வியாழன், 29 ஜூன், 2017

தினமலர்க்காரன் என்னிடம் மன்னிப்பு கேட்டான்!
பார்ப்பன மலத்தைச் சுமந்து திரிந்த 
பார்ப்பன எதிர்ப்பு பேசும் போலிப் போராளிகள்!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
1) சூத்திரப் பயல்களுக்கும் பஞ்சமப் பயல்களுக்கும்
படிப்பு வராது என்றும், நீட் தேர்வில், ஒட்டு மொத்த
இந்தியாவிலும் முற்பட்ட வகுப்பினர் மட்டுமே
89 சதம் தேர்ச்சி பெற்றனர் என்றும் SC, ST, OBC
பிரிவினர் வெறும் 11 சதம் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்
என்றும் அப்பட்டமான ஒரு பொய்யை எழுதினான்
தினமலர்க்காரன். (தினமலர் 24 ஜூன் 2017)

2) மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார்
பெரியார். ஆனால், மானமும் அறிவும் இல்லாத
பல சூத்திர பஞ்சமர்கள், தினமலரின் இந்தப்
பொய்யை சமூகத்தில் தீவிரமாகப் பரப்பினர்.

3) நான் தினமலர் படிப்பதில்லை. இந்தச் செய்தி என்
கவனத்திற்குக் கொண்டுவரப் பட்ட அந்த நிமிடமே
இது பொய் என்று அடித்துச் சொன்னேன். சொன்னது
மட்டுமின்றி நிரூபிக்கவும் செய்தேன். ஓரிரு நாட்களுக்கு
முன்பு எழுதப்பட்ட என் கட்டுரையைப் படிக்கவும்.

4) தொடர்ந்து தினமலரைத் தொடர்பு கொண்டு,
அவர்கள் எழுதிய பொய்யைத் தோலுரித்தேன்.
கேள்வி கேட்டு விளக்கம் பெற்றனர். CBSE NEET
இணையதளத்தில்  உள்ள விவரத்தை தவறாகப்
புரிந்து கொண்டு எழுதியதாகக் கூறி என்னிடம்
மன்னிப்பும் கேட்டனர்.

5) பார்ப்பன எதிர்ப்புப் போராளிகள்(?!) என்ற
பெயரில் பலர் சமூகத்தில் வலம் வருகின்றனர்.
பலர்  அவர்களை ஆதரித்தும் வருகின்றனர்.
இந்த SO CALLED பார்ப்பன எதிர்ப்புப் போராளிகள்
எவரும் தினமலரின் இந்த அநியாயத்தைத்
தட்டிக் கேட்கவில்லை. பலரும் தட்டிக் கேட்டு
இருந்தால், தினமலர் மன்னிப்பு கேட்டிருக்கும்
அல்லவா?

6) மொத்தத் தமிழ்நாட்டிலும் நான் ஒருவன் மட்டுமே
தினமலரின் பொய்யை முறியடித்தேன். வேறு
எவரும் முன்வரவில்லை. ஒருவருக்கும் சுரணை
இல்லை.

7) உப்புப்பெறாத நாராயணன், ரிட்டயர்டு கோமாளியான 
நடிகர் எஸ் வீ சேகருடன், மகா அற்பமான
விஷயத்தில் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கும்
SO CALLED போராளிகள், சமூகத்தில் சக்தி மிக்க
தாக்கத்தை ஏற்படுத்தும் தினமலரின் பொய்ச்
செய்தியை அம்பலப்படுத்த முன்வரவில்லை.

8) இங்கு மீண்டும் பெரியார் சொன்னதை நினைவு
படுத்துங்கள். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு
என்றார் பெரியார். மானம், அறிவு என்ற இரண்டு
விஷயங்களைச் சொன்னார் பெரியார். அறிவு
இருந்தால் மட்டுமே தினமலரின் பொய்யை
பொய் என்று உணர முடியும். அதை முறியடிக்க
முடியும்.

9) சூத்திர பஞ்சம மக்கள்தொகை  முழுவதும்
தாழ்வு மனப்பான்மையில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்தத் தாழ்வு மனப்பான்மை காரணமாக,
தினமலரின் செய்தியை அப்படியே இந்தக்
கூட்டம் நம்பி விடுகிறது. தினமலர் சொன்னதை
சந்தேகப்பட வேண்டும் என்று கூட இவர்களுக்குத்
தோன்றுவதில்லை.

10) சோகத்திலும் பெரிய சோகம் என்னவென்றால்,
OBC சங்கம், SCST சங்கம் என்று சங்கம்  நடத்தும்
பொறுப்பாளர்கள் கூட, தினமலரின் இந்தப்
பொய்யை உணராமல், அதை  உண்மை என்று
நம்பி, அதை வேகமாகப் பரப்பியதுதான்.

11) தினமலரின் இந்தப் பொய்யை எந்தப்
பார்ப்பானும் பரப்பவில்லை. ஏனெனில், இந்தப்
பொய்யை எந்தப் பார்ப்பானும் நம்பவில்லை.
இது தினமலர் கிளப்பி விடுகிற பொய் என்று
ஒவ்வொரு பார்ப்பானுக்கும்  நன்கு தெரியும்.
அட்மிஷனில் OBC மாணவர்கள், பொதுப்பிரிவுக்கான
இடங்களைத் தட்டிச் சென்று விடுவதை
பார்ப்பனர்கள் அறிவார்கள்.

12) ஆக, பொய்யை எழுதியவன் பார்ப்பான் (தினமலர்)
அதைப் பரப்பியவன் சூத்திரன்.

13) பொய்யை எழுதிய தினமலர் பார்ப்பான்
நியூட்டன் அறிவியல் மன்றத்திடம் மன்னிப்புக்
கேட்டு விட்டான். இனி பொய்யைப் பரப்பிய
சூத்திரனும் நியூட்டன் அறிவியல் மன்றத்திடம்
மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதானே நேர்மை!
இல்லையேல் பார்ப்பன அடிவருடி என்றுதானே
அர்த்தம்!   

14) அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக