புதன், 17 ஜூன், 2020

1991இல் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த நேரம்.
ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் (18.04.1991) சென்னை
மெரீனா கடற்கரையில் நடந்த பிரும்மாண்டமான
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதாவும்
ராஜீவ் காந்தியும் கூட்டாகக் கலந்து கொண்டனர்.

ராஜீவ் கொலைக்கு ஒரு மாதம் முன்னதாக நடந்த
கூட்டம் இது.

இதில் சிவராசனுடன் பேரழிவாளன் கலந்து கொண்டார்.
மேலும் நளினி, ஹரிபாபு ஆகியோரும் இவர்களுடன்
அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில்
தன்னுடைய தொழில் ரீதியாக புகைப்படக்காரர்
சுபா சுந்தரம் பங்கேற்றார்.

அவரின் சாட்சியமும்
அவர் எடுத்த புகைப்படங்களும் பேரழிவாளன்,
சிவராசன், நளினி ஆகியோர் ராஜீவ்-ஜெயா கூட்டத்தில்
கலந்து கொண்டதை உறுதிப் படுத்தின.

மேலும்
கொலை ஒத்திகை பார்க்கவே சிவராசனுடன்
இவர்கள் இந்தக் கூட்டத்திற்குச் சென்றனர் என்பது
சாட்சியங்கள் சான்றாதாரங்கள் வாயிலாக
நிரூபிக்கப் பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் தமது உயிருக்கு ஆபத்து என்று
ஜெயலலிதா தொடர்ந்து சொல்லி வந்தார்.

இதன் காரணமாகவே தமக்கு
இசட் ப்ளஸ் பாதுகாப்பு
கோரிப் பெற்றார்.

இதற்கான ஆதாரமாக ஜெயலலிதா
தெரிவித்தது மேற்கூறிய கடற்கரைக் கூட்டத்தில்
கொலைச் சதிகாரர்களான சிவராசன், பேரழிவாளன்,
நளினி ஆகியோர் கலந்து கொண்டதைத்தான்.

இவனா அப்பாவி?

அடப்பாவி
07.05.1991இல் சென்னை நந்தனத்தில் வி.பி.சிங் கூட்டம்!

வி.பி.சிங் பங்கேற்ற இந்தக் கூட்டத்திலும் சிவராசனும்
பேரழிவாளனும் பங்கேற்றனர். மேலும் நளினி, தாணு,
சுபா ஆகிய மூன்று பெண்களும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தாணுவால் வி.பி.சிங்கை நெருங்க
முடிந்தது. இவை அனைத்துக்கும் புகைப்பட
ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன.

மேலும் 20.05.1991 அன்று, கொலைக்கு ஒரு நாள் முந்தி,
நளினியின் தாயார் நர்ஸ் பத்மாவின் வீட்டில் வைத்து
கோடக் கலர் பிலிம் ரோல் ஒன்றை ஹரிபாபுவிடம்
வழங்கினார் பேரழிவாளன்.

இவ்வாறு கொலைச்
சதியில் பல்வேறு இடங்களில் பேரழிவாளன்
தொடர்பு கொண்டிருப்பதும் பங்கேற்றுள்ளதும்
சாட்சியங்களால் நிரூபிக்கப் பட்டுள்ளன.

மேலும் இவை அனைத்தையும் பேரழிவாளனின்
வழக்கறிஞர் சீனியர் அட்வகேட்
திரு நடராசன் அவர்கள்
தம்முடைய வாதத்தில் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
பேரழிவாளன் தரப்பில் இது மறுக்கப் படவில்லை.

இவை அனைத்தும் நீதியரசர் வாத்வா அவர்களின்
தீர்ப்பில் சொல்லப் பட்டிருக்கின்றன.

இதோ
நீதியரசர் வாத்வா தீர்ப்பு வாசகங்கள்:

On 18.4.1991 Nalini (A-1), Murugan (A-3), Arivu (A-18) and
Suba Sundaram (A-22) and deceased accused Haribabu
attended the meeting of Rajiv Gandhi and Jayalalitha at Marina
Beach, Madras.

On the night between May 7-8, 1991 Nalini (A-1), Murugan (A3),
Arivu (A-18) and deceased accused Sivarasan, Subha, Dhanu and
Haribabu attended the meeting of former Prime Minister V.P. Singh
at Nandanam, Madras, where they conducted a 'dry run' by securing
access to V.P. Singh for garlanding him.

Arivu (A-18) gave a Kodak colour film roll to Haribabu. This Kodak
colour film was to be used by Haribabu to take pictures of the
scene of crime.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக