காலில் செருப்பு அணிந்திருக்கவில்லை
என்பதையும் கவனியுங்கள். ஆம், வைகுண்டராஜனிடம்
செருப்பு அணியும் பழக்கம் இல்லை. தேரிக்காட்டில்
சுடு மணலில், கால்கள் மணலில் புதையப்
புதைய, செருப்பு இல்லாமல், வெறுங்காலுடன்
நடப்பதே வைகுண்டரின் பழக்கம்.

Reebok shoe அணிந்து புதிய ஜனநாயகப் புரட்சி
பேசும்  முழுநேரப் புரட்சியாளர்களுக்கு
சமர்ப்பணம்!
************************************************************
தூத்துக்குடியில் புற்றுநோய்க்கு யார் காரணம்?
காப்பரா? (அல்லது) டைட்டானியமா?
வைகுண்டராஜனின் ஆலைகள் ஏற்படுத்தும்
100 சத மாசு பற்றி யாரும் மூச்சு விடாதது ஏன்?
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
காப்பர் எனப்படும் தாமிரத்தின் அணு எண் 29.
நிச்சயமாக இது ஒரு கதிரியக்கத் தனிமம் அல்ல.
(Not a radioactive element). அணு எண் 82க்கு மேல் உள்ள
தனிமங்களே, அதாவது காரியத்துக்கு (Lead)
அப்பால் உள்ளவை கதிரியக்கத் தனிமங்கள் ஆகும்.
கதிரியக்கத் தனிமங்களால் புற்றுநோய் வரக்கூடும்
என்பது சமூகத்தின் பொதுக் கருத்து.

புற்றுநோய் ஒற்றைக் காரணியால் உண்டாகி
விடுவதில்லை. புற்றுநோய் ஒருவருக்கு வருவதற்கு
நிறையக் காரணிகள் உள்ளன. புற்றுநோயை
உண்டாக்கும் பொருட்களை அறிவியல்  வகைப்படுத்தி
பட்டியல் இட்டுள்ளது. இவை carcinogens என அழைக்கப்
படுகின்றன.

ஐநா சபையின் உலக சுகாதாரக் கழகம் (WHO)
புற்றுநோய் ஆராய்ச்சிக்காக ஒரு அமைப்பை
நடத்துகிறது.இந்த அமைப்பின் பெயர் IARC ஆகும்.
(IARC = International Agency for Research on Cancer). இந்த
அமைப்பின் ஆய்வறிக்கைப்படி, ஆர்செனிக்,
பெரில்லியம், காட்மியம், நிக்கல், ரேடான்,ரேடியம்
உள்ளிட்ட சில தனிமங்கள் பொதுவான புற்று ஊக்கிகள்
(carcinogens) என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இதில் காப்பர் இல்லை என்பது கவனத்துக்கு உரியது.

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் பிரித்தெடுக்கப்
படும்போது, கந்தகம், கந்தக டை ஆக்ஸைடு, பாஸ்வரம்,
பாஸ்வர ஆக்ஸைடு ஆகியவை வெளியேறுகின்றன.
இவற்றில் எதுவும் கார்சினோஜன் (carcinogen) இல்லை.
ஆனால், கூடவே வெளியேறும் ஆர்செனிக் ஒரு
பொதுவான கார்சினோஜென் ஆகும். அதாவது
புற்று நோயை உண்டாக்கும் காரணி ஆகும்.

இந்த ஆர்செனிக்கை முறையாகக் கையாளாவிட்டால்
அது புற்று நோயை உண்டாக்கும் என்பது உறுதி.
ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்த மட்டில், இந்த
ஆர்செனிக் மட்டுமே புற்றுநோய்க் காரணி ஆகும்.

தூத்துக்குடியில், முன்பு, அதாவது 20, 30 ஆண்டுகளுக்கு
முன்பு இல்லாத புற்றுநோய் தற்போது பரவலாக
உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது  மிகுந்த
அக்கறையுடன் ஆய்வு செய்யப்பட வேண்டியது.

தூத்துக்குடியில் திரு வைகுண்டராஜன் அவர்களின்
ரசாயன ஆலை உள்ளது. முன்பு Kilburn Chemicals என்ற
பெயரில் இயங்கிய இந்த ஆலை, தற்போது,
வி வி டைட்டானிக் பிக்மென்ட்ஸ் (V V Titanic Pigments Pvt Ltd)
என்ற பெயரில் இயங்கி வருகிறது.

தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கேரளக்
கடற்கரையில் உள்ள கடல் மணலில் (sea sand)
இலுமினைட் (Ilmenite FeTiO3) எனப்படும் இரும்பு
கலந்த டைட்டானியம் ஆக்ஸைடு என்னும்
கனிமம் (mineral) பெருமளவில் கிடைக்கிறது.
டைட்டானியம் என்னும் தனிமத்தின் அணு எண் 22.
இது பளபளப்பான வெண்ணிற உலோகம்.
(less mass and more strength).

டைட்டானியம் டை ஆக்ஸைடு (TiO2) ஒரு
கார்சினோஜென் என்று ஐரோப்பிய அமைப்பான
ECHA (European Chemicals Agency) அறிவித்துள்ளது.
(TiO2 is a category-two carcinogen). ஆக, வைகுண்ட ராஜனின்
வி வி மினரல்ஸ் குழுமம் நடத்தும் டைட்டானிக்
பிக்மென்ட்ஸ் ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தியே
புற்று நோய்க்கு காரணியான டைட்டானியம்
டை ஆக்சைடுதான்.

மேலும் இக்கடற்கரை மணலில் தோரியம் என்னும்
கதிரியக்கத் தனிமமும் கிடைக்கிறது. இதன்
சிதைவின்போது ஆல்பா பீட்டா காமா கதிர்வீச்சு
நிகழும்.

ஆக, ஸ்டெர்லைட்டில் குறைந்த அளவு வெளியாகும்
ஆர்செனிக், மற்றும் விவி மினரல்சின் ஒட்டு மொத்த
உற்பத்தியான டைட்டானியம் டை  ஆக்ஸைடு ஆகிய
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அப்படி ஒப்பிடும்போது, புற்று நோயை ஏற்படுத்தும்
காரணிகளை, வாய்ப்பை மிக அதிகம் கொண்டிருப்பது
வைகுண்ட ராஜனின் டைட்டானிக் பிக்மென்ட்ஸ்
ஆலையே என்பது புலப்படுகிறது. இது இக்கட்டுரையில்
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

இருப்பினும், வைகுண்டராஜனின் ஆலைகள்
ஏற்படுத்தும் மாசு பற்றி போலி முற்போக்குகள்,
போலி இடதுசாரிகள், சுற்றுச்சூழல் போலிகள்
என்று எவருமே அம்பலப் படுத்துவதில்லை.
இதற்கு இரண்டு காரணங்கள்:
1) வைகுண்டராஜனிடம் விலை போனது
2) வைகுண்டராஜன் மீதான பயம், அச்சம்,
தொடை நடுக்கம் ஆகியவை.

ஸ்டெர்லைட்டில் தாமிர உற்பத்தியின்போது
தவிர்க்க இயலாதபடி கார்சினோஜன் உண்டாகிறது.
வி வி மினரல்சில் உற்பத்தி செய்யப்படுவதே
கார்சினோஜன்தான். இந்த வேறுபாட்டை
உணர வேண்டும்.

டைட்டானியம் டை ஆக்சைடுக்கு பரவலான
பயன்கள் உண்டு. அவற்றில் ஒன்று உணவுப்
பொருட்களுக்கு வண்ணம் சேர்ப்பது. எனினும்
இதன் விளைவுகள் குறித்து மருந்தியல் (pharmaceutical)
துறை வல்லுனர்களிடம் விசாரிக்கவும்.
*******************************************************
வைகுண்டராஜனின் கொள்கை!
--------------------------------------------------------
தூத்துக்குடியை மாசு படுத்துவது
எனக்கு மட்டுமேயான ஏகபோக உரிமை.
ஸ்டெர்லைட்டும் சேர்ந்து மாசு படுத்தினால்
நாளைக்கு எங்களால் மாசு படுத்த முடியாமல்
போய்விடும். மக்கள்  விழித்துக் கொள்வார்கள்.
இதுதான் வைகுண்டராஜனின் கொள்கை!
------------------------------------------------------------------------
வைகுண்டராஜன் = வி வி மினரல்ஸ் குழும அதிபர்.

எனவே எல்லாப் பழியையும் தூக்கி
ஸ்டெர்லைட் மீது போடுவோம்!

இதற்கு பங்குத் தந்தைகள் ஒத்துழைப்பார்கள்.
விலைபோன பாத்திமா பாபுக்கள்
ஒத்துழைப்பார்கள்.போலி முற்போக்குகளை,
போலி சுற்றுச் சூழல் கயவர்களைத் திரட்டி விடலாம்.
--------------------------------------------------------------------------
இருபெருங் கயவர்கள்!
யார் கூடுதல் கயவர்?
---------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
கயவன்-1: அனில் அகர்வால் ( ஸ்டெர்லைட் அதிபர்)
லண்டன்வாழ் இந்தியக் கயவர். குஜராத்தைச் சேர்ந்த
மார்வாடி.

கயவன்-2: வைகுண்டராஜன். பச்சைத் தமிழர்.
தென் மாவட்டங்களின் (நெல்லை குமரி தூத்துக்குடி)
முடிசூடா மன்னர். அவனன்றி ஓர் அணுவும் அசையாது
என்பது கடவுளுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ
வைகுண்டராஜனுக்குப் பொருந்தும்.

ஆள், படை, அம்பு, சேனை, அடியாட்கள், சாதி வெறிக்
கூட்டம் என்று பெரும் ரவுடி சாம்ராஜ்யம் இவருடையது.
எந்த அரசியல் கட்சியும் இவரை ..எதிர்க்காது.
இவரை எதிர்ப்பது பற்றி கனவிலும் நினைக்க
மாட்டார் வைகோ.

சகல விதமான போலி முற்போக்குகள், போலி
இடதுசாரிகள், போலி நக்சல்பாரிகள் என்று
ஒருவர் கூட இவரை எதிர்த்த வரலாறு கிடையாது.

இவரை எதிர்ப்பவனுக்கு உயிர் உத்தரவாதம்
கிடையாது.

தூத்துக்குடியின் மாசுக்கு அனில் அகர்வால் காரணமா?
வைகுண்டராஜன் காரணமா?
ஒவ்வொருவரும் எந்த அளவு காரணம்?

அனில் அகர்வால் எவ்வளவு காரணமோ அதைவிட
ஆயிரம் மடங்கு காரணம் வைகுண்டராஜன்.

அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட்டை விட,
வைகுண்டராஜனின் வி வி டைட்டானிக் பிக்மென்ட்ஸ்
நிறுவனம் தூத்துக்குடியை அதிகமாக மாசு
படுத்துகிறது.

நாங்கள் இந்த உண்மையைத் துணிந்து கூறுகிறோம்.
கோழைப்பயல்களால் இந்த உண்மையைக் கூற
முடியாது.
-------------------------------------------------------------------------------
ஸ்டெர்லைட் தெரியும். கில்பர்ன் தெரியுமா?
தெரியாது. கில்பர்ன் Kilburn Chemicals ரசாயன
ஆலைதான் தூத்துக்குடியை ஸ்டெர்லைட்டை விட
அதிகமாக மாசு படுத்துகிறது.

Kilburn Chemicals என்பது வைகுண்டராஜனின் நிறுவனம்.

ஸ்டெர்லைட் மீது உயர்நீதிமன்றத்தில்
வழக்குப் போட்டாரே வைகோ!  வைகுண்ட
ராஜனின் Kilburn Chemicals மீது ஏன்
வழக்குப்  போடவில்லை? ஒருநாளும் போடமாட்டார்!

Kilburn Chemicals மாசு படுத்துகிறது என்ற நீரி ( NEERI)
அமைப்பின் அறிக்கையை தொடர்ந்து வேறு
பெயரில் நிறுவனத்தை நடத்தினார்
வைகுண்டராஜன். இது தெரியுமா?
அந்த வேறு பெயர் என்ன என்று தெரியுமா?

வி  வி மினரல்ஸ் என்பது ஒட்டு மொத்தக்க
குழுமத்தின் பெயர். கில்பர்ன் கம்பனியை
டைட்டானிக் பிக்மென்ட்ஸ் கம்பனி என்று
பெயர் மாற்றி அதே PRODUCTஐ உற்பத்தி
செய்து ஊரையே மாசு படுத்துகிறார்.

தூத்துக்குடி மக்களுக்கு புற்றுநோய் வர
முக்கிய காரணம்
வைகுண்ட ராஜனின் டைட்டானிக் பிக்மென்ட்
கம்பனியின்  இலுமினைட் தாது processingதான்.

ஜெயாவின் கூட்டாளியும் பங்குதாரருமான
வைகுண்டராஜனை கலைஞர் முதலில்
கைது செய்து பின் மறுநாளே
பின்வாங்கினார்.வைகுண்டரின் power அப்படி!
*******************************************************
ஸ்டெர்லைட்டை விட அதிகம் மாசுபடுத்துவது
தாது மணல் அலைகளே!
---------------------------------------------------------------------------------
ஸ்டெர்லைட்டின் பாதிப்பு என்னவென்பது நேரில் கண்டதில்லை, பாதிக்கபட்டவர்களின் ஓலம் மட்டும் கேட்டது. சில நிபுணர்களின் ஆய்வுகள் ஸ்டெர்லைட் அபாயகரமானது என சொன்னபின் அது வெடித்தது
ஸ்டெர்லைட்டை விட ஆபத்தான விஷயம் தாதுமணல் தொழிற்சாலை, அதன் கழிவுகள் சூழலை மட்டுமல்ல கடலையே நாசபடுத்தியவை
அந்த வைகுண்டராஜனின் அரசாங்கள் தூத்துகுடிக்கு வடக்கே இருந்து கன்னியாகுமரி வரை ஆண்ட பொழுது கடலே சிகப்பு நிலத்தில் இருந்தது, அப்படி ஒரு கொடும் அழிவு எங்கும் சாத்தியமில்லை
மீணவர் தொழில் அழிந்தது, மீன் இனம் அழிந்தது, அவர்கள் கதறத்தான் செய்தார்கள் ஆனால் யார் காதிலும் விழவில்லை
மணலை அள்ளி கடற்கரையினை நாசபடுத்தியது, மணலை பிரிக்கின்றோம் என கடற்நீரை மாசுபடுத்தியது இதில் ஏகபட்ட ரசாயாணம் கலந்து மீன்பாடு, மீணவர் நலம் கெட்டது என ஏராளம்
குமரியும் நெல்லை கடற்கரையும் புற்றுநோயில் அகப்பட்டதற்கு இவை முதற்காரணம், இந்த மாசடைந்த கடல் மீன்களை உண்டவர் நிலை இன்னும் மோசம்
நிச்சயமாக சொல்லலாம் ஸ்டெர்லைட் குறிப்பிட்ட இடத்தை நாசபடுத்தியது, ஆனால் வைகுண்டராஜனின் ஆலைகளும், தயா தேவதாஸ் ஆலைகளும் அழித்த அழிவு கொஞ்சமல்ல‌.
********************************************************************
தூத்துக்குடி மாசு! உண்மையான காரணம்!
உண்மையான குற்றவாளி யார்?
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
தூத்துக்குடி நகரும் அதைச் சுற்றியுள்ள பல
கிராமங்களும் மாசடைந்து விட்டன. மண், நீர்,
காற்று ஆகியவை மாசு பட்டுக் கிடக்கின்றன.
இதற்குக் காரணமான ஆலைகள்:
------------------------------------------------------------
1. வி வி மினரல்ஸ் குழுமத்தின் ஆலையான
  வி.வி டைட்டானியம் பிக்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
ஏற்படுத்தும் மாசு = 50 சதம்.
2. ஸ்பிக்  (SPIC) = 30 சதம்.
3. அனல் மின் நிலையம் =10 சதம்.
4. பிற = 10 சதம்.
(ஸ்டெர்லைட் மூடிக்கிடக்கிற நிலையில் எடுக்கப்பட்ட
ஆய்வு முடிவு இது)

தூத்துக்குடியில் மீள விட்டான் கிராமத்திலும்
சுற்றுப்புற கிராமங்களிலும் மண், நீர், காற்று
ஆகியவற்றைச் சேகரித்து ஆய்வுகள்
பரிசோதனைகள் நடத்தி, அவற்றில் கிடைத்த
முடிவுகளின் (RESULTS) அடைப்படையில்
வைகுண்டராஜன் அவர்களின் ஆலையான
வி வி மினரல்ஸ் ஆளையும் ஸ்பிக்குமே
தூத்துக்குடி மாசுக்குக் காரணம் என்று
உறுதிபடக் கூறுகிறோம்.

எனவே ஸ்டெர்லைட்டை மூடினாலும் மக்களுக்கு
எப்பயனும் விளையாது என்ற நிலையே நீடிக்கிறது.
விவி மினரல்ஸ் நிறுவனத்தின் ஆலையை மூடாமல்
தூத்துக்குடிக்கு விடிவே கிடையாது/

வி வி மினரல்சுக்கு எதிராகவும் வைகுண்டராஜனுக்கு
எதிராகவும் குரல் கொடுக்காத எவனும்
வைகுண்டராஜனின் கைக்கூலியே.

இதை நாம் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.
எவர் காதிலும் ஏறவில்லை. எனவே மீண்டும்
கூறுகிறோம்.

வைகுண்டராஜனை எதிர்க்க ஒரு பயலுக்கும்
ஒரு அமைப்புக்கும் துணிவோ தைரியமா கிடையாது
என்று அடித்துக் கூறுகிறோம்.
***********************************************************
ஸ்டெர்லைட்:
--------------------
இந்தியாவில் காப்பர் (தாமிரம்) உற்பத்தியில் நான்கு நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
1. ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்.
2. ஹிண்டால்கோ காப்பர் லிமிடெட்
3. ஸ்டெர்லைட் லிமிடெட்
4. ஜகாதியா காப்பர் லிமிடெட்
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்:
----------------------------------------------------
இது ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். ஹிந்துஸ்தான் காப்பர் உற்பத்தி ராஜஸ்தான், ஜார்க்கன்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் தாமிர உற்பத்தி செய்து வருகிறது.
ஹிண்டால்கோ காப்பர் லிமிடெட்:
------------------------------------------------------
பிர்லா நிறுவனத்தின் ஒரு அங்கமே ஹிண்டால்கோ. இது ஒரு தனியார் காப்பர், அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனம். இதன் காப்பர் உற்பத்தி குஜராத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய காப்பர் உருக்கும் ஆலைகளில் ஒரே இடத்தில் அதிக அளவிற்கு Copper smelter செய்யும் மிகப்பெரிய ஆலை இது.
ஸ்டெர்லைட் காப்பர் லிமிடெட்:
------------------------------------------------
வேதாந்தா குரூப் நடத்தும் தனியார் தொழிற்சாலை தான் ஸ்டெர்லைட். ஸ்டெர்லைட் தமிழ் நாட்டின் தென்கோடியான தூத்துக்குடியில் இயங்கி வருகிறது.
மகாராஷ்டிராவில் ஸ்டெர்லைட் நிறுவனம் நிறுவ 500 ஏக்கர் நிலங்கள் MIDC யால் ஒதுக்கப்பட்டு அனைத்து அனுமதியையும் பெற்று கட்டுமானப்பணிகள் 1992 ல் தொடங்கி இருந்தது. 1993, ஜூலையில் மாவட்ட கலெக்டர் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழிற்சாலை என்பதால் மேற்கொண்டு பணிகளைத் தொடரக் கூடாது என்று கடிதம் அனுப்பினார். கூடுதலாக ரத்தினகிரி கிராம கமிட்டியும் இங்கு ஆலை அமைக்கும் பணியை மேற்கொண்டு தொடரக்கூடாது என்று போராட்டங்களைச் செய்ய அங்கு தொழிற்சாலை அமைக்க இயலாமல் போன நேரத்தில் தமிழ்நாடு வரவேற்றுதான் ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் அமைக்கப்பெற்றுள்ளது.
01-08-1994 – TNPCB ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அமைக்க NOC வழங்கிய நாள்.
16-01-1995 – MOE & F, India அனுமதியை வழங்கியது.
17-05-1995 - தமிழக அரசு அனுமதி வழங்கிய நாள்.
22-05-1995 – TNPCB ஆலை அமைக்க அனுமதியை வழங்கியது.
01-01-1997 – ஸ்டெர்லைட் உற்பத்தியைத் தொடங்கிய நாள்.
தமிழ் நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதின் பின்னணியில் பெரிய சதிவலை சூழப்பட்டுள்ளது. எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் போகிற போக்கில் சுற்றுச் சூழல், வேளாண்மை இரண்டையும் காரணம் காட்டி அனைத்து திட்டங்களையும் முடக்கும் போக்கும் வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கும் போராட்டங்களும் பிரிவினைவாதிகளாலும் அந்நியக் கைக்கூலிகளாலும் மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு பெண் #BANSTERLITE என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்டெர்லைட் நிறுவனம் மகாராஷ்டிராவில் இயங்கிய போது அங்குள்ள மாம்பழங்கள் கருகின. அதை ஏற்றுமதி செய்ய இயலாத அளவிற்கு ஆனவுடன் ரத்தினகிரியில் போராட்டம் நடந்ததாக பேசுகிறார். மேலும் அங்கிருந்து குஜராத் , கோவா போனார்கள். அங்கும் விரட்டி விட்டதால் தமிழகம் வந்தது என்று பேசினார். அந்த ஒரு நிமிடத்திலேயே வீடியோவை நிறுத்தி விட்டேன். அத்தனையும் புளுகு.
மகாராஷ்டிராவில் கட்டுமானப் பணிகளே முடிவடையவில்லை. கலெக்டர் அதற்கு முன்பாக stay order கொடுத்ததையடுத்து அங்கு மேற்கொண்டு பணிகள் ஏதும் நடக்கவில்லை. இதில் உண்மை என்னவென்றால் ஒதுக்கப்பட்ட 500 ஏக்கர் நிலத்தை இன்னும் ஸ்டெர்லைட் காலி செய்யவில்லை. அதற்கான கேஸ் இப்போதும் மும்பை உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. காப்பர் ஆலையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றவில்லை, எனவே காலி செய்ய வேண்டும் என்று MIDC அனுப்பிய கடிதத்திற்கு காலி செய்ய இயலாது என்றும் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது சார்பில் தாங்கள் 80 கோடி கட்டுமானப்பணிகளுக்கு செலவழித்து விட்ட பிறகு கலெக்டர் நிறுத்தச் சொன்னதால் தான் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 22 ஆண்டுகளாக நீர் மற்றும் மின்சார வரி கட்டி வருவதாகவும் நீதி மன்றத்தில் சொல்லியுள்ளது. ஒரு ஆலை தனது இயக்கத்தை தொடங்கும் முன்பு வந்த பிரச்சினைக்கே இன்னும் தீர்வு காணப்படவில்லை. நிலம் இப்போதும் ஸ்டெர்லைட் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்து 22 வருடமாகப் போகிறது. இதை மூடச் சொல்லி உச்சநீதி மன்றத்தை அணுகி மாநில அரசால் வெற்றி பெற இயலாது என்பதே யதார்த்தம். உச்ச நீதி மன்றமும் ஆலையை அவ்வளவு சீக்கிரம் மூடுங்கள் என்று சொல்லாது.
எதுவுமே தெரியாமல் மாம்பழம் அழுகியது என்று ஒரு புளுகுச் செய்தி. அடுத்து குஜராத் வேண்டாமென்றதாம். இதை ஏன் சொல்கிறார் என்றால் மோடியின் மாநிலம் விரட்டியடிக்கப்பட்ட ஒரு ப்ரொஜெக்ட் தமிழர்களின் தலையில் கட்டப்பட்டது என்ற எண்ணம் வர வேண்டுமாம், பாவம் Dahej குஜராத்தின் கடற்கரை மாவட்டமொன்றில் இந்தியாவின் ஒரே இடத்தில் அதிக அளவில் Copper smelter நடக்கிறது. பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் இன்றும் இயங்கி வருகிறது. குஜராத்தில் காப்பர் ஆலை இல்லையென்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அடித்து விடுகிறார் அந்தப் பெண்.
ஸ்டெர்லைட் பற்றி பேசும் போது மகாராஷ்டிரா ஏன் வேண்டாமென்றது... அவர்கள் அம்மாநில மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அவர்களுக்கு Taloja Copper Project மும்பையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் 60,000 MTA காப்பர் ராடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹிந்துஸ்தானின் காப்பர் நிறுவனம் அங்குள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை வேண்டாமென்ற மகாராஷ்டிரா எப்படி TCP க்கு ஒத்துக்கொண்டது என்று கேட்டால் இங்கு பதில் வராது.
அடுத்ததாக ஏதோ மத்திய அரசு திட்டமிட்டே தமிழ்நாட்டில் நாசகார வேலைகளை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கொண்டு வந்தது போலவும், வருவது போலவும் பொய்ப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, சுற்றுச் சூழல் அமைப்பு அனுமதி, இடங்களைக் கையகப்படுத்துதல் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஸ்டெர்லைட் அல்ல ஒரு சிறு தொழிற்சாலையைக் கூட இங்கு திறக்க இயலாது. மத்திய அரசால் கூட !!!! திமுகவும், அதிமுகவும் அத்தனை தொழிற்சாலைகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் மாநில நலனைக் கருத்திற் கொண்டு அனுமதித்து விட்டு எதிர்க்கட்சி ஆனவுடன் போலியாக நாடகமாடுகின்றன என்பதே உண்மை.
திமுகவும், அதிமுகவும் அனுமதித்து தொடங்கப்பட்ட ஆலைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அரசியல் திராணியுடன், நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு ஓட்டுக்காக அல்லாமல் ஏன் இந்தத் தொழிற்சாலையோ அல்லது வளர்ச்சித் திட்டமோ தங்களால் கையொப்பமிடப்பட்டது, அதனால் என்ன லாபம் என்று மக்களிடம் விளக்கும் பொறுப்பு உள்ளவை இக்கட்சிகள். ஆனால் கூட்டத்தோடு கோயிந்தா போட்டு நாங்களும் திட்டத்தை எதிர்க்கிறோம் என்று சொல்வது அரசியல் ஆண்மையற்ற செயல். இதை பாஜக, காங்கிரஸ் செய்தாலும் அப்படியே தான் நாம் சொல்ல வேண்டும்.
மீடியாக்களால், உள்ளூர் மக்களின் போராட்டங்கள் பெரிய அளவில் காட்டப்பட உடனடியாக அனைத்துக் கட்சிகளும் ஓட்டுக்காக ஒப்பாரி வைக்கின்றன. நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பால் ஏற்படப் போகும் இழப்பு, மாநில அரசிற்கான வருவாய், தேச நலன் பற்றி பேசாமல் பூசி மெழுகிப் பேசுவது தான் ஒரு சமுதாயத்திற்கு ஆகப்பெரிய கேட்டைத் தரும். நியூட்ரினோ திட்டம் பற்றி தமிழகத்தில் ஆதரித்துப் பேசிய ஒரு மாநில கட்சியாவது உண்டா? சில வளர்ச்சித் திட்டங்களால் சிலருக்கு இழப்பு என்றாலும் அத்திட்டம் வந்தால் மாநிலத்திற்கு எத்தகைய நலன் என்று பேசும் அரசியல் திராணி இன்று ஒரு அரசியல் கட்சியிடமும் இல்லை. குறைந்த பட்சம் சாதக பாதகங்களைச் சொல்லி தமது தரப்பை முன்வைக்கும் நேர்மைகூட ஒரு கட்சிக்கும் கிடையாது. ஊடகங்கள் மக்களுக்கு மிகப்பெரிய தீங்கை ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் என்று ஓலமிடுவதை அரசும் மௌனியாகப் பார்ப்பதே ஆகப்பெரிய கொடுமை.
ஸ்டெர்லைட் புனிதமான ஆலை. அதிலிருந்து கழிவுகளோ, சுற்றுப்புறச் சூழலையோ பாதிக்காது என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவை முறையாக கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்பதை கண்காணிக்கவே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. ஒவ்வொரு முறையும் ஸ்டெர்லைட் நிறுவனம் கட்டுப்பாட்டை மீறினால் கூட அனுமதித்து விடுவது அல்லது தேவையில்லாமால் வீண் பழியைப் போட்டு பின்னர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடமும், உச்ச நீதி மன்றத்திடமும் நிருபிக்க இயலாமல் பின் வாங்குவது மட்டுமே நடந்துள்ளது.
கோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலையால் நோய்வாய்ப்பட்டவர்கள் இத்தனை பேர் என்று எந்த ஆதாரமும் உறுதியாக நிருபிக்கப்பட இயலவில்லை. இவர்கள் முன்வைக்கும் நோய்களால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற நகரங்கள் என்று எளிதாக அடையாளம் காண இயலும்.
ஸ்டெர்லைட் ஆலையில் 12 Million Tonne சல்புரிக் ஆசிட் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் நூற்றுக்கும் அதிகமான சல்புரிக் ஆசிட் தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஸ்டெர்லைட்டில் எந்த முறையில் தயாரிக்கப்படுகிறதோ, அதே முறையில் தான் மற்ற இடங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
சல்புரிக் ஆசிட் தொழிற்சாலைகள் கோரமண்டல் இண்டர்நேசனல், எண்ணூரிலும், கிரீன் பெர்டிலைசர்ஸ் துத்துக்குடியிலும், தனாபாக் கடலூரிலும் உள்ளன. இங்கு எங்கும் இதுவரையிலும் கழிவுகள் வரவில்லையா? அல்லது அந்தளவுக்கு தூய்மையாகக் கையாளப்படுகின்றனவா? அங்கெல்லாம் இன்னமும் போராட்டங்கள் வரவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
2009 லும் போராட்டங்கள் நடைபெற்றதையொட்டி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்கிறது. சுப்ரீம் கோர்ட் தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதிக்கிறது. மேலும் ஆலையை இயக்க எந்தத்தடையுமில்லை என்றது. காரணம், TNPCB, MOE&F India, அனுமதியுடனே ஸ்டெர்லைட் ஆலை குறிப்பிட்ட கிலோமீட்டர் எல்லைக்குள் அமைக்கப்பெற்றுள்ளது. 250ீ மீட்டருக்கு பசுமை பேண வேண்டும் என்று சொல்லிய கட்டுப்பாட்டு வாரியமே இடப்பற்றாக்குறையால் 25 மீட்டரில் பேணினால் போதுமென அனுமதி அளித்து விட்டு குற்றச்சாட்டுகள் வைப்பதை ஏற்க இயலாது என்றும் ஆலையை மூடுவதால் பொது நலன் பாதிக்கப்படும் என்றுதான் உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
TNPCB & CPCBகொடுத்த 30 கட்டுப்பாடுகளில் 29 ஐ நிறைவேற்றி இருந்தாலும் காற்று சம்பந்தமான ஒரு கட்டுப்பாட்டை நிறைவேற்றாததாலும் அரசிடம் ஆலையை இயக்க நீண்ட காலத்திற்கு லைசென்ஸ் புதுப்பிக்காததாலும் 100 கோடி அபராதம் விதித்தது. மேலும் இந்த அபராதம் இந்த நிறுவனத்தின் தன்மையைப் பொறுத்தும், 1997-2012 வரை காலக்கட்டத்திற்கான அபராதம் என்ற காரணம் சொல்லி 100 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. ஐந்து தவணையாக தமிழக அரசிற்கு செலுத்த வேண்டுமென்றும், ஆனால் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என்றும் தீர்ப்பளித்தது. மேலும் இனிமேல் இதைக் காரணம் காட்டி எந்த வழக்கும் கடந்த காலத்தில் நடந்தது எனச் சொல்லி சிவில் வழக்குகள் போட இயலாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
அதே ஆண்டு மீண்டும் தமிழக அரசு ஆலையை மூடச் சொல்கிறது. ஸ்டெர்லைட்டால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு என்ற தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த புகாரை ஸ்டெர்லைட் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் கையில் எடுத்துச் செல்கிறது. அவர்கள் முற்றிலுமாக ஆராய்ந்து ஸ்டெர்லைட் ஆப்பரேசன் மூலமாக கழிவுகள் என்பது தவறு , அது அர்த்தமற்ற குற்றச்சாட்டு என்று தனது ஆய்வில் தெரிவிக்கிறது.
ஸ்டெர்லைட் தனது ஆலையை விரிவுப்படுத்த அத்தனை அனுமதியையும் வாங்கியுள்ளது என்று தெரிவிக்கிறது. அப்படி வாங்கி இருந்தால் யார் மீது பழியைப் போடுவது? ஏனெனில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமோ, சுற்றுச்சூழல் வாரியமோ, அரசோ அனுமதிக்காமல் எப்படி ஆலையை விரிவுப்படுத்த இயலும் என்பதே கேள்வி.
அடிப்படையில் இதுவே நாம் கேட்க வேண்டியது.
“உண்மையில் சுற்றுச் சூழலில் அக்கறை இருந்தால் ஏன் தமிழக அரசு அனுமதித்தது? மக்கள் நலனில் அக்கறையில்லாமல் போலியாக நடிப்பது ஏன்? ஒருவேளை ஸ்டெர்லைட் மூடப்பட்டால் அங்குள்ள பணியாளர்களுக்கு அரசுப் பணி கிடைக்கும் என்ற உத்தரவாதம் உண்டா? ஆலை மூடப்பட்டால் நிறுவனத்திற்கு என்ன இழப்பீடு வழங்கப்படும் ? மற்ற சாயப்பட்டறைகள், சிமெண்ட் ஆலைகள், சல்புரிக் ஆலைகள், பழுப்பு நிலக்கரி உற்பத்தி நிலையங்கள், கெமிக்கல் ஆலைகள் இவையெல்லாம் உண்மையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த கட்டுப்பாட்டுக்குள் இயங்குகின்றனவா என்ற கேள்வியை நம் மனச்சாட்சி படி கேட்டு விட்டு ஸ்டெர்லைட் மூடப்படுவது சரியென்ற முடிவுக்கு வாருங்கள். அப்படியான ஆலைகளை எதிர்த்து எந்த அரசியல்கட்சியும் தானாக போராட்டங்களை ஏன் முன்னெடுப்பதில்லை என்றும் சிந்தியுங்கள். இல்லையேல் மீண்டும் இது ஒரு தூண்டப்பட்ட போராட்டமாகவே முடியும். ஆலை நிரந்தரமாக மூடப்படாது என்பதே யதார்த்தம்! சில கட்டுப்பாடுகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் முடிக்க வேண்டும் என்ற உத்தரவுகள் வருமே ஒழிய ஆலை நிரந்தரமாக மூடப்படாது என்பதே யதார்த்தம்.
*****************************************************************************

ஸ்டெர்லைட் ஆலையை அவ்வளவு சுலபமாக
மூடி விட முடியாது! மூட மூடத் திறக்கும்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
1) இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் பெரும்
கார்ப்பொரேட் நிறுவனம் வேதாந்தா குழுமம். அதன்
ஒரு அலகுதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட்.

2) ஸ்டெர்லைட்டை மூடினால், அது சர்வதேச அளவில்
வேதாந்தா குழுமத்தைப் பாதிக்கும்.அது உலக
அளவில் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார
ஆதிக்கத்துக்கு விழும் அடியாகும். இதை உலக
ஏகாதிபத்தியம் சும்மா விடாது.

3) காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக ஆகிய எல்லாக்
கட்சிகளும் ஸ்டெர்லைட்டை ஆதரிக்கும் கட்சிகளே.
அவை அனைத்தும் ஆளும் வர்க்கக் கட்சிகளே.
ஸ்டெர்லைட்டைப் பாதுகாப்பதே இக்கட்சிகளின்
கடமை.

4) எனவே காங், பாஜக, திமுக, அதிமுக கட்சிகளோ
அல்லது வேறு எந்த ஒரு கட்சியோ  ஸ்டெர்லைட்டை
எதிர்க்கும் என்று யாராவது நம்பினால், அவன்தான்
உலகிலேயே முழு முட்டாள்.

5) ஸ்டெர்லைட் ஆலை உள்ள இடமான தூத்துக்குடியில்
உள்ள எல்லா அரசியல் கட்சிப் பிரமுகர்களும்,
லெட்டர் பேட் கட்சிகள் உட்பட, ஸ்டெர்லைட் ஆலையின் வேலைகளை கான்டராக்ட்  எடுத்துச் செய்து
லட்சக் கணக்கிலும் கோடிக் கணக்கிலும்
சம்பாதிப்பவர்கள்தான்.

6) எல்லோரும் ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகளே என்ற
இந்த உண்மை அங்குள்ள எல்லா மக்களுக்கும்
நன்கு  தெரியும். எனவேதான் எந்த அரசியல்
கட்சிக்கும் இங்கு இடமில்லை என்று மக்கள்
எல்லா அரசியல் கட்சிகளையும் விரட்டி அடித்தார்கள்.

7) தமிழ்நாட்டில் வந்து தொழில் தொடங்குங்கள்
என்று ஸ்டெர்லைட்டை இருகரம் கூப்பி வரவேற்றார்
ஜெயலலிதா. 1994இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு
அடிக்கல் நாட்டியவர் ஜெயலலிதா.

8) அடுத்து வந்த  கலைஞர் ஆட்சியில், 1997இல்
ஸ்டெர்லைட் நிறுவனம் உற்பத்தியைத்
தொடங்கியது. தொடர்ந்து உற்பத்தியை
அதிகரித்துக் கொண்டே வந்தது. நாள் ஒன்றுக்கு
350 டன் என்று உற்பத்தி நடந்தது.

9) 2005 ஸ்டெர்லைட்டின் வரலாற்றில் ஒரு திருப்பு முனை.
உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க
ஸ்டெர்லைட் விரும்பியது. நாள் ஒன்றுக்கு 350 டன்னில்
இருந்து 1000 டன்னாக உயர்த்துவதே ஸ்டெர்லைட்டின்
முடிவு.

10) ஆனால் அன்றைய தமிழக முதல்வராக இருந்த
ஜெயலலிதா (2004-2006) இந்த 1000 டன்னுக்கு
அனுமதி வழங்கத் தயங்கினார்.காரணம்
ஸ்டெர்லைட்டில் நிகழ்ந்த நிறைய விபத்துகளும்,
சூழலை மாசு படுத்தியது பற்றிய மக்களின்
புகார்களுமே. இதை அனுமதித்தால் தேர்தலில்
தனது வெற்றி பாதிக்கப் படலாம் என்று
கருதினார் ஜெயலலிதா.

11) அப்போது மத்திய மன்மோகன்சிங் அரசில்
சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தார் ஆ ராசா.
அவர் ஸ்டெர்லைட்டின் உற்பத்தி அதிகரிப்புக்கு
(391 டன்னில் இருந்து 900 டன்னாக உயர்த்துவதற்கு)
தயக்கமின்றி அனுமதி அளித்தார்.

12) ஆ ராசாவே அனுமதி வழங்கிய பின்,
ஜெயலலிதாவுக்கு இருந்த தயக்கம் நீங்கியது.
இதன் மூலம் ஸ்டெர்லைட்டுக்கு தான் அனுமதி
வழங்கினால், திமுக எதிர்த்துப் பிரச்சாரம் செய்யாது
என்ற நிலை உருவானதை உணர்ந்த ஜெயலலிதா
900 டன் என்னும் அதிகரித்த உற்பத்திக்கு அனுமதி
தந்தார்.

13) தூத்துக்குடி மக்களுக்கு பெரும் பாதிப்புகளை
ஏற்படுத்தும் இந்த மோசமான முடிவை  ஜெயாவும்
ஆ ராசாவும் சேர்ந்தே எடுத்தனர். இன்று ஏற்பட்டுள்ள
சூழல் மாசுக்கும் நோய்களுக்கும் இந்த முடிவே
காரணம்.

14) இந்த வரலாறு போராடும் தூத்துக்குடி மக்களுக்கும்
 போராட்டக் கமிட்டிக்கும் தெரியும். பிறபகுதி
மக்களுக்குத் தெரியாது. எனவேதான் எந்த ஒரு
அரசியல் கட்சியையும் நம்பி மக்கள் போராடவில்லை.
எல்லோருமே ஸ்டெர்லைட்டுக்கு போராளிகளைக்
காட்டிக் கொடுக்கும் கயவர்கள் என்று மக்கள்
தெளிவாக இருந்தனர்.

15) துப்பாக்கியால் சுடுவதற்கும் கைது செய்வதற்கும்
ஒரு பட்டியல் போலீசிடம் உள்ளது. இது உளவுத்துறை
தயாரித்த பட்டியல் அல்ல. ஸ்டெர்லைட் நிர்வாகம்
போலீசுக்கு வழங்கிய பட்டியல்.

16) ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு இந்தப் பட்டியலைத்
தயாரித்துக் கொடுத்தவர்கள் யார் தெரியுமா?
வேறு யார்?  ஸ்டெர்லைட்டிடம் காசு வாங்கிய உள்ளூர்
அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்தான்.
*******************************************************************
ஆலைகளை நிறுவுமுன் என்ன செய்ய வேண்டும்?
---------------------------------------------------------------------------------------
இனிமேல், மக்கள்-நிபுணர்கள் ஒன்றிணைந்த
கமிட்டி அமைக்காமல் எந்த ஒரு தொழிற்சாலையும்
நிறுவக்  கூடாது. இதற்கு தற்போது சட்டம் இல்லை.
மத்திய அரசு இதற்காக ஒரு சட்டத்தை இயற்ற
வேண்டும். இது சாத்தியமான விஷயமே. இதைச்
செய்யத் தவறினால், இந்தியாவில் இனிமேல்
எங்குமே யாருமே எந்த ஒரு ஆலையையும்
நிறுவ முடியாது. இதை அரசும் உணர்ந்து வருகிறது.
தேவை அரசை நிர்ப்பந்திக்கும் மக்களின்
போராட்டமே.

நலிவுற்றால் மட்டுமே அரசு ஏற்று நடத்த இயலும்.
உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஸ்டெர்லைட்.
அதன் மாசுகளை அரசு கட்டுப் படுத்தினால்
போதும்.

ஸ்டெர்லைட் ஆலையை 1997இல் கலைஞர் தொடக்கி
வைத்தபோது, அதன் தொடக்க உற்பத்தித்திறன்
(initial capacity) ஆண்டொன்றுக்கு 60,000 டன் காப்பர்.
அதே நேரத்தில் குஜராத்தில் உள்ள, ஆதித்திய
பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்தின்
தாமிர உற்பத்தித் திறன் (initial capacity) ஒரு லட்சம் டன்.
ஸ்டெர்லைட்டை விட உற்பத்தி அதிகமுள்ள
குஜராத்தில் சூழல் மாசு படவில்லை. மக்களின்
போராட்டம் இல்லை. ஏன்? காரணம், பிர்லாவின்
நிறுவனம் சூழல் விதிகளை மதிக்கிறது.
**
ஆனால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம்
திமுக அதிமுக கயவர்களுக்கு லஞ்சம் கொடுத்து
விட்டு, கந்தக டை ஆக்ஸைடை (SO2) வளி மண்டலத்தில்
கலந்து விடுகிறது. இதைத் தட்டிக் கேட்டால்
பெரியசாமியின் அடியாட்களும் சசிகலா புஷ்பாவின்
அடியாட்களும் வீட்டுக்கு ஆட்டோவில் ரவுடிகளை
அனுப்புவார்கள்.
*****************************************************
STERLITE MISCELLANEOUS FACTS
------------------------------------------------------
ஸ்டெர்லைட் 
சீனா -- 32 லட்சம் டன்
சிலி -- 13.4 லட்சம் டன்
ஜப்பான் -- 13 லட்சம் டன்
இந்தியா -- 6.8 லட்சம் டன்
அமேரிக்கா -- 4.8 லட்சம் டன்
ரஷ்யா -- 6 லட்சம் டன்
ஸாம்பியா -- 5.5 லட்சம் டன்
தென் கொரியா -- 4.7 லட்சம் டன்
போலந்து -- 4.5 லட்சம் டன்
ஆஸ்திரேலியா -- 4.2 லட்சம் டன்
ஜெர்மனி -- 3.4 லட்சம் டன்
இது உலக நாடுகளில் தாமிர உற்பத்தி அளவு வரிசையில் முதலாவதாக உள்ள நாடுகள் பட்டியல் - 2012 புள்ளி விவரப்படி!
----------------------------------
ஒரு வீடியோ பார்த்தேன், துக்ளக் இதயா பேசியதாக! அதில் அவர், காப்பர் கனிமம் வெட்டியெடுப்பது ஆஸ்திரேலியாவில் என்றும், ஆனால், அவர்கள் நாட்டில், அதிலிருந்து தாமிர உற்பத்தி செய்யாமல், இந்தியா போன்ற நாடுகளுக்கு கனிமத்தை அனுப்பி, தாமிரம் உருவாக்கி, பின் இறக்குமதி செய்து கொள்கிறார்கள் - அதாவது, அந்த ஆலையால் உண்டாகும் மாசு, தங்கள் மக்களை பாதிக்காமல் காப்பாற்றவே, இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி, ஸ்டெர்லைட் போன்ற நச்சு உருவாக்கும் ஆலைகளை நிறுவ வழி செய்கிறார்கள்! எனும் அர்த்தம் வரும் வகையில்!
அதாவது, நம் மக்களை பலிகடா ஆக்குமளவுக்கு, அந்த தொழிற்சாலைகள் நச்சு உருவாக்கும் ஒன்று, எனும் மறை பொருள் பட பேசியுள்ளார் !
----------------------------------------
நான் மேலே கொடுத்துள்ள பட்டியல், பொதுவெளியில் உள்ளதுதான்! யார் வேண்டுமானாலும் List of countries by copper smelter production என்று கூகிளில் தேடி, தெளியலாம்!
----------------------------------------
இதில் முக்கியமாக, கவனித்தால்,... பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில் பெரும்பாலானவையும், தங்கள் நாட்டிலேயே காப்பர் தயாரிப்பை, வைத்துக்கொண்டிருப்பது தான்! அளவு மட்டுமே வித்தியாசம்.!!!
காரணம், தாமிரம் இல்லாமல், அணுவும் அசையாது, இன்றைய நிலையில்! இது மிகைப்படுத்தல் அல்ல! விவரமானவர்களிடம் இது பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.! இந்த உலோகத்துக்கு வெளி நாடுகளை மட்டுமே நம்பினால், பொருளாதாரத்தை சுலபமாக திட்டமிட முடியாது! அந்த அளவுக்கு மிக முக்கியமான உலோகம் இது! மின்னணு உபகரணங்களில், வாகனங்களில், பாட்டரிகளில், மின்கடத்தி வயர்களில், செல் போன் களில், ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ், டீவீ, என, தாமிர உபயோகம் இல்லாத தொழில்நுட்ப இடமே இல்லை, என்று சொல்லலாம்!


மேற்கண்ட நாடுகளில், மிகவும் வளர்ந்த நாடுகளில், தனி மனித உயிருக்கு மிகுந்த, மிகுந்த, முக்கியத்துவம் தரும் சமூகம் அவர்களது! ஓரிரு மரணங்களே, நாட்டை ஸ்தம்பிக்க வைத்து விடும்!
அப்படிப்பட்ட நாடுகளில், இம்மாதிரி தாமிர ஆலைகளை, சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், துளிக்கூட பாதிப்பு ஏற்படா வண்ணம் இயக்குவது எப்படி, என்று தெளிவான தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது!
அதனால், முதலில், ஸ்டெர்லைட் தாமிர ஆலை என்றாலே, என்னவோ உயிர்க்கொல்லி என்பது போன்ற, விஷம பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது, என்று சாமானியன் உணர வேண்டும்.
****************************************************************************************
ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆலைகள்
-----------------------------------------------------------------------
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் ஒரு காப்பர் ஸ்மெல்ட்டர், ஒரு ரிஃபைனரி, ஒரு ஸல்ஃபியூரிக் ஆசிட் பிளான்ட், ஒரு ஃபாஸ்ஃபோரிக் ஆசிட் பிளான்ட், மற்றும் ஒரு காப்பர் ராடு பிளான்ட் ஆகியவை உள்ளன.
காப்பர் ராடு உற்பத்தி செய்ய காப்பர் கேத்தோடு தான் மூலப்பொருள். பித்தளை, வெண்கலம் மற்றும் அலாய் ஸ்டீல் செய்யவும் காப்பர் கேத்தோடு உபயோகப்படுகிறது. இவை பெரும்பாலும் கட்டுமானப் பொருட்களுக்கும், நாட்டின் இராணுவத் தளவாடங்களுக்கும் உபயோகிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப் பயன்படுத்துவது உலகத்தரம் வாய்ந்த “A” கிரேடு கேத்தோடு ஆகும்.
காப்பர் தயாரிப்பின் உப பொருட்களாக
1) ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்,
2) சல்ஃப்யூரிக் ஆசிட்,
3) ஹைட்ரோ-ஃப்ளூரோ-சிலிசிக் ஆசிட்,
4) ஃபெர்ரோ சாண்ட் மற்றும்
5) ஃபாஸ்போ-ஜிப்பசம்,
இவை அனைத்தும் உற்பத்தி செய்யப் படுகின்றன.
இவற்றில் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
1) ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்.
இதில் ஃபாஸ்ஃபோரிக் ஆசிட், உரங்கள் தயாரிக்கவும், விலங்குகளுக்குத் தீவனம் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப் படுகின்றன. இது சல்ஃப்யூரிக் ஆசிட் மற்றும் ராக் ஃபாஸ்ஃபேட்டின் வேதியல் மாற்றத்தால் தயாரிக்கப்படுகிறது. இதன் செய்முறை மட்டும் கட்டுமான அமைப்பு இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்கு 2,30,000 மெட்ரிக் டன் அளவு இந்த ஃபாஸ்ஃபரிக் ஆசிட் தயாரிக்கப் படுகிறது. இவை டேங்கர் லாரிகள் மூலமாக இந்தியா முழுவதும் மற்றும் அயல்நாடுகளுக்கும் சப்ளை செய்யப் படுகிறது.
2) சல்ஃப்யூரிக் ஆசிட்.
காப்பர் ஸ்மெல்ட்டிங் செய்யும் போது சல்ஃபர் டை-ஆக்ஸைடு வாயு உருவாகிறது. அதுவே வேதியல் மாற்றமடைந்து சல்ஃப்யூரிக் ஆசிடாக உரு மாறுகிறது. இதில் பெரும்பகுதி, ஃபாஸ்ஃபோரிக் ஆசிட் தயாரிக்க உள்ளுக்குள்ளேயே உபயோகப்படுத்தப் படுகிறது. ஒரு சிறு பகுதியே வெளிச் சந்தைக்குச் செல்கிறது.
வெளிச்சந்தையில் விற்கப்படுவது உரங்கள் தயாரிக்கவும், எண்ணை சுத்திகரிப்பிலும், காகித தயாரிப்பிலும், டிட்டர்ஜென்ட் சோப் தயாரிப்பிலும், ஸ்டீல் தயாரிப்பிலும் உபயோகப்படுத்தப் படுகின்றன.
இது ஆண்டுக்கு 12,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
3) ஹைட்ரோ-ஃப்ளூரோ-சிலிசிக் ஆசிட்.
ஃபாஸ்ஃபோரிக் ஆசிட்டை ஆவியாக்கி குளிர வைப்பதில் உருவாவது தான் இது. பெரும்பாலும் இது தண்ணீரை சுத்தப் படுத்த உதவுகிறது. தண்ணீரில் க்ளோரின் கலப்பது போலத்தான் இதுவும். இது ஆண்டுக்கு 10,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப் படுகிறது.
4) ஃபெர்ரோ சாண்ட்.
காப்பர் உற்பத்தி செய்ய பைரோ-மெட்டலர்ஜிக்கல் ப்ராஸஸ் பயன்படுத்தும் போது இந்த ஃபெர்ரோ சாண்ட் கிடைக்கிறது. இது ஆற்று மணலுக்கு ஒரு மாற்றுப் பொருள். கட்டுமானத்திற்கும், சாலை அமைக்கவும் இந்த மணல் உபயோகப் படுத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு 6,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
5) ஃபாஸ்ஃபோ ஜிப்சம்.
தூத்துக்குடியில் உற்பத்தி ஆகும் இது, உலகின் மற்ற இடங்களில் கிடைப்பதை விட தரம் உயர்ந்தது. இது சிமென்ட் உற்பத்தியிலும், செங்கல் மற்றும் பிளாஸ்ட்டர் ஆஃப் பாரிஸ் உற்பத்தியிலும் உபயோகப் படுத்தப்படுகிறது. எண்ணை வித்துக்கள் விளைய வைப்பதற்கு முன் மண்ணைப் பதப்படுத்தவும் இது பயன்படுகிறது. இது ஆண்டுக்கு 10,00,000 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
பின்பு காப்பர் ராடு. இது தான் ஸ்டெர்லைட்டின் முதலும் முக்கியமானதுமான உற்பத்திப் பொருள். இது தொலைத்தொடர்பு வசதிகளுக்கும், மின்சாரக் கடத்தியாகவும், டிரான்ஸ்ஃபார்மர்களிலும், மின்காந்த கடத்திகளிலும் உபயோகிக்கப்படுகின்றன.
இந்தியாவில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் அளவு காப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஸ்டெர்லைட்டின் பங்கு 30% மேல், அதாவது தோராயமாக 50,000 மெட்ரிக் டன்.
நிற்க...!!!
இப்போது விவாதத்திற்கு வருவோம்.
இந்தக் காப்பரையோ, அல்லது காப்பர் உற்பத்தியின் போது கிடைக்கும் உப பொருட்களையோ, அல்லது அந்த உப பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் மற்ற பொருட்களையோ நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தாமல் இருக்கிறோமா?
அதாவது உரங்கள், தீவனம், எண்ணை, காகிதம், டிட்டர்ஜென்ட் சோப்பு, ஸ்ட்டீல், க்ளோரின், கட்டுமானப் பொருட்கள், சாலை, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ், எண்ணை வித்துக்கள், மின்சாரம் மற்றும் மின்கடத்திகள்.
இதில் எங்கு இருந்து வருகிறது கேன்சர்? மேற்சொல்லப்பட்ட ஆசிடுகள் நம் தோலில் நேரடியாகப் பட்டால் கண்டிப்பாகக் காயமோ அரிப்போ ஏற்படும். நாம் பள்ளியில் படிக்கும் போது சயின்ஸ் லாப்-இல் ஏற்படுமே, அது போலத் தான். அதுவும் உள்ளே வேலை பார்ப்பவர்களுக்கு. இவ்வளவு பெரிய நிறுவனம் கண்டிப்பாக அதற்கான பயிற்சிகள் அனைத்தும் தொழிலாளர்களுக்குக் கொடுத்திருப்பார்கள்.
இந்த ஆசிடுகள் எதுவும், யூனியன் கார்பைடு கேஸ் போல் அல்லாமல், காற்றில் கலந்து வேதிவினை புரிபவை அல்ல.
இவற்றில் ஸல்ஃப்யூரிக் ஆசிட்டுக்கு மட்டும் உள்ள குணாதிசயம் என்னவென்றால், அது திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சிக் கொள்ளும் என்பது மட்டுமே. உற்பத்தி செய்த உடனே அதைச் சேமித்து வைக்க முடியாது. அதனால் காற்றின் ஈரப்பதத்தை அது உறிஞ்சிக் கொள்ளலாம். தூத்துக்குடியில் மழை பெய்யாமல் இருக்க இது ஒரு காரணமாக இருக்கலாம்.
மற்றபடி கேன்சர் என்பதெல்லாம் கட்டுக்கதை.
இவ்வளவு பொருட்களை இத்தனை லட்சம் டன் கொள்ளளவு உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தின் வருட வியாபாரம் எவ்வளவு இருக்கும் என்று தோராயமாக உங்கள் மனதில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 22,000 கோடி இவர்களுடைய ஒரு வருட வியாபாரம். தோராயமாக 8,000 கோடி இதனுடைய மொத்த லாபம். ஒரு 5000 கோடி நிகர லாபமாக இருக்கலாம். கடந்த 5 வருடங்களில் 300 கோடி ரூபாயை மாசுக் கட்டுப்பாட்டிற்கு மட்டும் செலவழித்து இருக்கிறார்கள்.
உலக காப்பர் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 3.5%, இதை அதிகப் படுத்தத்தான் ஸ்டெர்லைட் 3300 கோடியில் விரிவாக்கம் செய்யலாம் என்று தீர்மானித்தது. இதன் மூலம் இப்போது இருக்கும் 5000 நேரடி வேலைவாய்ப்பு 9000-த்திற்கும், மறைமுக வேலைவாய்ப்பு 20,000-இல் இருந்து 29,000-த்திற்கும் உயரும் என்பது இந்த நிறுவனத்தின் கணிப்பு.
இங்குதான் நம்முடைய அரசியல்வாதிகள் உள்ளே வருகிறார்கள்.
இவ்வளவு வியாபாரம் நடக்கிறதே, இவ்வளவு லாபம் கிடைக்கிறதே, இன்னும் விரிவாக்கத்திற்கு கோடி கோடியாய் பணம் இருக்கிறதே, இதில் நமக்கு என்ன கிடைக்கும் என்பது தான் இவர்களுடைய குறிக்கோள். நம்முடைய அரசியல்வாதிகளுக்குத்தான் 30% கமிஷன் கொடுக்க வேண்டுமே. இந்தத் தொல்லையினால் சில நிறுவனங்கள் ஆந்திராவில் தொழில் தொடங்கச் சென்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
சும்மா போய்க் கேட்டால் இந்த நிறுவனங்கள் பணம் கொடுக்க மாட்டார்கள் என்பதால், பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, கேன்சர் போன்ற வியாதிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களைத் தூண்டிவிட்டு, ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.
இந்த அறியாமையில் போனதுதான், ஒரு பெண் உட்பட இன்று போன 11 உயிர்களும். இதில் காவல்துறையையோ, மாவட்ட ஆட்சியாளரையோ சொல்லிக் குற்றமில்லை.
நம் அப்பாவி மக்கள் தங்கள் அறியாமையினால் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து பிண அரசியலும் செய்து, தங்களுக்குத் தேவையானதையும் நிறைவேற்றிக் கொண்டு, நமக்காக நீலிக் கண்ணீரும் வடிப்பார்கள்.
நமது மக்கள் அறியாமையில் இருந்து வெளிவந்து சமூகத்தை அனுக வேண்டும். போராட்டத்தால் எல்லாவற்றிலும் ஜெயிக்க முடியாது. .
-------------------------------------------------------------
******************************************************* 
ஸ்டெர்லைட்டிடம் இருந்து ரூ 5000 கோடி
நஷ்ட ஈடு வசூலிக்க வேண்டும்!
ஸ்டெர்லைட் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
ஆலையை மூடுவது தீர்வாகுமா?
கட்டுரையின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
அணு  உலைகளும் அணு மின்சாரமும்  மானுட
வரலாற்றில் புதிய வரவுகள். இரண்டாம்  உலகப்
போருக்குப் பின்னரே அணு மின்சாரம் வந்தது.

ஆனால் மூலத்தாதுவில் இருந்து தாமிரத்தைப்
பிரித்தெடுப்பது  மூவாயிரம் ஆண்டுகளாக
நடந்து கொண்டிருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு
முந்திய நம் முன்னோர்கள் நம்முடன் ஒப்பிடும்
போது காட்டு மிராண்டிகளே. ஆனால் அவர்கள்
மூலத்தாதுவில் இருந்து தாமிரத்தை அழகாகப்
பிரித்தெடுத்தார்கள். மானுட வரலாற்றில்
வெண்கல யுகம் (bronze age) என்று படிக்கிறோம்.
வெண்கலம் என்பது தாமிரமும்  தகரமும்
கலந்து செய்யப்பட ஒரு கூட்டு உலோகம் (alloy).
தாமிர உற்பத்தி என்பது மானுட வரலாற்றை
அடையாளப் படுத்தும் முதன்மைக் காரணியாக
இருந்தது என்பதை வெண்கல யுகம் என்ற பகுப்பு
உணர்த்துகிறது.

ஆக, தாமிர உற்பத்தி என்பது 3000 ஆண்டுத் தொன்மை
மிக்கது.இன்றைய உலகில் பல நாடுகளில் தாமிரம்
பிரித்தெடுக்கப் படுகிறது. சீனா இதில் முதல்
இடத்தில் உள்ளது. 2016, 2017 ஆண்டுகளில் சீனாவின்
தாமிர உற்பத்தி முறையே 19 லட்சம் டன், 18,60,000 டன்
என்பதாக இருந்தது.

தென்னமெரிக்க நாடான சிலியும், ஜப்பானும்
இன்னும் சில நாடுகளும் தாமிர உற்பத்தியில்
முன்னணியில் உள்ளன. இந்தியாவின் தாமிர
உற்பத்தி அண்மைக் காலங்களில் 6 லட்சம் டன்
என்ற அளவில் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குஜராத், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய
மாநிலங்களில் தாமிரம் பிரித்தெடுக்கும் ஆலைகள்
உள்ளன. குஜராத்தில் உள்ள பிர்லா குழுமத்தின்
ஹிண்டால்கோ ஆலையில் தூத்துக்குடியின்
ஸ்டெர்லைட்டை விட. பல மடங்கு அதிகமாக
தாமிரம் எடுக்கப் படுகிறது என்பதை முந்தைய
கட்டுரையில் பார்த்தோம்.

குஜராத்திலோ ஜார்கண்டிலோ ராஜஸ்தானிலோ
தாமிரம் பிரித்தெடுத்தலில் எந்தப் பிரச்சினையும்
இல்லை. காற்றை நீரை மண்ணை சுற்றுச் சூழலை
மாசு படுத்துகிறது என்று எந்தப் புகாரும் இல்லை.
ஆனால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம்
பற்றி மட்டுமே புகார்கள் வந்துள்ளன. இதன் பொருள்
என்ன? சுற்றுச் சூழல் விதிகளையும் மாசுக் கட்டுப்பாடு
விதிகளையும் முறையாகக் கடைப்பிடித்தால்
தாமிர உற்பத்திக்கான தொழில்நுட்பம்
பாதுகாப்பானதே என்பதுதானே!
  
ஆனால் தூத்துக்குடியிலும் அதன் சுற்றுப்புற
கிராமங்களிலும் சுற்றுச்சூழல் மிகக் கடுமையாக
மாசு பட்டுக் கிடக்கிறது என்பதும் மக்கள் நோய்களுக்கு
இலக்காகி இருக்கின்றனர் என்பதும் உண்மை.
இதன் பொருள் என்ன? ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்
சூழல் விதிகளையும் மாசுக் கட்டுப்பாடு விதிகளையும்
கடைப்பிடிக்காமல், சூழலை நச்சுப் படுத்துகிறது 
என்பதுதானே!

ஆக குற்றவாளி யார்? தாமிரம் பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பமா? அல்லது விதிகளைப் பின்பற்றாத
ஸ்டெர்லைட்டா?   ஸ்டெர்லைட்தான் குற்றவாளி.
(அடுத்த பத்தியில் விரிவாகப் பார்ப்போம்)
அப்படியானால், ஸ்டெர்லைட்டின் குற்றத்துக்காக
தாமிர உற்பத்தியே கூடாது, தொழிற்சாலைகளே
கூடாது என்று சொல்லுவது எப்படிச் சரியாகும்?
அது அறிவியலுக்கு எதிரான பிற்போக்கான நிலை
அல்லவா?

மூலத்தாதுவில் இருந்து தாமிரம் பிரித்தெடுத்தல்
பற்றிய பாடம் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில்
வேதியியல் பகுதியில் (chemistry portion) உள்ளது.
வாசகர்கள் அதைப் படிப்பது நல்லது.

தாமிரத் தாதுவில் (copper ore) பல்வேறு வகைகள் உண்டு.
பெரும்பாலும் காப்பர் பைரைட்ஸ் (copper pyrites, CuFeS2)
என்னும்   தாதுவில் இருந்துதான் தாமிரம்
பிரித்தெடுக்கப் படுகிறது. மூலத்தாதுவில் இருந்து
தாமிரத்தைப் ,பிரிக்கும்போது,
1. கந்தகம் (sulphur) 2. பாஸ்வரம் (phosphorous) 3.ஆர்செனிக்
(Arsenic) ஆகிய தனிமங்கள் தாதுவில் இருந்து நீக்கப் பட வேண்டும்.இத்தனிமங்கள் ஆக்சைடுகளாக
(SO2,  P2O5, As2O3)  மாற்றப்பட்டு வெளியேற்றப் படும்.
எஞ்சியிருக்கும் தேவையற்ற பிற பொருட்களும்
நீக்கப்பட்ட பிறகு தனிமமாக உள்ள தாமிரம்
(elemental copper) கிடைக்கும். இவ்வளவுதான் டெக்னாலஜி!
(Copper extractionஐ முழுமையாக விவரிப்பதற்கு இல்லை;
தகுந்த பாடப் புத்தகங்களைப் படிக்கலாம்). 

கந்தக டை ஆக்ஸைடை (SO2) வளிமண்டலத்தில்
கலந்தால், காற்று மாசுபடும். எனவே அதை
ஆலையிலேயே (plant) தக்க வைத்துக் கொண்டு,
அதை கந்தக அமிலமாக (Suphuric acid H2SO4) மாற்றி
விடுவார்கள். தாமிர உற்பத்தி செய்யும் ஒரு
ஆலையில், கூடவே ஏன் அமிலத்தையம்  உற்பத்தி
செய்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை இதுதான்.
அது போலவே பாஸ்பாரிக் அமிலம் உற்பத்தி
செய்யப்படும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை மற்றும்
நீரி என்னும் சூழல் காப்பு அமைப்பின் அறிக்கை
(NEERI = National Environmental Engineering Research Institute)
ஆகியவற்றின் தரவுகளின் படி, தூத்துக்குடியில்
வளிமண்டலத்தில் உள்ள கந்தக டை ஆக்ஸைடின்
அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகப்
பல மடங்கு அதிகமாக இருந்தது என்ற உண்மை
தெரிய வந்தது. இந்த அதிகரித்த அளவுக்கு பல
நிறுவனங்கள் காரணமாக இருக்கக் கூடும்.
என்றாலும் இதில் ஸ்டெர்லைட்டின் பங்கு மிக
அதிகம் என்று உணர காமன் சென்ஸ் போதுமானது.

அதாவது கந்தக டை ஆக்ஸைடை கந்தக அமிலமாக
மாற்றாமல், வளி மண்டலத்தில் திருட்டுத் தனமாக கலந்து விடுகிறது ஸ்டெர்லைட் என்பதை நாம் புரிந்து
கொள்ள முடியும்.

அடுத்து ஆர்செனிக். இது மிகவும் நச்சுத்தன்மை உள்ளது.
மேலும் புற்று நோயை உண்டாக்க வல்லது (toxic and carcinogenic).
பாதுகாப்பாகக் கையாளாமல் போனால் புற்றுநோய்
ஏற்படும்.  ஸ்டெர்லைட்டால்தான் புற்றுநோய்
ஏற்படுகிறது என்று நிரூபிக்க எம்மிடம் தரவுகள்
இல்லை. அதே நேரத்தில், ஸ்டெர்லைட்டாக
இருக்கக்கூடும் என்று கூறுவதற்கு அதிகபட்ச
நிகழ்தகவு (probability) உள்ளது.

ஆக, குற்றவாளி ஸ்டெர்லைட் என்னும் நிறுவனத்தின்
ஆணவமும் அசட்டையும்தான். மாசுக்கட்டுப்பாடு
விதிகளை மதிக்காமல் செயல்பட்டு சூழலை
நச்சுப்படுத்திய ஸ்டெர்லைட்டை சும்மா விட முடியாது.
ஸ்டெர்லைட்டை மூடினாலும், உச்சநீதிமன்றம்
சென்று ஆலை இயங்குவதற்குரிய தீர்ப்பை அவர்கள்
பெற்று விடலாம்.

எனவே ஸ்டெர்லைட்டிடம் சூழலை நச்சுப்
படுத்தியதற்காக  5000 கோடி ரூபாய் நஷ்டஈடு
வாங்க வேண்டும். ஆலையை மூடிவிட்டுத்
தப்பித்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது.   
உயிரிழந்தோருக்கும் காயம் அடைந்தோருக்கும்
தமிழக அரசு தரும் நஷ்ட ஈட்டை ஸ்டெர்லைட்
நிர்வாகத்திடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் என்பது ஒரு அறிவியல் விஷயம்.
(science subject). இதில் வேதியியல் நிபுணர்களின்
கருத்தைக் கேட்ட பிறகே, ஆலையை மூடுவதா
வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட்டை மூடு என்று முழங்குகிறார்
செயல் தலைவர் மதிப்புக்குரிய ஸ்டாலின் அவர்கள்.
இந்த முடிவை அவரும் துரைமுருகனும் சேர்ந்து
எடுக்க இயலாது. செயல் தலைவர் அவர்கள்
கெமிக்கல் என்ஜினியர் அல்ல. அறிவியல்
நிபுணர்களுடன் கலந்து  ஆலோசித்து அவர்களின்
அறிவுரையின் பேரில்தான் இந்த விஷயத்தில்
எல்லா அரசியல் கட்சிகளும் முடிவு எடுக்க
வேண்டும்.

ஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும் என்பதற்கான
காரணங்களை சமூகத்தின் முன் வைக்க வேண்டிய
கடமை, மூட வேண்டும் என்று சொல்லும்
ஒவ்வொருவருக்கும் உள்ளது. மற்றப்படி மழைக்காலத்
தவளைக் கூச்சல்களால் யாருக்கும் பயன் இராது.
மாறாக, அது ஸ்டெரிலைட்டின் தரப்பை
வலுப்படுத்தி விடும்.
************************************************************** 
ஸ்டெர்லைட்டை இழுத்துமூட அரசால் முடியுமா?
கிட்டத்தட்ட இருபது வருடகாலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ...அதன் அதிகாரங்கள்:...செயல்பாடுகள்,,..அது சார்ந்த நடைமுறைகளோடு தொடர்பில் இருந்தவன் என்ற முறையில் எனக்குத்தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன்...
தமிழகத்தைப்பொறுத்தவரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலைகளை மூன்றுவிதமாக பிரித்திருக்கிறது... சிவப்பு , ஆரஞ்சு மற்றும் பச்சை... [ எந்தெந்த தொழில்கள் எந்த பிரிவில் வரும் என்ற பட்டியலுக்கான லிங்கை பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்...]
அதிக‌ப்படியான , சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் ரெட் கேட்டகரியில் வருகின்றன...
ரெட் பிரிவில் வரும் நிறுவனம் ஆரம்பிப்பது முன்பாக , மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இசைவாணை பெறவேண்டும்... அதன்பிறகுதான் அந்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பே வழங்கப்படும்....
முதலில் நீர் மாசுபாட்டை எடுத்துக்கொள்வோம்...
இசைவாணை பெறுவது சுலபமல்ல... முதலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவேண்டும்... வெளியேறும்கழிவுகளைப்பொறுத்து அதில் பலகட்ட அமைப்புகள் உண்டு...ஒவ்வொரு கட்டத்திலும் புகைப்படங்கள் எடுத்து வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகே அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும்...ஒவ்வொரு கட்டத்திலும் டி.இ அல்லது ஜே.இ ஆகியோர் ஆய்வு செய்வர்...
கழிவுநீர் சேகரிக்கப்படும் இடத்தில் இருந்து , சுத்திகரிப்புக்குச்செல்லும் ஒவ்வொருகட்டத்திலும் , ஒவ்வொரு பைப்பிலும் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்படும்...எல்லா மீட்டர்களின் ரீடிங்குகளும் பதிவுசெய்யப்படவேண்டும்...எல்லா ரீடிங்குகளும் ஒருங்கிணைக்கப்ப்பட்டு , டேலி செய்யப்பட வேண்டும்...
அதாவது கழிவு நீர் சுத்திகரிப்பின் ஒவ்வொரு கட்டமும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு , சீரான இடைவெளிகளில் மா.க வாரியத்திடம் ஒப்புதல் பெற்றே ஆகவேண்டும்...
ரீடிங் டேலி செய்வது எப்படி?
நம் ஆலையின் உற்பத்தி ஆகும் பொருள் என்ன... அதற்கு மொத்தம் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகும் என்பதன் அடிப்படையில்தான் இசைவாணை வழங்கப்படும்... அதற்குமேல் நம் உற்பத்தி கொள்ளளவை அதிகரிக்க முடியாது...
ஒரு லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட எடுத்துக்கொள்கிறோம்... முதல் கட்ட சுத்திகரிப்பில் அறுபதாயிரம் லிட்டர் சுத்தம் செய்யப்பட்டு ஆலையின் மறுபயன்பாட்டுக்கு அல்லது வெளியேற்றப்படுகிறது...அதற்கான மீட்டர் ரீடிங் பதிவு செய்யப்படும்...
மீதி நாற்பதாயிரம் லிட்டர் இரண்டாம் கட்ட சுத்திகரிப்புக்குச்செல்கிறது...அதில் இருபத்தைந்தாயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்டு மறுபயன்பாட்டுக்குச்செல்லும்...அந்த மீட்டர் ரீடிங்கும் பதிவாகியிருக்கும்...
மீதமுள்ள பதினைந்தாயிரம் லிட்டர் மூன்றாவது கட்ட சுத்திகரிப்புக்குச்செல்லும்... இதில் பத்தாயிரம் லிட்டர் மறுபயன்பாட்டுக்கு செடுத்துச்செல்லப்படும்... [ இங்கும் மீட்டர் - ரீடிங் இருக்கும்...] மீதி உள்ள ஐந்தாயிரம் லிட்டர் கூழ் போன்ற கரைசல் இறுதியாக உலர்களம் மூலமாகவோ , எவாப்பொரேட்டர் தொழில்நுட்பம் மூலமாகவோ ஆவியாக்கப்படும்... இறுதியாக மிஞ்சும் உப்பு அல்லது உலர்ந்த மண் தனியாக சேமிக்கப்படும்...
இந்த எல்லா மீட்டர்களின் ஆரம்பம் - முடிவு ரீடிங்குகள் தினந்தோறும் பதிவுசெய்யப்பட்டு , பரமாரிக்கப்படவேண்டும்... வாராவாரமோ , அல்லது திடீர் சோதனைக்கு வரும் மா. க. வாரிய பொறியாளர்களிடமோ ஒப்புதல்பெறவேண்டும்... கழிவுநீரில் ஆரம்பித்து , ஒவ்வொரு கட்ட ரீடிங்கும் மற்றதோடு டேலி ஆகவேண்டும்...இல்லாவிட்டால் முறைகேடு நடந்தது உறுதியாகிவிடும்... பெரும் தொழிற்சாலைகளில் இந்த மீட்ட்ர்கள் ஆன்லின் மூலம் இணைக்கப்ட்டு மா.க.வாரியத்தில் இருந்தே கண்காணிக்கும் வசதியும் உண்டு..இவையெல்லாம் போக முறைகேடுகளை கண்காணிக்க பறக்கும் படையும் உண்டு...
[ மிக முக்கியமான விஷயம்... இந்த ஒப்புதல் விவகாரத்தில் கணிசமாக லஞ்சம் விளையாடும்... ]
காற்று மாசு அளவைக்கண்காணிக்கவும் கிட்டத்தட்ட இதேபோன்ற நடைமுறைகள்தான்...
இனி ஸ்டெர்லைட்டுக்கு வருவோம்...
நான் மேலே சொன்ன நடைமுறைகளை அவர்கள் நிச்சயம் பின்பற்றியிருப்பார்கள்... அதாவது முறையான சுத்திகரிப்பு நடைமுறைகளை பின்பற்றினார்களோ இல்லையோ , எல்லாம் பக்காவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்... அதன் ஒவ்வொரு கட்டத்திலும் தூத்துக்குடி மாவட்ட மா.க வாரிய செயற்பொறியாளரின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கும்...
அரசு தடைவிதித்தால் அவர்கள் சும்மா இருக்கப்போவதில்லை... உடனடியாக நீதிமன்றம் செல்வார்கள்...அங்கு செண்டிமென்ட்டெல்லாம் செல்லுபடியாகாது...ஆதாரங்கள் வேண்டும்... இந்த நிமிடம் வரை அவர்கள் சரியாக செயல்பட்டதற்கான எல்லா ஆதாரங்களையும் சமர்ப்பிப்பார்கள்...ஒவ்வொரு கட்டத்திலும் தமிழக அரசு அதிகாரிகளின் ஒப்புதலைப்பெற்றதையும் காட்டுவார்கள்...
அப்போது தமிழக அரசு என்ன செய்யமுடியும்? தவறு நடந்திருக்கிறது என்று ஒப்புக்கொண்டால் , ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தவறு செய்ததை , லஞ்சம் பெற்றுக்கொண்டு கடமை தவறியதை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும்...இல்லாவிட்டால் ஸ்டெர்லைட் செயல்பட நீதிமன்றம் உத்தரவிடும்...
பிடிவாதமாக அந்த ஆலையை மூடியே ஆகவேண்டும் என்று தமிழக அரசு பிடிவாதமாக நின்றால் , வேதாந்தா குழுமத்துக்கு பல ஆயிரம் கோடிகள் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்...சம்பளம் போடவே சிங்கியடிக்கும் மாநில அரசிடம் ஏது அவ்வளவு பணம்..?.
************************************************************************

  

          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக