சனி, 27 ஜூன், 2020

காலில் விழுந்து மன்றாடியும் ஜாமீன் கிடைக்காததால்
அனலில் இட்ட புழுவாகத் துடிக்கும் போலிப் போராளி!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
ஏற்கனவே ஒரு போலிப் போராளியின் இழிந்த நடத்தை
பற்றிப் பார்த்தோம். அந்தப் போலிப்  போராளி ஒரு
இஸ்லாமியப் பெண்; மாணவி; பெயர் சபூரா சர்கர்.
அமித்ஷாவின் காலில் விழுந்து ஜாமீன் பெற்றவர்.

இப்போது பார்க்கப் போவது இன்னொரு மானங்கெட்ட
போலிப் போராளி. இவன் வயது 23 மட்டுமே. இவன் ஒரு
இஸ்லாமிய இளைஞன். இவன் பெயர் ஷாருக் பதன்
(Shahrukh Pathan). இவன் ஒரு குட்டி முதலாளித்துவ அற்பன்.
விளம்பர மோகி.

2020 மார்ச் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப் பட்டான் இவன். இன்று வரை ஜாமீன்
கிடைக்கவில்லை.கைதானது முதல்  அனேகமாக
தினமும் ஜாமீன் மனு போட்டுக் கொண்டுதான்
இருக்கிறான். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம்
இவனுக்கு ஜாமீன் தர உறுதியாக மறுத்து விட்டது.

இன்றோடு ( ஜூன் 27, 2020) சிறைக்குப் போய் 117 நாட்கள்
ஆகி விட்டன. ஜாமீன் கிடைக்காமல் அனலில் இட்ட
புழுவாகத் துடித்துக் கொண்டு இருக்கிறான்.

முந்தாநாள் ஜூன் 25 அன்று இவனுடைய ஜாமீன்
மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஜாமீன்
தர மறுத்தது. அன்று விளமபர மோகத்தில் தன்னை
எல்லோரும் ஹீரோவாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக
துப்பாக்கியை எடுத்துச் சுட்ட இந்த நபர் இன்று
சட்டத்தைச் சந்திக்கட்டும். எனவே ஜாமீன் தர
முடியாது என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம்
(anti CAA protests) நடந்து கொண்டிருந்த நேரம். புழுவினும்
இழிந்த ஷாருக் பதன் பிப்ரவரி 24, 2020 அன்று காலை
11 மணியளவில் கூட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த
போலீஸ் ஏட்டு தீபக் தாக்கியா என்பவரைத்
துப்பாக்கியைக்  காட்டி மிரட்டினான். பின்னர் வானத்தை
நோக்கிச் சுட்டு விட்டு ஓடி விட்டான்.

இவன் யார் என்றோ இவன் பெயர் என்னவென்றோ
அப்போது தெரியாது. எனவே ஊடகங்கள் அவனை
மர்ம மனிதன் என்றே குறிப்பிட்டன.

ஆனால் அன்று மாலையே பாகிஸ்தானின் கட்டளைப்படி
செயல்படும் ஒரு இணையதளம் ஷாருக் பதனை
பாஜக கட்சிக்காரன் என்று பொய்ச் செய்தி
வெளியிட்டது. இந்தப் பொய்ச் செய்தி நாடு முழுவதும்
காட்டுத் தீயாகப் பரவியது.

புழுவினும் இழிந்த ஷாருக் பதனோ தலைமறைவாகி
விட்டான். பெப்ரவரி 24ல் துப்பாக்கியால் சுட்டுப்
பயமுறுத்தி விட்டு தலைமறைவாகி விட்ட இவனை
பல நாட்கள் கழித்து உபியில் வைத்து மார்ச்
மாதத்தில்தான் போலிஸ் பிடித்தது. அது முதல் திஹாரில்
இருந்து வருகிறான்.

இவனுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளன.
குறைந்தது மூன்றாண்டுகளாவது கடுங்காவல் சிறை
இவனுக்கு கிடைக்கும்.

இவனெல்லாம் ஹாய் ஜாலி என்று போராட்டத்துக்கு
வந்தவன். இன்று சிறையில் அடைத்ததுமே நரக
வேதனையை அனுபவித்து வருகிறான்.இவனைத்
தூண்டி விட்டவன் ஜாலியாக இருக்கிறான்.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பது
போன்றது போலிப் போராளிகலின் கதை. வீராவேசம்
பேசிய இஸ்லாமியப் பெண் சபுரா சர்கர் கடைசியில்
தனது வக்கீல் மூலமாக அமித்ஷாவின் காலில் விழுந்து
கெஞ்சி ஜாமீன் பெற்றதை நாம் ஏற்கனவே
பார்த்தோம்.
 
புழுவினும் இழிந்த போலிப் போராளிகள்
சபூரா சர்கர், ஷாருக் பதன்
ஆகியோரின் முகத்தில் காரி உமிழ்வோம்!   
 
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
***********************************************************        
   



         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக