ஞாயிறு, 28 ஜூன், 2020

சமஸ்கிருதம் அறிந்தவர்கள் பொருள் தெரிந்துதான்
பெயர் வைக்கிறார்கள். தெரிந்தவர் ஒருவர்
தன் மகளுக்கு வாஸ்தவ்யா என்று பெயர் வைத்தார்.
வாஸ்தவம் = உண்மை. அவர் சமஸ்கிருதம் அறிந்தவர்.

சம்ஸ்கிருத அறிவு இல்லாமல் இயந்திர கதியில்
பெயர் வைப்பவர்களும் இருக்கிறார்கள்.

இது மரபு சார்ந்தது. தமிழில் பெண்பால் பெயர்கள்
இகரம் மற்றும் ஐகாரத்தில் முடிவடையும்.
கண்ணகி, மாதவி, பூங்கொடி என்பனவற்றைக் கருதுக.
சமஸ்கிருதத்தில் ஆகாரம் மற்றும் ஐகாரத்தில்
பெண்பால் பெயர்கள் முடிவடைகின்றன.
மெய்யெழுத்துக்களிலும் முடியும். இது
சமஸ்கிருதத்தின் மொழிமரபு சார்ந்தது.
கங்கா, யமுனா, உமா, மாலா, லதா  ஆகிய
ஆகாரவீற்றுப் பெயர்கள், ஐகாரவீற்றுப் பெயர்கள்,
மெய்யீற்றுப் பெயர்கள் ஆகியவற்றுடன் இகர ஈற்றுப்
பெயர்களும் சமஸ்கிருதத்தில் உண்டு.      


ஆங்கிலத்தில் மொத்த எழுத்துக்களின்
எண்ணிக்கை குறைவு (26) என்பதால்
Capital lettersஐப் பயன்படுத்த நேர்கிறது.
தமிழில் அதற்கான தேவை அறவே இல்லை.

ஆங்கிலத்தில் பெயர்களைப் பொறுத்து the எனப்படும்
ariticleஐ உட்செலுத்தல் வேண்டும். The Chairman,
The Head Master, The Chief Minister என்றெல்லாம் the
இல்லாமல் அங்கே எழுத முடியாது. தமிழில்
இவ்வாறு தீயை வைக்க வேண்டியதில்லை.

மொழிகளுக்கென்று பொதுத்தன்மையும் உண்டு.
தனித் தன்மையும் உண்டு. அறிந்து நடப்போம். 


மும்மதங்களின் மூட நம்பிக்கைகள்!
--------------------------------------------------------
இந்து கிறித்துவ இஸ்லாமிய மதங்களாலோ
அம்மதங்களின் கடவுள்களாலோ கொரோனாவை
எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. முறையான
மருத்துவ சிகிச்சை மூலமே கொரானா குணமாகும்.

மதத் தலைவர்கள் யாரும் மருத்துவர்கள் அல்லர்.
அவர்கள் தங்களை மருத்துவர்களாகக் கூறி

ஈவேரா ஒரு தற்குறி; கல்வி அறிவற்றவர்.
எனவே அவருடைய கருத்துக்கு எந்த விதமான
பெறுமதியும் கிடையாது. வீட்டு வேலைக்காரியிடம்
கூட ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று சொன்ன
அடி முட்டாளை வைத்துக் கொண்டு என்ன
செய்ய முடியும்?



  .


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக